HolyIndia.Org

திருக்குடமூக்கு (கும்பகோணம்) ஆலய தேவாரம்

திருக்குடமூக்கு (கும்பகோணம்) ஆலயம்
2-2-1480:
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே. 

2-2-1481:
பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே. 

2-2-1482:
கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே. 

2-2-1483:
கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே. 

2-2-1484:
கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே. 

2-2-1485:
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே. 

2-2-1486:
கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே. 

2-2-1487:
தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே. 

2-2-1488:
தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே. 

2-2-1489:
உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே. 

2-2-1490:
வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே. 

2-106-2616:
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே 
யிருங்கடல் வையத்து 
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை 
முழுமணித் தரளங்கள் 
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி 
வாணனை வாயாரப் 
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் 
வழிபடும் அதனாலே. 

2-106-2617:
விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை 
விரிகடல் வருநஞ்சம் 
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய 
இறைவனை உலகத்தில் 
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை 
வலஞ்சுழி யிடமாகக் 
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ 
டினிதிருந் தமையாலே. 

2-106-2618:
திருந்த லார்புரந் தீயெழச் செறுவன 
விறலின்கண் அடியாரைப் 
பரிந்து காப்பன பத்தியில் வருவன 
மத்தமாம் பிணிநோய்க்கு 
மருந்து மாவன மந்திர மாவன 
வலஞ்சுழி யிடமாக 
இருந்த நாயகன் இமையவ ரேத்திய 
இணையடித் தலந்தானே. 

2-106-2619:
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் 
அறத்திற முனிவர்க்கன் 
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் 
தினிதருள் பெருமானார் 
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி 
யிடமகிழ்ந் தருங்கானத் 
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய 
அற்புதம் அறியோமே. 

2-106-2620:
மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம் 
எரியுரு வொருபாகம் 
பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர் 
பெருங்கடற் பவளம்போல் 
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் 
பரிபவர் மனம்புக்க 
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர் 
இணையடி தொழுவாரே. 

2-106-2621:
ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் 
மேனியர் மடமாதர் 
இருவ ராதரிப் பார்பல பூதமும் 
பேய்களும் அடையாளம் 
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் 
தகந்தொறும் பலிக்கென்று 
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே 
வரிவளை கவர்ந்தாரே. 

2-106-2622:
குன்றி ய[ர்குட மூக்கிடம் வலம்புரங் 
குலவிய நெய்த்தானம் 
என்றிவ் வு[ர்களி லோமென்றும் இயம்புவர் 
இமையவர் பணிகேட்பார் 
அன்றி ய[ர்தமக் குள்ளன அறிகிலோம் 
வலஞ்சுழி யரனார்பால் 
சென்ற வு[ர்தனில் தலைப்பட லாமென்று 
சேயிழை தளர்வாமே. 

2-106-2623:
குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக் 
குலவரைப் பரப்பாய 
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி 
தோளிரு பதுமூன்றி 
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் 
வலஞ்சுழி யெம்மானைப் 
பயில வல்லவர் பரகதி காண்பவர் 
அல்லவர் காணாரே. 

2-106-2624:
அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும் 
அரவணைத் துயின்றானுங் 
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் 
மாண்பமர் தடக்கையில் 
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி 
வலங்கொடு பாதத்தால் 
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு 
துன்பங்கள் களைவாரே. 

2-106-2625:
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் 
தவம்புரிந் தவஞ்செய்வார் 
நெறிய லாதன கூறுவர் மற்றவை 
தேறன்மின் மாறாநீர் 
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி 
மருவிய பெருமானைப் 
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில் 
அளவறுப் பொண்ணாதே. 

2-106-2626:
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய 
மருந்தினை வயற்காழி 
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் 
நவிற்றிய தமிழ்மாலை 
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் 
கேட்டுகந் தவர்தம்மை 
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் 
வருத்தம்வந் தடையாவே. 

3-106-3934:
பள்ளம தாய படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ளம் உருக உணருமின்கள் உறுநோ யடையாவே. 

3-106-3935:
காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேற்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழையந் நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே. 

3-106-3936:
பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநுல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ உரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே. 

3-106-3937:
விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை அறியோமே. 

3-106-3938:
கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே. 

3-106-3939:
தண்டொடு சூலந் தழையவேந்தித் தைய லொருபாகங்
கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியின் உரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற தொடர்பைத் தொடர்வோமே. 

3-106-3940:
கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதில் மூன்றும்செற்ற சுடரான் இடர்நீங்க
மல்லிய லுந்திரள் தோளெம்மாதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கிஏத்தி யிருப்பவர் புண்ணியரே. 

3-106-3941:
வெஞ்சின வாளரக் கன்வரையை விறலா லெடுத்தான்றோள்
அஞ்சுமோ ராறிறு நான்குமொன்றும் அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே. 

3-106-3942:
ஏடியல் நான்மு கன்சீர்நெடுமா லெனநின் றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழகர் உலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயஎம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே. 

3-106-3943:
குண்டரும் புத்தருங் கூறையின்றிக் குழுவார் உரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற கழலான் அழலாடி
வண்டம ரும்பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன்எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே. 

3-106-3944:
வாழியெம் மானெனக் கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் தமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லார் அவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரும் இன்பமோர்க்கும் உருவும் உயர்வாமே. 

5-66-5891:
ஓத மார்கட லின்விட முண்டவன் 
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை 
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப் 
பாத மேத்தப் பறையுநம் பாவமே. 

5-66-5892:
கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம் 
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன் 
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப் 
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே. 

5-66-5893:
இளைய காலமெம் மானை யடைகிலாத் 
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல் 
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக் 
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே. 

5-66-5894:
நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க் 
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன் 
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய 
இறைவ னையினி என்றுகொல் காண்பதே. 

5-66-5895:
விண்ட வர்புர மூன்று மெரிகொளத் 
திண்டி றற்சிலை யாலெரி செய்தவன் 
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி 
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே. 

5-66-5896:
படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை 
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான் 
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி 
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே. 

5-66-5897:
நாக்கொண் டுபர வும்மடி யார்வினை 
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன் 
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன் 
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே. 

5-66-5898:
தேடு வார்பிர மன்திரு மாலவர் 
ஆடு பாத மவரும் அறிகிலார் 
மாட வீதி வலஞ்சுழி யீசனைத் 
தேடு வானுறு கின்றதென் சிந்தையே. 

5-66-5899:
கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை 
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும் 
வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய 
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே. 

5-66-5900:
இலங்கை வேந்தன் இருபது தோளிற 
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான் 
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி 
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே. 

6-72-6966:
அலையார் புனற்கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்
தொலையாத வென்றியார் நின்றி ய[ரும்
நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு
இலையார் படைகையி லேந்தி யெங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.