திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) ஆலய தேவாரம்
திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) ஆலயம்1-89-959:
படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலிய[ர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.
1-89-960:
இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலிய[ர்த் திகழ்கோயிற்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.
1-89-961:
விண்ணோர் பெருமானே விகிர்தா விடைய[ர்தீ
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி
எண்ணார் எருக்கத்தம் புலிய[ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.
1-89-962:
அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலிய[ர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே.
1-89-963:
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலிய[ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.
1-89-964:
நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலிய[ர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.
1-89-965:
ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலிய[ர் மிகுகோயிற்
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.
1-89-966:
மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலிய[ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.
1-89-967:
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலிய[ர் நிகழ்வாய
அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே.
1-89-968:
ஏரார் எருக்கத்தம் புலிய[ர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.