HolyIndia.Org

திருவதிகை ஆலய தேவாரம்

திருவதிகை ஆலயம்
1-46-493:
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக் 
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம் 
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை 
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. 

1-46-494:
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக் 
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச் 
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ 
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே. 

1-46-495:
ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப் 
பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான் 
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள் 
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே. 

1-46-496:
எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி 
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப் 
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள் 
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. 

1-46-497:
கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் 
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள் 
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ 
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. 

1-46-498:
துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி 
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி 
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள் 
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. 

1-46-499:
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி 
பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக் 
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம் 
வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே. 

1-46-500:
கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட 
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள் 
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி 
வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே. 

1-46-501:
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார் 
பொடியாடு மார்பானைப் புரிநு லுடையானைக் 
கடியார் கழுநீலம் மலரு மதிகையுள் 
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. 

1-46-502:
அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை 
சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள் 
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி 
விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே. 

1-46-503:
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன் 
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச் 
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை 
வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே. 

4-1-4159:
கூற்றாயின வாறுவி லக்ககிலீர் 
கொடுமைபல செய்தன நானறியேன் 
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் 
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் 
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 
குடரோடு துடக்கி முடக்கியிட 
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

4-1-4160:
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் 
நினையாதொரு போதும் இருந்தறியேன் 
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் 
வயிற்றோடு துடக்கி முடக்கியிட 
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை 
நணுகாமல் துரந்து கரந்துமிடீர் 
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

4-1-4161:
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் 
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் 
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் 
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் 
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் 
பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் 
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மனே. 

4-1-4162:
முன்னம்மடி யேன்அறி யாமையினான் 
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் 
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் 
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் 
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ 
தலையாயவர் தங்கட னாவதுதான் 
அன்னநடை யார்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

4-1-4163:
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் 
கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி 
நீத்தாய கயம்புக நுக்கியிட 
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் 
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் 
வயிற்றோடு துடக்கி முடக்கியிட 
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

4-1-4164:
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் 
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் 
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் 
உன்னாமம் என்னாவின் மறந்தறியேன் 
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் 
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் 
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

4-1-4165:
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் 
ஒருவர்தலை காவலி லாமையினல் 
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் 
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் 
பயந்தேயென் வயிற்றின கம்படியே 
பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான் 
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னாத்துறை அம்மானே. 

4-1-4166:
வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன் 
வஞ்சம்மன மொன்று மிலாமையினாற் 
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் 
சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் 
கலித்தேயென் வயிற்றி னகம்படியே 
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன 
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

4-1-4167:
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் 
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் 
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை 
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர் 
என்போலிக ளும்மை இனித்தெளியார் 
அடியார்படு வதிது வேயாகில் 
அன்பேஅமை யும்மதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

4-1-4168:
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் 
புறங்காடரங் காநட மாடவல்லாய் 
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் 
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் 
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் 
என்வேதனை யான விலக்கியிடாய் 
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

4-2-4169:
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் 
சுடர்த் திங்கட் சூளாமணியும் 
வண்ண உரிவை யுடையும் 
வளரும் பவள நிறமும் 
அண்ணல் அரண்முர ணேறும் 
அகலம் வளாய அரவும் 
திண்ணன் கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-2-4170:
பூண்டதோர் கேழல் எயிறும் 
பொன்றிகழ் ஆமை புரள 
நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து 
நிலாக்கதிர் போலவெண் ணூலுங் 
காண்டகு புள்ளின் சிறகுங் 
கலந்தகட் டங்கக் கொடியும் 
ஈண்டு கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-2-4171:
ஒத்த வடத்திள நாகம் 
உருத்திர பட்ட மிரண்டும் 
முத்து வடக்கண் டிகையும் 
முளைத்தெழு மூவிலை வேலுஞ் 
மூசித்த வடமும் அதிகைச் 
சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து 
தத்துங் கெடிப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 
(மூ) சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது. 

4-2-4172:
மடமான் மறிபொற் கலையும் 
மழுபாம் பொருகையில் வீணை 
குடமால் வரைய திண்டோ ளுங் 
குனிசிலைக் கூத்தின் பயில்வும் 
இடமால் தழுவிய பாகம் 
இருநில னேற்ற சுவடுந் 
தடமார் கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-2-4173:
பலபல காமத்த ராகிப் 
பதைத்தெழு வார்மனத் துள்ளே 
கலமலக் கிட்டுத் திரியுங் 
கணபதி யென்னுங் களிறும் 
வலமேந் திரண்டு சுடரும் 
வான்கயி லாய மலையும் 
நலமார் கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதென்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-2-4174:
கரந்தன கொள்ளி விளக்குங் 
கறங்கு துடியின் முழக்கும் 
பரந்த பதினெண் கணமும் 
பயின்றறி யாதன பாட்டும் 
அரங்கிடை நுலறி வாளர் 
அறியப் படாததோர் கூத்தும் 
நிரந்த கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-2-4175:
கொலைவரி வேங்கை அதளுங் 
குலவோ டிலங்குபொற் றோடும் 
விலைபெறு சங்கக் குழையும் 
விலையில் கபாலக் கலனும் 
மலைமகள் கைக்கொண்ட மார்பும் 
மணியார்ந் திலங்கு மிடறும் 
உலவு கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-2-4176:
ஆடல் புரிந்த நிலையும் 
அரையில் அசைத்த அரவும் 
பாடல் பயின்ற பல்பூதம் 
பல்லா யிரங்கொள் கருவி 
நாடற் கரியதோர் கூத்தும் 
நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து 
ஓடுங் கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-2-4177:
சூழு மரவத் துகிலுந் 
துகில்கிழி கோவணக் கீளும் 
யாழின் மொழியவள் அஞ்ச 
அஞ்சா தருவரை போன்ற 
வேழ முரித்த நிலையும் 
விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து 
தாழுங் கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-2-4178:
நரம்பெழு கைகள் பிடித்து 
நங்கை நடுங்க மலையை 
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான் 
ஒன்பதும் ஒன்றும் அலற 
வரங்கள் கொடுத்தருள் செய்வான் 
வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து 
நிரம்பு கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 

4-10-4252:
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர் 
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர் 
திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன் 
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. 

4-10-4253:
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு 
கூறினர் கூறினர் வேதம் அங்கமும் 
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங் 
கீறின வுடையினர் கெடில வாணரே. 

4-10-4254:
விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ 
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப் 
படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல் 
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே. 

4-10-4255:
விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர் 
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார் 
செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர் 
கெழுமணி அரவினர் கெடில வாணரே. 

4-10-4256:
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை 
தழுவின கழுவுவர் பவள மேனியர் 
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக் 
கெழுவின யோகினர் கெடில வாணரே. 

4-10-4257:
அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும் 
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை 
நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக் 
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே. 

4-10-4258:
கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந் 
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர் 
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள் 
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே. 

4-10-4259:
கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் 
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் 
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே 
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே. 

4-10-4260:
வெறியுறு விரிசடை புரள வீசியோர் 
பொறியுறு புலியுரி யரைய தாகவும் 
நெறியுறு குழலுமை பாக மாகவுங் 
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே. 

4-10-4261:
பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத் 
தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார் 
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக் 
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே. 

4-24-4397:
இரும்புகொப் பளித்த யானை 
ஈருரி போர்த்த ஈசன் 
கரும்புகொப் பளித்த இன்சொற் 
காரிகை பாக மாகச் 
சுரும்புகொப் பளித்த கங்கைத் 
துவலைநீர் சடையி லேற்ற 
அரும்புகொப் பளித்த சென்னி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-24-4398:
கொம்புகொப் பளித்த திங்கட் 
கோணல்வெண் பிறையுஞ் சூடி 
வம்புகொப் பளித்த கொன்றை 
வளர்சடை மேலும் வைத்துச் 
செம்புகொப் பளித்த மூன்று 
மதிலுடன் சுருங்க வாங்கி 
அம்புகொப் பளிக்க எய்தார் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-24-4399:
விடையுங்கொப் பளித்த பாதம் 
விண்ணவர் பரவி யேத்தச் 
சடையுங்கொப் பளித்த திங்கட் 
சாந்தவெண் ணீறு பூசி 
உடையுங்கொப் பளித்த நாகம் 
உள்குவார் உள்ளத் தென்றும் 
அடையுங்கொப் பளித்த சீரார் 
அதிகைவீ ரட்ட னாறே. 

4-24-4400:
கறையுங்கொப் பளித்த கண்டர் 
காமவேள் உருவம் மங்க 
இறையுங்கொப் பளித்த கண்ணார் 
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் 
மறையுங்கொப் பளித்த நாவர் 
வண்டுண்டு பாடுங் கொன்றை 
அறையுங்கொப் பளித்த சென்னி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-24-4401:
நீறுகொப் பளித்த மார்பர் 
நிழல்திகழ் மழுவொன் றேந்திக் 
கூறுகொப் பளித்த கோதை 
கோல்வளை மாதோர் பாகம் 
ஏறுகொப் பளித்த பாதம் 
இமையவர் பரவி யேத்த 
ஆறுகொப் பளித்த சென்னி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-24-4402:
வணங்குகொப் பளித்த பாதம் 
வானவர் பரவி யேத்தப் 
பிணங்குகொப் பளித்த சென்னிச் 
சடையுடைப் பெருமை யண்ணல் 
சுணங்குகொப் பளித்த கொங்கைச் 
சுரிகுழல் பாக மாக 
அணங்குகொப் பளித்த மேனி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-24-4403:
சூலங்கொப் பளித்த கையர் 
சுடர்விடு மழுவாள் வீசி 
நுலுங்கொப் பளித்த மார்பில் 
நுண்பொறி யரவஞ் சேர்த்தி 
மாலுங்கொப் பளித்த பாகர் 
வண்டுபண் பாடுங் கொன்றை 
ஆலங்கொப் பளித்த கண்டத் 
ததிகைவீ ரட்ட னாறே. 

4-24-4404:
நாகங்கொப் பளித்த கையர் 
நான்மறை யாய பாடி 
மேகங்கொப் பளித்த திங்கள் 
விரிசடை மேலும் வைத்துப் 
பாகங்கொப் பளித்த மாதர் 
பண்ணுடன் பாடி யாட 
ஆகங்கொப் பளித்த தோளார் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-24-4405:
பரவுகொப் பளித்த பாடல் 
பண்ணுடன் பத்தர் ஏத்த 
விரவுகொப் பளித்த கங்கை 
விரிசடை மேவ வைத்து 
இரவுகொப் பளித்த கண்டர் 
ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார் 
அரவுகொப் பளித்த கையர் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-24-4406:
தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் 
துடியிடைப் பரவை யல்குற் 
கொண்டைகொப் பளித்த கோதைக் 
கோல்வளை பாக மாக 
வண்டுகொப் பளித்த தீந்தேன் 
வரிக்கயல் பருகி மாந்தக் 
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் 
கெடிலவீ ரட்ட னாரே. 

4-25-4407:
வெண்ணிலா மதியந் தன்னை 
விரிசடை மேவ வைத்து 
உண்ணிலாப் புகுந்து நின்றங் 
குணர்வினுக் குணரக் கூறி 
விண்ணிலார் மீயச் சூரர் 
வேண்டுவார் வேண்டு வார்க்கே 
அண்ணியார் பெரிதுஞ் சேயார் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4408:
பாடினார் மறைகள் நான்கும் 
பாயிருள் புகுந்தென் உள்ளங் 
கூடினார் கூட லால 
வாயிலார் நல்ல கொன்றை 
சூடினார் சூடல் மேவிச் 
சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ 
றாடினார் ஆடல் மேவி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4409:
ஊனையே கழிக்க வேண்டில் 
உணர்மின்கள் உள்ளத் துள்ளே 
தேனைய மலர்கள் கொண்டு 
சிந்தையுட் சிந்திக் கின்ற 
ஏனைய பலவு மாகி 
இமையவர் ஏத்த நின்று 
ஆனையின் உரிவை போர்த்தார் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4410:
துருத்தியாங் குரம்பை தன்னில் 
தொண்ணூற்றங் கறுவர் நின்று 
விருத்திதான் தருக வென்று 
வேதனை பலவுஞ் செய்ய 
வருத்தியால் வல்ல வாறு 
வந்துவந் தடைய நின்ற 
அருத்தியார்க் கன்பர் போலும் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4411:
பத்தியால் ஏத்தி நின்று 
பணிபவர் நெஞ்சத் துள்ளார் 
துத்திஐந் தலைய நாகஞ் 
சூழ்சடை முடிமேல் வைத்து 
உத்தர மலையர் பாவை 
உமையவள் நடுங்க அன்று 
அத்தியின் உரிவை போர்த்தார் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4412:
வரிமுரி பாடி யென்றும் 
வல்லவா றடைந்து நெஞ்சே 
கரியுரி மூட வல்ல 
கடவுளைக் காலத் தாலே 
சுரிபுரி விரிகு ழலாள் 
துடியிடைப் பரவை யல்குல் 
அரிவையோர் பாகர் போலும் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4413:
நீதியால் நினைசெய் நெஞ்சே 
நிமலனை நித்த மாகப் 
பாதியாம் உமைதன் னோடும் 
பாகமாய் நின்ற எந்தை 
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் 
சுண்ணவெண் ணீற தாடி 
ஆதியும் ஈறு மானார் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4414:
எல்லியும் பகலு மெல்லாந் 
துஞ்சுவேற் கொருவர் வந்து 
புல்லிய மனத்துக் கோயில் 
புக்கனர் காம னென்னும் 
வில்லிஐங் கணையி னானை 
வெந்துக நோக்கி யிட்டார் 
அல்லியம் பழன வேலி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4415:
ஒன்றவே யுணர்தி ராகில் 
ஓங்காரத் தொருவ னாகும் 
வென்றஐம் புலன்கள் தம்மை 
விலக்குதற் குரியீ ரெல்லாம் 
நன்றவன் நார ணனும் 
நான்முகன் நாடிக் காண்குற் 
றன்றவர்க் கரியர் போலும் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-25-4416:
தடக்கையால் எடுத்து வைத்துத் 
தடவரை குலுங்க ஆர்த்துக் 
கிடக்கையால் இடர்க ளோங்கக் 
கிளர்மணி முடிகள் சாய 
முடக்கினார் திருவி ரலான் 
முருகமர் கோதை பாகத் 
தடக்கினார் என்னை யாளும் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4417:
நம்பனே எங்கள் கோவே 
நாதனே ஆதி மூர்த்தி 
பங்கனே பரம யோகி 
என்றென்றே பரவி நாளுஞ் 
செம்பொனே பவளக் குன்றே 
திகழ்மலர்ப் பாதங் காண்பான் 
அன்பனே அலந்து போனேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4418:
பொய்யினால் மிடைந்த போர்வை 
புரைபுரை அழுகி வீழ 
மெய்யனாய் வாழ மாட்டேன் 
வேண்டிற்றொன் றைவர் வேண்டார் 
செய்யதா மரைகள் அன்ன 
சேவடி இரண்டுங் காண்பான் 
ஐயநான் அலந்து போனேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4419:
நீதியால் வாழ மாட்டேன் 
நித்தலுந் தூயே னல்லேன் 
ஓதியும் உணர மாட்டேன் 
உன்னையுள் வைக்க மாட்டேன் 
சோதியே சுடரே உன்றன் 
தூமலர்ப் பாதங் காண்பான் 
ஆதியே அலந்து போனேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4420:
தெருளுமா தெருள மாட்டேன் 
தீவினைச் சுற்ற மென்னும் 
பொருளுளே அழுந்தி நாளும் 
போவதோர் நெறியுங் காணேன் 
இருளுமா மணிகண் டாநின் 
இணையடி இரண்டுங் காண்பான் 
அருளுமா றருள வேண்டும் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4421:
அஞ்சினால் இயற்றப் பட்ட 
ஆக்கைபெற் றதனுள் வாழும் 
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் 
குழிதரும் ஆத னேனை 
அஞ்சினால் உய்க்கும் வண்ணங் 
காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன் 
அஞ்சினால் பொலிந்த சென்னி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4422:
உறுகயி று{சல் போல 
ஒன்றுவிட் டொன்று பற்றி 
மறுகயி று{சல் போல 
வந்துவந் துலவு நெஞ்சம் 
பெறுகயி று{சல் போலப் 
பிறைபுல்கு சடையாய் பாதத் 
தறுகயி று{ச லானேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4423:
கழித்திலேன் காம வெந்நோய் 
காதன்மை என்னும் பாசம் 
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி 
உணர்வெனும் இமைதி றந்து 
விழித்திலேன் வெளிறு தோன்ற 
வினையெனுஞ் சரக்குக் கொண்டேன் 
அழித்திலேன் அயர்த்துப் போனேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4424:
மன்றத்துப் புன்னை போல 
மரம்படு துயர மெய்தி 
ஒன்றினால் உணர மாட்டேன் 
உன்னையுள் வைக்க மாட்டேன் 
கன்றிய காலன் வந்து 
கருக்குழி விழுப்ப தற்கே 
அன்றினான் அலமந் திட்டேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4425:
பிணிவிடா ஆக்கை பெற்றேன் 
பெற்றமொன் றேறு வானே 
பணிவிடா இடும்பை யென்னும் 
பாசனத் தழுந்து கின்றேன் 
துணிவிலேன் தூய னல்லேன் 
தூமலர்ப் பாதங் காண்பான் 
அணியனாய் அறிய மாட்டேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-26-4426:
திருவினாள் கொழுந னாருந் 
திசைமுக முடைய கோவும் 
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் 
இணையடி காண மாட்டா 
ஒருவனே எம்பி ரானே 
உன்திருப் பாதங் கண்பான் 
அருவனே அருள வேண்டும் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-27-4427:
மடக்கினார் புலியின் தோலை 
மாமணி நாகங் கச்சா 
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் 
மொய்சடைக் கற்றை தன்மேல் 
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் 
துடியிடைப் பரவை யல்குல் 
அடக்கினார் கெடில வேலி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-27-4428:
சூடினார் கங்கை யாளைச் 
சூடிய துழனி கேட்டங் 
கூடினாள் நங்கை யாளும் 
ஊடலை ஒழிக்க வேண்டிப் 
பாடினார் சாம வேதம் 
பாடிய பாணி யாலே 
ஆடினார் கெடில வேலி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-27-4429:
கொம்பினார் குழைத்த வேனற் 
கோமகன் கோல நீர்மை 
நம்பினார் காண லாகா 
வகையதோர் நடலை செய்தார் 
வெம்பினார் மதில்கள் மூன்றும் 
வில்லிடை எரித்து வீழ்த்த 
அம்பினார் கெடில வேலி 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-27-4430:
மறிபடக் கிடந்த கையர் 
வளரிள மங்கை பாகஞ் 
செறிபடக் கிடந்த செக்கர்ச் 
செழுமதிக் கொழுந்து சூடி 
பொறிபடக் கிடந்த நாகம் 
புகையுமிழ்ந் தழல வீக்கிக் 
கிறிபட நடப்பர் போலுங் 
கெடிலவீ ரட்ட னாரே. 

4-27-4431:
நரிவரால் கவ்வச் சென்று 
நற்றசை இழந்த தொத்த 
தெரிவரால் மால்கொள் சிந்தை 
தீர்ப்பதோர் சிந்தை செய்வார் 
வரிவரால் உகளுந் தெண்ணீணர்க் 
கழனிசூழ் பழன வேலி 
அரிவரால் வயல்கள் சூழ்ந்த 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-27-4432:
புள்ளலைத் துண்ட ஓட்டில் 
உண்டுபோய் பலாசங் கொம்பின் 
சுள்ளலைச் சுடலை வெண்ணீ 
றணிந்தவர் மணிவெள் ளேற்றுத் 
துள்ளலைப் பாகன் றன்னைத் 
தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை 
அள்ளலைக் கடப்பித் தாளும் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-27-4433:
நீறிட்ட நுதலர் வேலை 
நீலஞ்சேர் கண்டர் மாதர் 
கூறிட்ட மெய்ய ராகிக் 
கூறினார் ஆறும் நான்குங் 
கீறிட்ட திங்கள் சூடிக் 
கிளர்தரு சடையி னுள்ளால் 
ஆறிட்டு முடிப்பர் போலும் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-27-4434:
காணிலார் கருத்தில் வாரார் 
திருத்தலார் பொருத்த லாகார் 
ஏணிலார் இறப்பும் இல்லார் 
பிறப்பிலார் துறக்க லாகார் 
நாணிலார் ஐவ ரோடும் 
இட்டெனை விரவி வைத்தார் 
ஆணலார் பெண்ணும் அல்லார் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-27-4435:
தீர்த்தமா மலையை நோக்கிச் 
செருவலி அரக்கன் சென்று 
பேர்த்தலும் பேதை அஞ்சப் 
பெருவிர லதனை ய[ன்றிச் 
சீர்த்தமா முடிகள் பத்துஞ் 
சிதறுவித் தவனை யன்று 
ஆர்த்தவாய் அலற வைத்தார் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-28-4436:
முன்பெலாம் இளைய காலம் 
மூர்த்தியை நினையா தோடிக் 
கண்கண இருமி நாளுங் 
கருத்தழிந் தருத்த மின்றிப் 
பின்பக லுணங்கல் அட்டும் 
பேதைமார் போன்றேன் உள்ளம் 
அன்பனாய் வாழ மாட்டேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-28-4437:
கறைப்பெருங் கண்டத் தானே 
காய்கதிர் நமனை யஞ்சி 
நிறைப்பெருங் கடலைக் கண்டேன் 
நீள்வரை யுச்சி கண்டேன் 
பிறைப்பெருஞ் சென்னி யானே 
பிஞ்ஞகா இவைய னைத்தும் 
அறுப்பதோர் உபாயங் காணேன் 
அதிகைவீ ரட்ட னாரே. 

4-28-4438:
நாதனா ரென்ன நாளும் 
நடுங்கின ராகித் தங்கள் 
ஏதங்கள் அறிய மாட்டார் 
இணையடி தொழுதோம் என்பார் 
ஆதனா னவனென் றெள்கி 
அதிகைவீ ரட்ட னேநின் 
பாதநான் பரவா துய்க்கும் 
பழவினைப் பரிசி லேனே. 

4-28-4439:
சுடலைசேர் சுண்ண மெய்யர் 
சுரும்புண விரிந்த கொன்றைப் 
படலைசேர் அலங்கல் மார்பர் 
பழனஞ்சேர் கழனித் தெங்கின் 
மடலைநீர் கிழிய வோடி 
அதனிடை மணிகள் சிந்துங் 
கெடிலவீ ரட்ட மேய 
கிளர்சடை முடிய னாரே. 

4-28-4440:
மந்திர முள்ள தாக 
மறிகட லெழுநெய் யாக 
இந்திரன் வேள்வித் தீயில் 
எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ் 
சிந்திர மாக நோக்கித் 
தெருட்டுவார் தெருட்ட வந்து 
கந்திரம் முரலுஞ் சோலைக் 
கானலங் கெடிலத் தாரே. 

4-28-4441:
மைஞ்ஞல மனைய கண்ணாள் 
பங்கன்மா மலையை யோடி 
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க 
விசைதணிந் தரக்கன் வீழ்ந்து 
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு 
காதலால் இனிது சொன்ன 
கின்னரங் கேட்டு கந்தார் 
கெடிலவீ ரட்ட னாரே. 

4-105-5160:
மாசிலொள் வாள்போல் மறியும் 
மணிநீர்த் திரைத்தொகுதி 
ஊசலை யாடியங் கொண்சிறை 
அன்னம் உறங்கலுற்றால் 
பாசறை நீலம் பருகிய 
வண்டுபண் பாடல்கண்டு 
வீசுங் கெடில வடகரைத் 
தேயெந்தை வீரட்டமே. 

4-105-5161:
பைங்காற் றவளை பறைகொட்டப் 
பாசிலை நீர்ப்படுகர் 
அங்காற் குவளைமேல் ஆவி 
உயிர்ப்ப அருகுலவுஞ் 
செங்காற் குருகிவை சேருஞ் 
செறிகெடி லக்கரைத்தே 
வெங்காற் குருசிலை வீரன் 
அருள்வைத்த வீரட்டமே. 

4-105-5162:
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ் 
செந்துவர் வாயிளையார் 
வெம்முலைச் சாந்தம் விலைபெறு 
மாலை யெடுத்தவர்கள் 
தம்மருங் கிற்கிரங் கார்தடந் 
தோள்மெலி யக்குடைவார் 
விம்மு புனற்கெடி லக்கரைத் 
தேயெந்தை வீரட்டமே. 

4-105-5163:
மீனுடைத் தண்புனல் வீரட்ட 
ரேநும்மை வேண்டுகின்ற 
தியானுடைச் சில்குறை ஒன்றுள 
தால்நறுந் தண்ணெருக்கின் 
தேனுடைக் கொன்றைச் சடையுடைக் 
கங்கைத் திரைதவழுங் 
கூனுடைத் திங்கட் குழவியெப் 
போதுங் குறிக்கொண்மினே. 

4-105-5164:
ஆரட்ட தேனும் இரந்துண் 
டகமக வன்றிரிந்து 
வேரட்ட நிற்பித் திடுகின்ற 
தால்விரி நீர்ப்பரவைச் 
சூரட்ட வேலவன் தாதையைச் 
சூழ்வய லாரதிகை 
வீரட்டத் தானை விரும்பா 
வரும்பாவ வேதனையே. 

4-105-5165:
படர்பொற் சடையும் பகுவாய் 
அரவும் பனிமதியுஞ் 
சுடலைப் பொடியு மெல்லா 
முளவேயவர் தூயதெண்ணீர்க் 
கெடிலக் கரைத்திரு வீரட்ட 
ராவர்கெட் டேனடைந்தார் 
நடலைக்கு நற்றுணை யாகுங்கண் 
டீரவர் நாமங்களே. 

4-105-5166:
காளங் கடந்ததோர் கண்டத்த 
ராகிக் கண்ணார்கெடில 
நாளங் கடிக்கோர் நகரமு 
மாதிற்கு நன்கிசைந்த 
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு 
மியாழ்கொண்டுந் தாமங்ஙனே 
வேடங்கள் கொண்டும் விசும்புசெல் 
வாரவர் வீரட்டரே. 

5-53-5758:
கோணன் மாமதி சூடியோர் கோவணம் 
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை 
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங் 
காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5759:
பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி 
அண்ண லையம ரர்தொழு மாதியைச் 
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம் 
நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5760:
உற்ற வர்தம் உறுநோய் களைபவர் 
பெற்ற மேறும் பிறங்கு சடையினர் 
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங் 
கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5761:
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் 
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ 
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங் 
கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5762:
பல்லா ரும்பல தேவர் பணிபவர் 
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் 
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங் 
கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5763:
வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் 
கொண்டான் கோல மதியோ டரவமும் 
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங் 
கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5764:
அரையார் கோவண ஆடைய னாறெலாந் 
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை 
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற் 
கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5765:
நீறு டைத்தடந் தோளுடை நின்மலன் 
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை 
ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங் 
கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5766:
செங்கண் மால்விடை யேறிய செல்வனார் 
பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர் 
அங்கண் ஞாலம தாகிய வீரட்டங் 
கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5767:
பூணா ணாரம் பொருந்த வுடையவர் 
நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற் 
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங் 
காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5768:
வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந் 
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை 
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம் 
உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 

5-53-5769:
உலந்தார் வெண்டலை உண்கல னாகவே 
வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச் 
சிலம்பார் சேவடி ய[ன்றினான் வீரட்டம் 
புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 

5-54-5770:
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி 
மட்ட லரிடு வார்வினை மாயுமாற் 
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ 
ரட்ட னாரடி சேரு மவருக்கே. 

5-54-5771:
நீள மாநினைந் தெண்மலர் இட்டவர் 
கோள வல்வினை யுங்குறை விப்பரால் 
வாள மாலிழி யுங்கெடி லக்கரை 
வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே. 

5-54-5772:
கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண் 
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார் 
தௌ;ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை 
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே. 

5-54-5773:
பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட 
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார் 
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே. 

5-54-5774:
தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன் 
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர் 
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேன லானை யுரித்தவீ ரட்டரே. 

5-54-5775:
ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர் 
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார் 
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே. 

5-54-5776:
உரைசெய் நுல்வழி யொண்மல ரெட்டிடத் 
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால் 
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை 
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே. 

5-54-5777:
ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற் 
காலை யேத்த வினையைக் கழிப்பரால் 
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை 
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே. 

5-54-5778:
தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற் 
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார் 
மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை 
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே. 

5-54-5779:
அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண் 
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந் 
தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ 
ரட்ட னாரடி சேரு மவர்களே. 

6-3-6265:
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை 
வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் @ர்தி யானைப்
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
எறிகெடிலத் தானை இறைவன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6266:
வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னைப்
பொன்பிதிர்ந் தன்ன சடையான் றன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
வாரா வுலகருள வல்லான் றன்னை
எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6267:
முந்தி யுலகம் படைத்தான் றன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னைத்
தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
செழுங்கெடில வீரட்ட மேவி னானை
எந்தை பெருமானை ஈசன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6268:
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்
அந்தரமு மலைகடலு மானான் றன்னை 
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னைக்
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும் வானவருந் தொழச்செல் வானை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6269:
ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை ய[ரன் 
அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்
டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6270:
ஆறேற்க வல்ல சடையான் றன்னை
அஞ்சனம் போலு மிடற்றான் றன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் றன்னைக்
கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
நீறேற்கப் பூசும் அகலத் தானை
நின்மலன் றன்னை நிமலன் றன்னை
ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6271:
குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்
டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
வானவர்க ளேத்தப் படுவான் றன்னை
எண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6272:
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் று{க்கி
ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6273:
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
மறையானை மாசொன் றிலாதான் றன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக்
கறையானைக் காதார் குழையான் றன்னைக்
கட்டங்க மேந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6274:
தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட 
வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங் 
கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-3-6275:
முலைமறைக்கப் பட்டுநீ ராடப் பெண்கள் 
முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை 
மதனழியச் செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றையந் தாரான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. 

6-4-6276:
சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச் 
சடாமகுடத் திருத்துமே சாம வேதக்
கந்தருவம் விரும்புமே கபால மேந்து 
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6277:
ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
படவரவந் தடமார்பிற் பயில்வித் தானே
நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6278:
முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6279:
செய்யனே கரியனே கண்டம் பைங்கண் 
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச் 
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6280:
பாடுமே யொழியாமே நால்வே தமும்
படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ் 
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6281:
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள 
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
வெள்ளப் புனற்கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6282:
குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6283:
மாலாகி மதமிக்க களிறு தன்னை 
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்
வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6284:
செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல் 
மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே 
நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6285:
எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள் 
இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி 
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-4-6286:
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா 
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண் டனே
கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப் 
புவலோகந் திரியுமே புரிநு லானே
அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே 
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 

6-5-6287:
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி 
கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி. 

6-5-6288:
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி 
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ய[ணா உகந்தாய் போற்றி 
உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 

6-5-6289:
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி 
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி. 

6-5-6290:
சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக் 
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற் 
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 

6-5-6291:
நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி. 

6-5-6292:
பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 

6-5-6293:
மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி 
பார்முழுது மாய பரமா போற்றி
கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி. 

6-5-6294:
வெஞ்சினவெள் ளேறு{ர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 

6-5-6295:
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 

6-5-6296:
முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத் 
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி. 

6-6-6297:
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 

6-6-6298:
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே று{ர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. 

6-6-6299:
வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 

6-6-6300:
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 

6-6-6301:
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
ஊழிதோ று{ழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 

6-6-6302:
திருமகட்குச் செந்தா மரையாமடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 

6-6-6303:
உரைமாலை யெல்லா முடையவடி
உரையால் உணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையில் லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீரட் டானக் காபாலியடி. 

6-6-6304:
நறுமலராய் நாறு மலர்ச்சேவடி 
நடுவாய் உலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமு மாயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 

6-6-6305:
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
அடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார் வீரட்டத் தலைவனடி. 

6-6-6306:
அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலனடி. 

6-7-6307:
செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் 
சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந்
தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூருந் தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரைய[ருங்
கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக் 
கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே. 

6-7-6308:
தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை 
அறையணி நல்லூரும் அரநெறியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே. 

6-7-6309:
சிறையார் புனற்கெடில வீரட்டமுந்
திருப்பா திரிப்புலிய[ர் திருவாமாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்தநின்ற 
சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரிசூழ் 
ஐயாற் றமுதன் பழனம்நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங் 
கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே. 

6-7-6310:
திரையார் புனற்கெடில வீரட்டமுந்
திருவாரூர் தேவு[ர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றிய[ரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்
மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ் 
கடம்பந் துறையுறைவார் காப்புக்களே. 

6-7-6311:
செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங் 
குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட்^ரும்
பனைய[ர் பயற்று{ர் பராய்த்துறையுங்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே. 

6-7-6312:
தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
செழுந்தண் பிடவு[ருஞ் சென்றுநின்று
பவ்வந் திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிமுத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங் 
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே. 

6-7-6313:
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சிக்காலி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
உறைய[ர் நறைய[ர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக்களே. 

6-7-6314:
தௌ;ளும் புனற்கெடில வீரட்டமுந் 
திண்டீச் சரமுந் திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச் சரமுநல் லேமங்கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங் 
குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
கள்ளருந்தத் தௌ;ளியா ருள்கியேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக்களே. 

6-7-6315:
சீரார் புனற்கெடில வீரட்டமுந்
திருக்காட்டுப் பள்ளி திருவெண்காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும் 
பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றிய[ரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
காரார் கமழ்கொன்றைத் தாரார்க்கென்றுங்
கடவு[ரில் வீரட்டங் காப்புக்களே. 

6-7-6316:
சிந்தும் புனற்கெடில வீரட்டமுந்
திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும் 
ஆக்கூரு மாவு[ரு மான்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவது 
இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
கந்தங் கமழுங் கரவீரமுங்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே. 

6-7-6317:
தேனார் புனற்கெடில வீரட்டமுந்
திருச்செம்பொன் பள்ளிதிருப் பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம் 
இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலைக்
கானார் மயிலார் கருமாரியுங்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே. 

6-7-6318:
திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மானிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
கருநீல வண்டரற்றுங் காளத்தியுங்
கயிலாயந் தம்முடைய காப்புக்களே. 

7-38-7607:
தம்மானை அறியாத சாதியார் உளரே 
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன் 
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல் 
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத் 
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் 
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் 
எம்மானை எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7608:
முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா 
தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் 
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக் 
குன்றமே ஈச?னென் றுன்னையே புகழ்வேன் 
அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப் 
படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை 
என்னேயென் எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7609:
விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே 
விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங் 
கரும்பேயென் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக் 
காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை 
வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும் 
வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை 
இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7610:
நாற்றானத் தொருவனை நானாய பரனை 
நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக் 
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின் 
றலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள 
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான் 
தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண் 
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7611:
சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும் 
உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக் 
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள் 
சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி 
வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி 
மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி 
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7612:
மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான் 
வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர் 
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும் 
தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற 
வெம்மான மதகரியின் உரியானை வேத 
விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி 
எம்மானை எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7613:
வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு 
மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம் 
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத் 
தெண்டோ ளெம் பெருமானைப் பெண்பாகம் ஒருபாற் 
செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய் 
அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ 
எய்தானை எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7614:
பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை 
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல் 
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற் 
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி 
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின் 
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை 
என்னானை எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7615:
திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச் 
சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக் 
கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய 
கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன் 
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும் 
உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல் 
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 

7-38-7616:
என்பினையே கலனாக அணிந்தானை எங்கள் 
எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன் 
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன் 
வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன 
அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர் 
பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை 
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.