HolyIndia.Org

திருசத்திமுத்தம் ஆலய தேவாரம்

திருசத்திமுத்தம் ஆலயம்
1-8-76:
புண்ணியர் பூதியர் பூதநாதர் 
புடைபடு வார்தம் மனத்தார்திங்கட் 
கண்ணிய ரென்றென்று காதலாளர் 
கைதொழு தேத்த இருந்தவு[ராம் 
விண்ணுயர் மாளிகை மாடவீதி 
விரைகமழ் சோலை சுலாவியெங்கும் 
பண்ணியல் பாடல றாதஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-77:
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் 
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும் 
அத்திய ரென்றென் றடியரேத்தும் 
ஐயன் அணங்கொ டிருந்தவு[ராம் 
தொத்திய லும்பொழில் மாடுவண்டு 
துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற் 
பத்திமைப் பாடல றாதஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-78:
பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார் 
போம்வழி வந்திழி வேற்றமானார் 
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் 
இறையவ ரென்றுமி ருந்தவு[ராம் 
தெங்குயர் சோலைசே ராலைசாலி 
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப் 
பங்கய மங்கை விரும்புமாவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-79:
தேவியோர் கூறின ரேறதேறுஞ் 
செலவினர் நல்குர வென்னைநீக்கும் 
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் 
அப்பனா ரங்கே அமர்ந்தவு[ராம் 
பூவிய லும்பொழில் வாசம்வீசப் 
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப் 
பாவியல் பாடல றாதஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-80:
இந்தணை யுஞ்சடை யார்விடையார் 
இப்பிறப் பென்னை யறுக்கவல்லார் 
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் 
மன்னினர் மன்னி யிருந்தவு[ராம் 
கொந்தணை யுங்குழ லார்விழவில் 
கூட்டமி டையிடை சேரும்வீதிப் 
பந்தணை யும்விர லார்தம்ஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-81:
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் 
கும்பிடு வார்தமக் கன்புசெய்வார் 
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் 
உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ் 
சுற்றிய வாசலின் மாதர்விழாச் 
சொற்கவி பாடநி தானம்நல்கப் 
பற்றிய கையினர் வாழும்ஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-82:
நீறுடை யார்நெடு மால்வணங்கும் 
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம் 
கூறுடை யாருடை கோவணத்தார் 
குவலய மேத்த இருந்தவு[ராம் 
தாறுடை வாழையிற் கூழைமந்தி 
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப் 
பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-83:
வெண்டலை மாலை விரவிப்பூண்ட 
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன் 
வண்டமர் பூமுடி செற்றுகந்த 
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங் 
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் 
கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப் 
பண்டலர் கொண்டு பயிலும்ஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-84:
மாலும் அயனும் வணங்கிநேட 
மற்றவ ருக்கெரி யாகிநீண்ட 
சீலம் அறிவரி தாகிநின்ற 
செம்மையி னாரவர் சேருமூராம் 
கோல விழாவி னரங்கதேறிக் 
கொடியிடை மாதர்கள் மைந்தரோடும் 
பாலென வேமொழிந் தேத்தும்ஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-85:
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் 
பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள் 
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் 
சைவரி டந்தள வேறுசோலைத் 
துன்னிய மாதரும் மைந்தர்தாமும் 
சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப் 
பன்னிய பாடல் பயிலும்ஆவு[ர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 

1-8-86:
எண்டிசை யாரும் வணங்கியேத்தும் 
எம்பெரு மானையெ ழில்கொளாவு[ர்ப் 
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் 
பசுபதி யீச்சரத் தாதிதன்மேல் 
கண்டல்கள் மிண்டிய கானற்காழிக் 
கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன 
கொண்டினி தாயிசை பாடியாடிக் 
கூடு மவருடை யார்கள்வானே.