HolyIndia.Org

திருவாவடுதுறை ஆலய தேவாரம்

திருவாவடுதுறை ஆலயம்
2-13-1601:
நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே. 

2-13-1602:
மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே. 

2-13-1603:
ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே. 

2-13-1604:
சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்
உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே. 

2-13-1605:
காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலோர்பால்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே. 

2-13-1606:
பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக்
கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்
கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே. 

2-13-1607:
சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவிய
நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே. 

2-13-1608:
விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்
குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்
செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே. 

2-13-1609:
நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக்
கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே. 

2-13-1610:
புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே. 

2-13-1611:
தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை
விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே. 

5-64-5869:
வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய் 
ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள் 
கோழம் பத்துறை கூத்தன் குரைகழற் 
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே. 

5-64-5870:
கயிலை நன்மலை யாளுங் கபாலியை 
மயிலி யன்மலை மாதின் மணாளனைக் 
குயில்ப யில்பொழிற் கோழம்ப மேயவென் 
உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே. 

5-64-5871:
வாழும் பான்மைய ராகிய வான்செல்வந் 
தாழும் பான்மைய ராகித்தம் வாயினால் 
தாழம் பூமணம் நாறிய தாழ்பொழிற் 
கோழம் பாவெனக் கூடிய செல்வமே. 

5-64-5872:
பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் 
கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு 
கோடல் பூத்தலர் கோழம்பத் துண்மகிழ்ந் 
தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே. 

5-64-5873:
தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர் 
பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன் 
குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான் 
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே. 

5-64-5874:
நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம் 
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற் 
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண் 
டாதி பாத மடையவல் லார்களே. 

5-64-5875:
முன்னை நான்செய்த பாவ முதலறப் 
பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும் 
அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர் 
பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே. 

5-64-5876:
ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண் 
கோழை மாரொடுங் கூடிய குற்றமாங் 
கூழை பாய்வயற் கோழம்பத் தானடி 
ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே. 

5-64-5877:
அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி 
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக் 
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத் 
துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே. 

5-64-5878:
சமர சூரபன் மாவைத் தடிந்தவேற் 
குமரன் தாதைநற் கோழம்ப மேவிய 
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் 
அமர லோகம தாளுடை யார்களே. 

5-64-5879:
துட்ட னாகி மலையெடுத் த/தின்கீழ்ப் 
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான் 
கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென் 
றிட்ட கீத மிசைத்த அரக்கனே.