HolyIndia.Org

திருவெண்டுறை ஆலய தேவாரம்

திருவெண்டுறை ஆலயம்
3-61-3449:
ஆதியன் ஆதிரையன் னனலாடிய ஆரழகன் 
பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன் 
போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்த 
வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3450:
காலனை யோருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான் 
பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன் 
மாலைம தியொடுநீர் அரவம்புனை வார்சடையான் 
வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3451:
படைநவில் வெண்மழுவான் பலபூதப் படையுடையான் 
கடைநவில் மும்மதிலும் எரிய[ட்டிய கண்ணுதலான் 
உடைநவி லும்புலித்தோல் உடையாடையி னான்கடிய 
விடைநவிலுங் கொடியான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3452:
பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம் 
எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான் 
பெண்ணமர் கூறுடையான் பிரமன்தலை யிற்பலியான் 
விண்ணவர் தம்பெருமான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3453:
பாரிய லும்பலியான் படியார்க்கும் அறிவரியான் 
சீரிய லும்மலையாள் ஒருபாகமுஞ் சேரவைத்தான் 
போரிய லும்புரமூன் றுடன்பொன்மலை யேசிலையா 
வீரிய நின்றுசெய்தான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3454:
ஊழிக ளாயுலகா யொருவர்க்கும் உணர்வரியான் 
போழிள வெண்மதியும் புனலும்மணி புன்சடையான் 
யாழின்மொ ழியுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின் 
வேழமு ரித்தபிரான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3455:
கன்றிய காலனையும் முருளக்கனல் வாயலறிப் 
பொன்றமுன் நின்றபிரான் பொடியாடிய மேனியினான் 
சென்றிமை யோர்பரவுந் திகழ்சேவடி யான்புலன்கள் 
வென்றவன் எம்மிறைவன் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3456:
கரமிரு பத்தினாலுங் கடுவன்சின மாயெடுத்த 
சிரமொரு பத்துமுடை அரக்கன்வலி செற்றுகந்தான் 
பரவவல் லார்வினைகள் அறுப்பானொரு பாகமும்பெண் 
விரவிய வேடத்தினான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3457:
கோலம லரயனுங் குளிர்கொண்டல் நிறத்தவனுஞ் 
சீலம றிவரிதாய்த் திகழ்ந்தோங்கிய செந்தழலான் 
மூலம தாகிநின்றான் முதிர்புன்சடை வெண்பிறையான் 
வேலைவி டமிடற்றான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3458:
நக்குரு வாயவருந் துவராடைந யந்துடையாம் 
பொக்கர்கள் தம்முரைகள் ளவைபொய்யென எம்மிறைவன் 
திக்குநி றைபுகழார் தருதேவர்பி ரான்கனகம் 
மிக்குயர் சோதியவன் விரும்பும்மிடம் வெண்டுறையே. 

3-61-3459:
திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத் 
தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர் தந்தலைவன் 
எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன்சொன்ன 
பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே.