HolyIndia.Org

திருப்பனையூர் ஆலய தேவாரம்

திருப்பனையூர் ஆலயம்
1-37-393:
அரவச் சடைமேல் மதிமத்தம் 
விரவிப் பொலிகின் றவனுராம் 
நிரவிப் பலதொண் டர்கள்நாளும் 
பரவிப் பொலியும் பனைய[ரே. 

1-37-394:
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் 
உண்ணின் றுமகிழ்ந் தவனுராம் 
கண்ணின் றெழுசோ லையில்வண்டு 
பண்ணின் றொலிசெய் பனைய[ரே. 

1-37-395:
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல் 
மலரும் பிறையொன் றுடையானுர் 
சிலரென் றுமிருந் தடிபேணப் 
பலரும் பரவும் பனைய[ரே. 

1-37-396:
இடியார் கடல்நஞ் சமுதுண்டு 
பொடியா டியமே னியினானுர் 
அடியார் தொழமன் னவரேத்தப் 
படியார் பணியும் பனைய[ரே. 

1-37-397:
அறையார் கழல்மே லரவாட 
இறையார் பலிதேர்ந் தவனுராம் 
பொறையார் மிகுசீர் விழமல்கப் 
பறையா ரொலிசெய் பனைய[ரே. 

1-37-398:
அணியார் தொழவல் லவரேத்த 
மணியார் மிடறொன் றுடையானுர் 
தணியார் மலர்கொண் டிருபோதும் 
பணிவார் பயிலும் பனைய[ரே. 

1-37-399:
அடையா தவர்மூ வெயில்சீறும் 
விடையான் விறலார் கரியின்தோல் 
(மூ)உடையா னவனெண் பலபூதப் 
படையா னவனுர் பனைய[ரே. 
(மூ) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம். 

1-37-400:
இலகும் முடிபத் துடையானை 
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல் 
உலகில் லுயிர்நீர் நிலமற்றும் 
பலகண் டவனுர் பனைய[ரே. 

1-37-401:
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள் 
சிரமுன் னடிதா ழவணங்கும் 
பிரமன் னொடுமா லறியாத 
பரமன் னுறையும் பனைய[ரே. 

1-37-402:
மூஅழிவல் லமண ரொடுதேரர் 
மொழிவல் லனசொல் லியபோதும் 
இழிவில் லதொர்செம் மையினானுர் 
பழியில் லவர்சேர் பனைய[ரே. 
(மூ) அழிவில் லமண/ தொடுதேரர் என்றும் பாடம். 

1-37-403:
பாரார் மூவிடையான் பனைய[ர்மேல் 
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன் 
ஆரா தசொன்மா லைகள்பத்தும் 
ஊரூர் நினைவா ருயர்வாரே. 
(மூ) விடையார் என்றும் பாடம். 

7-87-8106:
மாடமாளிகை கோபுரத்தொடு 
 மண்டபம்வள ரும்வளர்பொழில் 
பாடல் வண்டறையும் 
 பழனத் திருப்பனைய[ர்த் 
தோடுபெய்தொரு காதினிற்குழை 
 தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின் 
றாடு மாறுவல்லார் 
 அவரே அழகியரே. 

7-87-8107:
நாறுசெங்கழு நீர்மலர்
 நல்லமல்லிகை சண்பகத்தொடு 
சேறுசெய் கழனிப் 
 பழனத் திருப்பனைய[ர் 
நீறுபூசிநெய் யாடிதன்னை 
 நினைப்பவர்தம் மனத்தனாகிநின் 
றாறு சூடவல்லார் 
 அவரே அழகியரே. 

7-87-8108:
செங்கண்மேதிகள் சேடெறிந்து 
 தடம்படிதலிற் சேலினத்தொடு 
பைங்கண் வாளைகள் 
 பாய்பழனத் திருப்பனைய[ர்த் 
திங்கள்சூடிய செல்வனாரடி 
 யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி 
லங்கிருந் துறைவார் 
 அவரே அழகியரே. 

7-87-8109:
வாளைபாய மலங்கிளங்கயல் 
 வரிவராலுக ளுங்கழனியுள் 
பாளையொண் கமுகம் 
 புடைசூழ் திருப்பனைய[ர்த் 
தோளுமாகமுந் தோன்றநட்டமிட் 
 டாடுவாரடித் தொண்டர்தங்களை 
ஆளு மாறுவல்லார் 
 அவரே அழகியரே. 

7-87-8110:
கொங்கையார்பல ருங்குடைந் 
 தாடநீர்க்குவ ளைமலர்தர 
பங்கயம் மலரும் 
 பழனத் திருப்பனைய[ர் 
மங்கைபாகமும் மாலோர்பாகமுந் 
 தாமுடையவர் மான்மழுவினோ 
டங்கைத் தீயுகப்பார் 
 அவரே அழகியரே. 

7-87-8111:
காவிரிபுடை சூழ்சோணாட்டவர் 
 தாம்பரவிய கருணையங்கடலப் 
பாவிரி புலவர் 
 பயிலுந் திருப்பனைய[ர் 
மாவிரிமட நோக்கிஅஞ்ச 
 மதகரியுரி போர்த்துகந்தவர் 
ஆவில்ஐந் துகப்பார் 
 அவரே அழகியரே. 

7-87-8112:
மரங்கள்மேல்மயி லாலமண்டப 
 மாடமாளிகை கோபுரத்தின்மேல் 
திரங்கல்வன் முகவன் 
 புகப்பாய் திருப்பனைய[ர்த் 
துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த் 
 தோன்றலுமறி யாமற்றோன்றிநின் 
றரங்கில் ஆடவல்லார் 
 அவரே அழகியரே. 

7-87-8113:
மண்ணெலாம்முழ வம்மதிர்தர 
 மாடமாளிகை கோபுரத்தின்மேற் 
பண்ணி யாழ்முரலும் 
 பழனத் திருப்பனைய[ர் 
வெண்ணிலாச் சடைமேவிய 
 விண்ணவரொடு மண்ணவர்தொழ 
அண்ணலாகி நின்றார் 
 அவரே அழகியரே. 

7-87-8114:
குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக் 
 குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப் 
பரக்குந் தண்கழனிப் 
 பழனத் திருப்பனைய[ர் 
இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை 
 தோளிருபது தாள்நெரிதர 
அரக்கனை அடர்த்தார் 
 அவரே அழகியரே. 

7-87-8115:
வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர் 
 மாதவர்வள ரும்வளர்பொழில் 
பஞ்சின் மெல்லடியார் 
 பயிலுந் திருப்பனைய[ர் 
வஞ்சியும்வளர் நாவலூரன் 
 வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன் 
செஞ்சொற் கேட்டுகப்பார் 
 அவரே அழகியரே.