HolyIndia.Org

திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) ஆலய தேவாரம்

திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) ஆலயம்
2-77-2302:
பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா 
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி 
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல் 
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. 

2-77-2303:
இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ 
நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன் 
அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர் 
தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே. 

2-77-2304:
என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான் 
பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று 
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக் 
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. 

2-77-2305:
விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் 
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும் 
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர் 
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே. 

2-77-2306:
தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ 
ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர் 
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப் 
பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே. 

2-77-2307:
விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய 
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர் 
நரையினார்விடை ய[ர்தியார் நக்கனார்நறும் போதுசேர் 
உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே. 

2-77-2308:
வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின் 
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை 
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர் 
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே. 

2-77-2309:
தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை 
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ 
அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர் 
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே. 

2-77-2310:
வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார் 
செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில் 
ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச் 
சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே. 

2-77-2311:
வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின் 
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி 
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப் 
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே. 

2-77-2312:
கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப் 
பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார் 
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக் 
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.