HolyIndia.Org

திருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) ஆலய தேவாரம்

திருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) ஆலயம்
1-119-1282:
முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை 
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த 
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும் 
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே. 

1-119-1283:
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் 
ஓடலாற் கலனில்லான் உறை பதியால் 
காடலாற் கருதாத கள்ளில் மேயான் 
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. 

1-119-1284:
எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண் 
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி 
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான் 
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே. 

1-119-1285:
பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும் 
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த 
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான் 
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே. 

1-119-1286:
விரையாலும் மலராலும் விழுமை குன்றா 
உரையாலு மெதிர்கொள்ள வு[ரா ரம்மாக் 
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான் 
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே. 

1-119-1287:
நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல 
வலனாய மழுவாளும் வேலும் வல்லான் 
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான் 
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே. 

1-119-1288:
பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங் 
குடியாவு[ர் திரியினுங் கூப்பி டினுங் 
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான் 
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே. 

1-119-1289:
திருநீல மலரொண்கண் தேவி பாகம் 
புரிநுலுந் திருநீறும் புல்கு மார்பில் 
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும் 
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 

1-119-1290:
வரியாய மலரானும் வையந் தன்னை 
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங் 
கரியானும் அறியாத கள்ளில் மேயான் 
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. 

1-119-1291:
ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் 
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள் 
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் 
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே. 

1-119-1292:
திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு 
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல 
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப் 
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.