HolyIndia.Org

திருப்பூவனூர் ஆலய தேவாரம்

திருப்பூவனூர் ஆலயம்
5-65-5880:
பூவ னுர்ப்புனி தன்றிரு நாமந்தான் 
நாவின் நுறுநு றாயிரம் நண்ணினார் 
பாவ மாயின பாறிப் பறையவே 
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே. 

5-65-5881:
என்ன னென்மனை எந்தையெ னாருயிர் 
தன்னன் றன்னடி யேன்றனமாகிய 
பொன்னன் பூவனுர் மேவிய புண்ணியன் 
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே. 

5-65-5882:
குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர் 
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம் 
புற்ற ராவினன் பூவனுர் ஈசன்பேர் 
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே. 

5-65-5883:
ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான் 
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான் 
மேவ நுல்விரி வெண்ணியின் தென்கரைப் 
பூவ னுர்புகு வார்வினை போகுமே. 

5-65-5884:
புல்ல மூர்திய[ர் பூவனுர் பூம்புனல் 
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளிய[ர் 
தில்லை ய[ர்திரு வாரூர் சீர்காழிநல் 
வல்ல மூரென வல்வினை மாயுமே. 

5-65-5885:
அனுச யப்பட்ட துவிது வென்னாதே 
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் 
புனித னைப்பூவ னுரனைப் போற்றுவார் 
மனித ரிற்றலை யான மனிதரே. 

5-65-5886:
ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன் 
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர் 
பாதி யானான் பரந்த பெரும்படைப் 
பூத நாதன்தென் பூவனுர் நாதனே. 

5-65-5887:
பூவ னுர்தண் புறம்பயம் பூம்பொழில் 
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங் 
கோவ லூர்குட வாயில் கொடுமுடி 
மூவ லூருமுக் கண்ணனுர் காண்மினே. 

5-65-5888:
ஏவ மேது மிலாவம ணேதலர் 
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான் 
தேவ தேவன் திருநெறி யாகிய 
பூவ னுர்புகு தப்பெற்ற நாளின்றே. 

5-65-5889:
நார ணன்னொடு நான்முகன் இந்திரன் 
வார ணன்கும ரன்வணங் குங்கழற் 
பூர ணன்திருப் பூவனுர் மேவிய 
கார ணன்னெனை யாளுடைக் காளையே. 

5-65-5890:
மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை 
புக்கெ டுத்தலும் பூவனு ரன்னடி 
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும் 
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.