HolyIndia.Org

நன்னிலம் ஆலய தேவாரம்

நன்னிலம் ஆலயம்
7-98-8219:
தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலி 
பண்ணியல் மென்மொழி யார்இடக் கொண்டுழல் பண்டரங்கன் 
புண்ணிய நான்மறை யோர்முறை யாலடி போற்றிசைப்ப 
நண்ணிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

7-98-8220:
வலங்கிளர் மாதவஞ் செய்மலை மங்கையோர் பங்கினனாய்ச் 
சலங்கிளர் கங்கைதங் கச்சடை யொன்றிடை யேதரித்தான் 
பலங்கிளர் பைம்பொழில் தண்பனி வெண்மதி யைத்தடவ 
நலங்கிளர் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

7-98-8221:
கச்சிய னின்கருப் பூர்விருப் பன்கரு திக்கசிவார் 
உச்சியன் பிச்சையுண் ணியுல கங்களெல் லாமுடையான் 
நொச்சியம் பச்சிலை யான்நுரை தீர்புன லாற்றொழுவார் நச்சிய நன்னிலத் துப்பெருங் 
 கோயில் நயந்தவனே. 

7-98-8222:
பாடிய நான்மறை யான்படு பல்பிணக் காடரங்கா 
ஆடிய மாநடத் தானடி போற்றியென் றன்பினராய்ச் 
சூடிய செங்கையி னார்பல தோத்திரம் வாய்த்தசொல்லி 
நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

7-98-8223:
பிலந்தரு வாயினொ டுபெரி தும்வலி மிக்குடைய 
சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன் 
நிலந்தரு மாமகள் கோன்நெடு மாற்கருள் செய்தபிரான் 
நலந்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

7-98-8224:
வெண்பொடி மேனியி னான்கரு நீல மணிமிடற்றான் 
பெண்படி செஞ்சடை யான்பிர மன்சிரம் பீடழித்தான் 
பண்புடை நான்மறை யோர்பயின் றேத்திப்பல் கால்வணங்கும் 
நண்புடை நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

7-98-8225:
தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை யன்சுடர் வெண்மழுவாட் 
படைமலி கையன்மெய் யிற்பகட் டீருரிப் போர்வையினான் 
மடைமலி வண்கம லம்மலர் மேல்மட வன்னம்மன்னி 
நடைமலி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

7-98-8226:
குளிர்தரு திங்கள்கங் கைகுர வோடரக் கூவிளமும் 
மிளிர்தரு புன்சடை மேலுடை யான்விடை யான்விரைசேர் 
தளிர்தரு கோங்குவேங் கைதட மாதவி சண்பகமும் 
நளிர்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

7-98-8227:
கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் கேழற்பின் கானவனாய் 
அமர்பயில் வெய்திய ருச்சுன னுக்கருள் செய்தபிரான் 
தமர்பயில் தண்விழ வில்தகு சைவர் தவத்தின்மிக்க 
நமர்பயில் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 

7-98-8228:
கருவரை போலரக் கன்கயி 
 லைம்மலைக் கீழ்க்கதற 
ஒருவிர லாலடர்த் தின்னருள் 
 செய்த உமாபதிதான் 
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை 
 வன்றிகழ் செம்பியர்கோன் 
நரபதி நன்னிலத் துப்பெருங் 
 கோயில் நயந்தவனே. 

7-98-8229:
கோடுயர் வெங்களிற் றுத்திகழ் 
 கோச்செங்க ணான்செய்கோயில் 
நாடிய நன்னிலத் துப்பெருங் 
 கோயில் நயந்தவனைச் 
சேடியல் சிங்கிதந் தைசடை 
 யன்றிரு வாரூரன் 
பாடிய பத்தும்வல் லார்புகு 
 வார்பர லோகத்துள்ளே.