HolyIndia.Org

திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) ஆலய தேவாரம்

திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) ஆலயம்
1-89-959:
படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை 
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச் 
சடையான் எருக்கத்தம் புலிய[ர்த் தகுகோயில் 
விடையான் அடியேத்த மேவா வினைதானே. 

1-89-960:
இலையார் தருசூலப் படையெம் பெருமானாய் 
நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த 
சிலையான் எருக்கத்தம் புலிய[ர்த் திகழ்கோயிற் 
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே. 

1-89-961:
விண்ணோர் பெருமானே விகிர்தா விடைய[ர்தீ 
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி 
எண்ணார் எருக்கத்தம் புலிய[ ருறைகின்ற 
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே. 

1-89-962:
அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை 
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி 
வரையான் எருக்கத்தம் புலிய[ர் மகிழ்கின்ற 
திரையார் சடையானைச் சேரத் திருவாமே. 

1-89-963:
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச் 
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான் 
ஏறான் எருக்கத்தம் புலிய[ ரிறையானை 
வேறா நினைவாரை விரும்பா வினைதானே. 

1-89-964:
நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப் 
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத் 
தகுவான் எருக்கத்தம் புலிய[ர்த் தகைந்தங்கே 
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. 

1-89-965:
ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத் 
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட 
கோவே யெருக்கத்தம் புலிய[ர் மிகுகோயிற் 
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே. 

1-89-966:
மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி 
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே 
இறையான் எருக்கத்தம் புலிய[ ரிடங்கொண்ட 
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே. 

1-89-967:
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச் 
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும் 
நித்தன் எருக்கத்தம் புலிய[ர் நிகழ்வாய 
அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே. 

1-89-968:
ஏரார் எருக்கத்தம் புலிய[ர் உறைவானைச் 
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன் 
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார் 
பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.