HolyIndia.Org

திருக்கேதீச்சரம் ஆலய தேவாரம்

திருக்கேதீச்சரம் ஆலயம்
2-107-2627:
விருது குன்றமா மேருவில் நாணர 
வாவனல் எரியம்பாப் 
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் 
றுறைபதி யெந்நாளுங் 
கருது கின்றவு[ர் கனைகடற் கடிகமழ் 
பொழிலணி மாதோட்டங் 
கருத நின்றகே தீச்சரங் கைதொழக் 
கடுவினை யடையாவே. 

2-107-2628:
பாடல் வீணையர் பலபல சரிதையர் 
எருதுகைத் தருநட்டம் 
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் 
சுண்டிருள் கண்டத்தர் 
ஈட மாவது இருங்கடற் கரையினில் 
எழில்திகழ் மாதோட்டம் 
கேடி லாதகே தீச்சரங் கைதொழக் 
கெடுமிடர் வினைதானே. 

2-107-2629:
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் 
அறைகழல் சிலம்பார்க்கச் 
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் 
அகந்தொறும் இடுபிச்சைக் 
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் 
உயர்தரு மாதோட்டத் 
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் 
கருவினை யடையாவே. 

2-107-2630:
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் 
விரிதரு கரத்தேந்தும் 
வடிகொள் மூவிலை வேலினர் நுலினர் 
மறிகடல் மாதோட்டத் 
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் 
பரிந்தசிந் தையராகி 
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் 
மொய்த்தெழும் வினைபோமே. 

2-107-2631:
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம் 
மடைந்தவர்க் கருளீய 
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் 
மலிகடல் மாதோட்டத் 
தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம் 
இராப்பகல் நினைந்தேத்தி 
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் 
அன்பராம் அடியாரே. 

2-107-2632:
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் 
பொருந்தவைத் தொருபாகம் 
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய 
பொருளினர் குடிவாழ்க்கை 
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற 
மருவிய மாதோட்டக் 
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே 
தீச்சரம் பிரியாரே. 

2-107-2633:
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் 
லுலகினில் உயிர்வாழ்க்கை 
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் 
காதலித் துறைகோயில் 
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை 
நடமிடு மாதோட்டந் 
தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே 
தீச்சர மதுதானே. 

2-107-2634:
தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் 
தெடுத்தவன் முடிதிண்டோ ள் 
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த 
தலைவனார் கடல்வாயப் 
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் 
பொருந்திய மாதோட்டத் 
துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே 
தீச்சரத் துள்ளாரே. 

2-107-2635:
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் 
புவியிடந் தெழுந்தோடி 
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா 
வித்தக மென்னாகும் 
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா 
தோட்டநன் னகர்மன்னித் 
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் 
திருந்தஎம் பெருமானே. 

2-107-2636:
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் 
புறனுரைச் சமணாதர் 
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய 
ஏழைமை கேலேன்மின் 
மத்த யானையை மறுகிட உரிசெய்து 
போர்த்தவர் மாதோட்டத் 
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே 
தீச்சரம் அடைமின்னே. 

2-107-2637:
மாடெ லாமண முரசெனக் கடலின 
தொலிகவர் மாதோட்டத் 
தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத் 
தடிகளை யணிகாழி 
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் 
நவின்றெழு பாமாலைப் 
பாட லாயின பாடுமின் பத்தர்காள் 
பரகதி பெறலாமே.