HolyIndia.Org

திருகோடிக்கா ஆலய தேவாரம்

திருகோடிக்கா ஆலயம்
2-10-1569:
சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே. 

2-10-1570:
பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே
மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி
இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே. 

2-10-1571:
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே. 

2-10-1572:
பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக்
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. 

2-10-1573:
ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே
ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே. 

2-10-1574:
தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்
கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறும் உய்யும் வகையதே. 

2-10-1575:
வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி
ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே
கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே. 

2-10-1576:
பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப்
புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே. 

2-10-1577:
ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன்
மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி
ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு
கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே. 

2-10-1578:
மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடை
ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே. 

2-10-1579:
மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே. 

5-73-5958:
தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி 
அங்க லக்கழித் தாரருள் செய்தவன் 
கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு 
மங்க லக்குடி மேய மணாளனே. 

5-73-5959:
காவி ரியின்வ டகரைக் காண்டகு 
மாவி ரியும்பொ ழில்மங் கலக்குடித் 
தேவ ரியும்பி ரமனுந் தேடொணாத் 
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே. 

5-73-5960:
மங்க லக்குடி ஈசனை மாகாளி 
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர் 
சங்கு சக்கர தாரி சதுர்முகன் 
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே. 

5-73-5961:
மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடி 
நஞ்ச மாரமு தாக நயந்துகொண் 
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை 
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே. 

5-73-5962:
செல்வ மல்கு திருமங் கலக்குடிச் 
செல்வ மல்கு சிவநிய மத்தராய்ச் 
செல்வ மல்கு செழுமறை யோர்தொழச் 
செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே. 

5-73-5963:
மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய 
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் றன்பெயர் 
உன்னு வாரு முரைக்கவல் லார்களுந் 
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே. 

5-73-5964:
மாத ரார்மரு வும்மங்க லக்குடி 
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன் 
வேத நாயகன் வேதியர் நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 

5-73-5965:
வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி 
விண்ட தாதையைத் தாளற வீசிய 
சண்ட நாயக னுக்கருள் செய்தவன் 
துண்ட மாமதி சூடிய சோதியே. 

5-73-5966:
கூசு வாரலர் குண்டர் குணமிலர் 
நேச மேது மிலாதவர் நீசர்கள் 
மாசர் பால்மங்க லக்குடி மேவிய 
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே. 

5-73-5967:
மங்க லக்குடி யான்கயி லைமலை 
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன் 
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந் 
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.