HolyIndia.Org

திருசெங்கட்டாங்குடி ஆலய தேவாரம்

திருசெங்கட்டாங்குடி ஆலயம்
1-61-656:
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும் 
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் 
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் 
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. 

1-61-657:
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப 
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச் 
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் 
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 

1-61-658:
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் 
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர் 
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங் 
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 

1-61-659:
தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண் 
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான் 
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள் 
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே. 

1-61-660:
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி 
நுலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச் 
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள் 
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. 

1-61-661:
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான் 
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான் 
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக் 
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. 

1-61-662:
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் 
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச் 
செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள் 
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. 

1-61-663:
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த 
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் 
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங் 
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. 

1-61-664:
ஆனுரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா 
வானுரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான் 
தேனுரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான் 
கானுரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. 

1-61-665:
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் 
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான் 
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் 
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. 

1-61-666:
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின் 
நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன் 
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும் 
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. 

3-63-3471:
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் 
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே 
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய 
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே. 

3-63-3472:
பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும் 
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள் 
கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய 
இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே. 

3-63-3473:
குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும் 
இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய் 
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே. 

3-63-3474:
கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும் 
மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய் 
தேனமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே. 

3-63-3475:
ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும் 
பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய் 
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே. 

3-63-3476:
குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத் 
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய் 
கறைக்கண்டன் பிறைச்சென்னி கணபதீச்சரம் மேய 
சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே. 

3-63-3477:
கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய் 
ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே 
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே. 

3-63-3478:
கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந் 
தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே 
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே. 

3-63-3479:
நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே யுலகெல்லாம் 
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே 
சிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே. 

3-63-3480:
செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய 
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட 
அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ் 
சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே. 

6-84-7076:
பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7077:
துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7078:
உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7079:
கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநுற் றமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7080:
நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7081:
கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்
கடவு[ரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7082:
எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை
ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7083:
கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7084:
அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை
அலைகடலில் ஆலால மமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 

6-84-7085:
போரரவம் மால்விடையொன் று{ர்தி யானைப்
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.