HolyIndia.Org

தென்குடித்திட்டை ஆலய தேவாரம்

தென்குடித்திட்டை ஆலயம்
3-78-3635:
நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே. 

3-78-3636:
சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே. 

3-78-3637:
போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நுலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே. 

3-78-3638:
காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே. 

3-78-3639:
சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே. 

3-78-3640:
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே. 

3-78-3641:
உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே. 

3-78-3642:
உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே. 

3-78-3643:
பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே. 

3-78-3644:
வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே. 

3-78-3645:
கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே. 

4-90-5021:
கையது காலெரி நாகங் 
கனல்விடு சூலமது 
வெய்யது வேலைநஞ் சுண்ட 
விரிசடை விண்ணவர்கோன் 
செய்யினில் நீல மணங்கம 
ழுந்திரு வேதிகுடி 
ஐயனை ஆரா அமுதினை 
நாமடைந் தாடுதுமே. 

4-90-5022:
கைத்தலை மான்மறி யேந்திய 
கையன் கனல்மழுவன் 
பொய்த்தலை யேந்திநற் பூதி 
யணிந்து பலிதிரிவான் 
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக 
ளுந்திரு வேதிகுடி 
அத்தனை ஆரா அமுதினை 
நாமடைந் தாடுதுமே. 

4-90-5023:
முன்பின் முதல்வன் முனிவனெம் 
மேலை வினைகழித்தான் 
அன்பின் நிலையில் அவுணர் 
புரம்பொடி யானசெய்யுஞ் 
செம்பொனை நன்மலர் மேலவன் 
சேர்திரு வேதிகுடி 
அன்பனை நம்மை யுடையனை 
நாமடைந் தாடுதுமே. 

4-90-5024:
பத்தர்கள் நாளும் மறவார் 
பிறவியை யொன்றறுப்பான் 
முத்தர்கள் முன்னம் பணிசெய்து 
பாரிடம் முன்னுயர்த்தான் 
கொத்தன கொன்றை மணங்கம 
ழுந்திரு வேதிகுடி 
அத்தனை ஆரா அமுதினை 
நாமடைந் தாடுதுமே. 

4-90-5025:
ஆனணைந் தேறுங் குறிகுண 
மாரறி வாரவர்கை 
மானணைந் தாடு மதியும் 
புனலுஞ் சடைமுடியன் 
தேனணைந் தாடிய வண்டு 
பயில்திரு வேதிகுடி 
ஆனணைந் தாடு மழுவனை 
நாமடைந் தாடுதுமே. 

4-90-5026:
எண்ணும் எழுத்துங் குறியும் 
அறிபவர் தாமொழியப் 
பண்ணின் இசைமொழி பாடிய 
வானவர் தாம்பணிவார் 
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் 
பிரான்றிரு வேதிகுடி 
நண்ண அரிய அமுதினை 
நாமடைந் தாடுதுமே. 

4-90-5027:
ஊர்ந்த விடையுகந் தேறிய 
செல்வனை நாமறியோம் 
ஆர்ந்த மடமொழி மங்கையோர் 
பாகம் மகிழ்ந்துடையான் 
சேர்ந்த புனற்சடைச் செல்வப் 
பிரான்றிரு வேதிகுடிச் 
சார்ந்த வயலணி தண்ணமு 
தையடைந் தாடுதுமே. 

4-90-5028:
எரியும் மழுவினன் எண்ணியும் 
மற்றொரு வன்றலையுள் 
திரியும் பலியினன் தேயமும் 
நாடுமெல் லாமுடையான் 
விரியும் பொழிலணி சேறு 
திகழ்திரு வேதிகுடி 
அரிய அமுதினை அன்பர்க 
ளோடடைந் தாடுதுமே. 

4-90-5029:
மையணி கண்டன் மறைவிரி 
நாவன் மதித்துகந்த 
மெய்யணி நீற்றன் விழுமிய 
வெண்மழு வாட்படையான் 
செய்ய கமல மணங்கம 
ழுந்திரு வேதிகுடி 
ஐயனை ஆரா அமுதினை 
நாமடைந் தாடுதுமே. 

4-90-5030:
வருத்தனை வாளரக் கன்முடி 
தோளொடு பத்திறுத்த 
பொருத்தனைப் பொய்யா அருளனைப் 
பூதப் படையுடைய 
திருத்தனைத் தேவர் பிரான்றிரு 
வேதி குடியுடைய 
அருத்தனை ஆரா அமுதினை 
நாமடைந் தாடுதுமே.