HolyIndia.Org

திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்) ஆலய தேவாரம்

திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்) ஆலயம்
3-18-2987:
துளமதி யுடைமறி தோன்று கையினர் 
இளமதி யணிசடை எந்தை யாரிடம் 
உளமதி யுடையவர் வைக லோங்கிய 
வளமதி தடவிய மாடக் கோயிலே. 

3-18-2988:
மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர் 
மையகண் மலைமக ளோடும் வைகிடம் 
வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச் 
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே. 

3-18-2989:
கணியணி மலர்கொடு காலை மாலையும் 
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர் 
தணியணி உமையொடு தாமுந் தங்கிடம் 
மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே. 

3-18-2990:
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் 
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் 
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் 
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே. 

3-18-2991:
விடம்அடை மிடற்றினர் வேத நாவினர் 
மடமொழி மலைமக ளோடும் வைகிடம் 
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க் 
குடதிசை நிலவிய மாடக் கோயிலே. 

3-18-2992:
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை 
இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி 
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில் 
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே. 

3-18-2993:
எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன் 
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் 
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை 
வருமுகி லணவிய மாடக் கோயிலே. 

3-18-2994:
மலையன இருபது தோளி னான்வலி 
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம் 
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள் 
வலம்வரு மலையன மாடக் கோயிலே. 

3-18-2995:
மாலவன் மலரவன் நேடி மால்கொள 
மாலெரி யாகிய வரதர் வைகிடம் 
மாலைகொ டணிமறை வாணர் வைகலில் 
மாலன மணியணி மாடக் கோயிலே. 

3-18-2996:
கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர் 
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம் 
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர் 
வடமலை யனையநன் மாடக் கோயிலே. 

3-18-2997:
மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச் 
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம் 
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை 
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.