HolyIndia.Org

திருமுருகபூண்டி ஆலய தேவாரம்

திருமுருகபூண்டி ஆலயம்
7-49-7722:
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் 
விரவ லாமை சொல்லித் 
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் 
டாற லைக்கு மிடம் 
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

7-49-7723:
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் 
விரவ லாமை சொல்லிக் 
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் 
கூறை கொள்ளு மிடம் 
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

7-49-7724:
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் 
பாவ மொன் றறியார் 
மூஉசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் 
கூறை கொள்ளு மிடம் 
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 
 
மூஉயிர் - உசிர் என மருவியது. 

7-49-7725:
பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் 
கட்டி வெட்டன ராய்ச் 
சூறைப் பங்கிய ராகி நாடொறுங் 
கூறை கொள்ளு மிடம் 
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

7-49-7726:
தயங்கு தோலை உடுத்த சங்கரா 
சாம வேத மோதி 
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் 
மார்க்க மொன்றறி யீர் 
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

7-49-7727:
விட்டி சைப்பன கொக்க ரைகொடு 
கொட்டி தத்த ளகங் 
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு 
குடமுழா நீர் மகிழ்வீர் 
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

7-49-7728:
வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் 
கோவணந் தற்ற யலே 
ஓதம் மேவிய ஒற்றி ய[ரையும் 
முத்தி நீர் மகிழ்வீர் 
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
ஏது காரணம் எது காவல்கொண் 
டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

7-49-7729:
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் 
தோள்வ ரிநெடுங் கண் 
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர் 
பாகம் வைத்து கந்தீர் 
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
இடவ மேறியும் போவ தாகில்நீர் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

7-49-7730:
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் 
பற்ற லைக லனா 
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் 
பாகம் வைத்து கந்தீர் 
மோந்தை யோடு முழக்கறா முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

7-49-7731:
முந்தி வானவர் தாந்தொழு முருகன் 
பூண்டி மாநகர் வாய்ப் 
பந்த ணைவிரற் பாவை தன்னையோர் 
பாகம் வைத்த வனைச் 
சிந்தை யிற்சிவ தொண்ட னுரன் 
உரைத்தன பத்துங் கொண் 
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர் 
ஒன்றுந் தாமி லரே.