திருப்பூவனூர் ஆலய தேவாரம்
திருப்பூவனூர் ஆலயம்5-65-5880:
பூவ னுர்ப்புனி தன்றிரு நாமந்தான்
நாவின் நுறுநு றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.
5-65-5881:
என்ன னென்மனை எந்தையெ னாருயிர்
தன்னன் றன்னடி யேன்றனமாகிய
பொன்னன் பூவனுர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே.
5-65-5882:
குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனுர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.
5-65-5883:
ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நுல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னுர்புகு வார்வினை போகுமே.
5-65-5884:
புல்ல மூர்திய[ர் பூவனுர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளிய[ர்
தில்லை ய[ர்திரு வாரூர் சீர்காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே.
5-65-5885:
அனுச யப்பட்ட துவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னுரனைப் போற்றுவார்
மனித ரிற்றலை யான மனிதரே.
5-65-5886:
ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனுர் நாதனே.
5-65-5887:
பூவ னுர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனுர் காண்மினே.
5-65-5888:
ஏவ மேது மிலாவம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னுர்புகு தப்பெற்ற நாளின்றே.
5-65-5889:
நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனுர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே.
5-65-5890:
மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனு ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.