HolyIndia.Org

கீழ்வேளூர் (கீவளூர்) ஆலய தேவாரம்

கீழ்வேளூர் (கீவளூர்) ஆலயம்
2-105-2605:
மின்னு லாவிய சடையினர் விடையினர் 
மிளிர்தரும் அரவோடும் 
பன்னு லாவிய மறைஒலி நாவினர் 
கறையணி கண்டத்தர் 
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் 
புகழ்மிகு கீழ்வே@ர் 
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை 
யோடிட வீடாமே. 

2-105-2606:
நீரு லாவிய சடையிடை யரவொடு 
மதிசிர நிரைமாலை 
வாரு லாவிய வனமுலை யவளொடு 
மணிசிலம் பவையார்க்க 
ஏரு லாவிய இறைவன துறைவிடம் 
எழில்திகழ் கீழ்வே@ர் 
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் 
பிணியொடு வினைபோமே. 

2-105-2607:
வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு 
வெள்ளெருக் கலர்மத்தம் 
பண்ணி லாவிய பாடலோ டாடலர் 
பயில்வுறு கீழ்வே@ர்ப் 
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் 
கோயிலெம் பெருமானை 
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார் 
உலகினில் உள்ளாரே. 

2-105-2608:
சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் 
தொங்கவைத் தழகாக 
நாடு லாவிய பலிகொளும் நாதனார் 
நலமிகு கீழ்வே@ர்ப் 
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் 
கோயிலுட் பிரியாது 
நீடு லாவிய நிமலனைப் பணிபவர் 
நிலைமிகப் பெறுவாரே. 

2-105-2609:
துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை 
வடமணி சிரமாலை 
மன்று லாவிய மாதவ ரினிதியன் 
மணமிகு கீழ்வே@ர் 
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் 
நிமலனை நினைவோடுஞ் 
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை 
தேய்வது திணமாமே. 

2-105-2610:
கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் 
கூத்தனை மகிழ்ந்துள்கித் 
தொத்து லாவிய நுலணி மார்பினர் 
தொழுதெழு கீழ்வே@ர்ப் 
பித்து லாவிய பத்தர்கள் பேணிய 
பெருந்திருக் கோயில்மன்னும் 
முத்து லாவிய வித்தினை யேத்துமின் 
முடுகிய இடர்போமே. 

2-105-2611:
பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் 
வன்னியுந் துன்னாரும் 
கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர் 
காதல்செய் கீழ்வே@ர் 
மறைநி லாவிய அந்தணர் மலிதரு 
பெருந்திருக் கோயில்மன்னும் 
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால் 
நினைபவர் வினைபோமே. 

2-105-2612:
மலைநி லாவிய மைந்தனம் மலையினை 
யெடுத்தலும் அரக்கன்றன் 
தலையெ லாம்நெரிந் தலறிட வு[ன்றினான் 
உறைதரு கீழ்வே@ர்க் 
கலைநி லாவிய நாவினர் காதல்செய் 
பெருந்திருக் கோயிலுள் 
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால் 
நினையவல் வினைபோமே. 

2-105-2613:
மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு 
மலரவன் காண்பொண்ணாப் 
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி 
பாகனைப் பரிவோடுஞ் 
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ் 
மல்கிய கீழ்வே@ர் 
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் 
நடலைகள் நணுகாவே. 

2-105-2614:
சீறு லாவிய தலையினர் நிலையிலா 
அமணர்கள் சீவரத்தார் 
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் 
சுரும்பமர் கீழ்வே@ர் 
ஏறு லாவிய கொடியனை யேதமில் 
பெருந்திருக் கோயில்மன்னு 
பேறு லாவிய பெருமையன் திருவடி 
பேணுமின் தவமாமே. 

2-105-2615:
குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை 
அழகமர் கீழ்வே@ர்த் 
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் 
கோயிலெம் பெருமானை 
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு 
புகலிமன் சம்பந்தன் 
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி 
பெறுவது திடமாமே. 

6-67-6914:
ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6915:
சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்
கிற்பானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6916:
அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை
ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6917:
தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத் 
தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6918:
நல்லானை நரைவிடையொன் று{ர்தி யானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6919:
சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்
கிழித்தானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6920:
உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற 
ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் 
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானை
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்
கிளரொளியைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6921:
தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்
உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6922:
மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6-67-6923:
முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் 
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்று மெரிசெய் தானைப்
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.