HolyIndia.Org

சீர்காழி ஆலய தேவாரம்

சீர்காழி ஆலயம்
1-1-1:
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் 
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன் 
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த 
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-2:
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு 
வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன் 
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப் 
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-3:
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி 
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன் 
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப் 
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-4:
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் 
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன் 
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற் 
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-5:
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை ய[ருமிவ னென்ன 
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் 
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப் 
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-6:
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி 
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன் 
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப் 
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-7:
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த 
உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன் 
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம் 
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-8:
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த 
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன் 
துயரிலங்குமுல கில்பலவு[ழிகள் தோன்றும்பொழு தெல்லாம் 
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-9:
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் 
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன் 
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப் 
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-10:
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா 
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் 
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப் 
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

1-1-11:
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய 
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை 
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த 
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே. 

1-2-12:
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம் 
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி 
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின் 
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே. 

1-2-13:
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம் 
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை 
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப் 
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே. 

1-2-14:
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப் 
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த 
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர் 
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே. 

1-2-15:
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ் 
சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(மூ) 
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர் 
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே. 

1-2-16:
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல் 
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை 
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப் 
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே. 
 

1-2-17:
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற் 
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர் 
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும் 
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 

1-2-18:
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி 
உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங் 
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர் 
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே. 

1-2-19:
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள் 
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த 
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர் 
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே. 

1-2-20:
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள் 
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த 
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும் 
போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே. 
 

1-2-21:
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக் 
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங் 
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து 
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே. 

1-2-22:
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக் 
கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை 
பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து 
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே. 

1-4-34:
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற 
வாணுதல் மான்விழி மங்கையோடும் 
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எம்மிறை யேயிமை யாதமுக்கண் 
ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய் 
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-35:
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் 
கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள் 
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர் 
இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய் 
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-36:
கன்னிய ராடல் கலந்துமிக்க 
கந்துக வாடை கலந்துதுங்கப் 
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் 
புகலி நிலாவிய புண்ணியனே 
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் 
தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் 
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-37:
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும் 
நன்னுதல் மான்விழி மங்கையோடும் 
பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண் 
புகலிநி லாவிய புண்ணியனே 
ஏகபெ ருந்தகை யாயபெம்மான் 
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் 
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-38:
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் 
தையலோடுந் தளராத வாய்மைப் 
புந்தியி னான்மறை யோர்களேத்தும் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எந்தமை யாளுடை ஈசஎம்மான் 
எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய் 
வெந்தவெண் ணீறணி வார்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-39:
சங்கொலி இப்பிசு றாமகரந் 
தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற் 
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான் 
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் 
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-40:
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் 
காம்பன தோளியொ டுங்கலந்து 
பூமரு நான்முகன் போல்வரேத்தப் 
புகலி நிலாவிய புண்ணியனே 
ஈமவ னத்தெரி யாட்டுகந்த 
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
வீமரு தண்பொழில் சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-41:
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள் 
இற்றல றவ்விர லொற்றியைந்து 
புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண் 
புகலி நிலாவிய புண்ணியனே 
இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும் 
எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய் 
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-42:
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் 
செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப் 
பொறியர வத்தணை யானுங்காணாப் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எறிமழு வோடிள மான்கையின்றி 
இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய் 
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-43:
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த 
பான்மைய தன்றியும் பல்சமணும் 
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற 
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே. 

1-4-44:
விண்ணிழி கோயில் விரும்பிமேவும் 
வித்தக மென்கொலி தென்றுசொல்லிப் 
புண்ணிய னைப்புக லிந்நிலாவு 
பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி 
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி 
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன 
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் 
பாரொடு விண்பரி பாலகரே. 

1-9-87:
வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம் 
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானுர் 
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம் 
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே. 

1-9-88:
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை 
கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானுர் 
(மூ)புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம் 
விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே. 
 
(மூ) குடைப்பாளை என்றும் பாடம். 

1-9-89:
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப் 
படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவு[ர் 
நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல் 
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே. 

1-9-90:
தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு 
மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானுர் 
பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர 
மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே. 

1-9-91:
நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார் 
வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான் 
தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி 
மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே. 

1-9-92:
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக் 
கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானுர் 
தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை 
(மூமூ)விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே. 
(மூமூ) விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம். 

1-9-93:
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன் 
தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னுர் 
கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம் 
விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே. 

1-9-94:
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும் 
பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனுர் 
கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல் 
வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே. 

1-9-95:
மாசேறிய உடலாரமண் (மூ)கழுக்கள்ளொடு தேரர் 
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானுர் 
தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார் 
வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே. 
(மூ) குழுக்கள் என்றும் பாடம். 

1-9-96:
வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப் பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல் ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார் கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே. 11 

1-19-195:
பிறையணி படர்சடை முடியிடைப் 
பெருகிய புனலுடை யவனிறை 
இறையணி வளையிணை முலையவ 
ளிணைவன தெழிலுடை யிடவகை 
கறையணி பொழில்நிறை வயலணி 
கழுமலம் அமர்கனல் உருவினன் 
நறையணி மலர்நறு விரைபுல்கு 
நலம்மலி கழல்தொழன் மருவுமே. 

1-19-196:
பிணிபடு கடல்பிற விகளற 
லெளிதுள ததுபெரு கியதிரை 
அணிபடு கழுமலம் இனிதம 
ரனலுரு வினனவிர் சடைமிசை 
தணிபடு கதிர்வள ரிளமதி 
புனைவனை உமைதலை வனைநிற 
மணிபடு கறைமிட றனைநல 
மலிகழ லிணைதொழன் மருவுமே. 

1-19-197:
வரியுறு புலியத ளுடையினன் 
வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி 
விரியுறு சடைவிரை புழைபொழில் 
விழவொலி மலிகழு மலம்அமர் 
எரியுறு நிறஇறை வனதடி 
இரவொடு பகல்பர வுவர்தம 
தெரியுறு வினைசெறி கதிர்முனை 
இருள்கெட நனிநினை வெய்துமதே. 

1-19-198:
வினைகெட மனநினை வதுமுடி 
கெனின்நனி தொழுதெழு குலமதி 
புனைகொடி யிடைபொருள் தருபடு 
களிறின துரிபுதை யுடலினன் 
மனைகுட வயிறுடை யனசில 
வருகுறள் படையுடை யவன்மலி 
கனைகட லடைகழு மலமமர் 
கதிர்மதி யினனதிர் கழல்களே. 

1-19-199:
தலைமதி புனல்விட அரவிவை 
தலைமைய தொருசடை யிடையுடன் 
நிலைமரு வவொரிட மருளினன் 
நிழன்மழு வினொடழல் கணையினன் 
மலைமரு வியசிலை தனின்மதி 
லெரியுண மனமரு வினன்நல 
கலைமரு வியபுற வணிதரு 
கழுமலம் இனிதமர் தலைவனே. 

1-19-200:
வரைபொரு திழியரு விகள்பல 
பருகொரு கடல்வரி மணலிடை 
கரைபொரு திரையொலி கெழுமிய 
கழுமலம் அமர்கன லுருவினன் 
அரைபொரு புலியதள் உடையினன் 
அடியிணை தொழவரு வினையெனும் 
உரைபொடி படவுறு துயர்கெட 
வுயருல கெய்தலொரு தலைமையே. 

1-19-201:
முதிருறு கதிர்வளர் இளமதி 
சடையனை நறநிறை தலைதனில் 
உதிருறு மயிர்பிணை தவிர்தசை 
யுடைபுலி அதளிடை யிருள்கடி 
கதிருறு சுடரொளி கெழுமிய 
கழுமலம் அமர்மழு மலிபடை 
அதிருறு கழலடி களதடி 
தொழுமறி வலதறி வறியமே. 

1-19-202:
கடலென நிறநெடு முடியவ 
னடுதிறல் தெறஅடி சரணென 
அடல்நிறை படையரு ளியபுக 
ழரவரை யினன்அணி கிளர்பிறை 
விடம்நிறை மிடறுடை யவன்விரி 
சடையவன் விடையுடை யவனுமை 
உடனுறை பதிகடல் மறுகுடை 
யுயர்கழு மலவியன் நகரதே. 

1-19-203:
கொழுமல ருறைபதி யுடையவன் 
நெடியவ னெனவிவர் களுமவன் 
விழுமையை யளவறி கிலரிறை 
விரைபுணர் பொழிலணி விழவமர் 
கழுமலம் அமர்கன லுருவினன் 
அடியிணை தொழுமவ ரருவினை 
எழுமையு மிலநில வகைதனி 
லெளிதிமை யவர்விய னுலகமே. 

1-19-204:
அமைவன துவரிழு கியதுகி 
லணியுடை யினர்அமண் உருவர்கள் 
சமையமும் ஒருபொரு ளெனுமவை 
சலநெறி யனஅற வுரைகளும் 
இமையவர் தொழுகழு மலமம 
ரிறைவன தடிபர வுவர்தமை 
நமையல வினைநல னடைதலி 
லுயர்நெறி நனிநணு குவர்களே. 

1-19-205:
பெருகிய தமிழ்விர கினன்மலி 
பெயரவ னுறைபிணர் திரையொடு 
கருகிய நிறவிரி கடலடை 
கழுமல முறைவிட மெனநனி 
பெருகிய சிவனடி பரவிய 
பிணைமொழி யனவொரு பதுமுடன் 
மருவிய மனமுடை யவர்மதி 
யுடையவர் விதியுடை யவர்களே. 

1-24-250:
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா 
காவா யெனநின் றேத்துங் காழியார் 
மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம் 
பாவா ரின்சொற் பயிலும் பரமரே. 

1-24-251:
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் 
கந்த மாலை கொடுசேர் காழியார் 
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம் 
அந்தி நட்டம் ஆடும் அடிகளே. 

1-24-252:
தேனை வென்ற மொழியா ளொருபாகங் 
கான மான்கைக் கொண்ட காழியார் 
வான மோங்கு கோயி லவர்போலாம் 
ஆன இன்பம் ஆடும் அடிகளே. 

1-24-253:
மாணா வென்றிக் காலன் மடியவே 
காணா மாணிக் களித்த காழியார் 
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம் 
பேணார் புரங்கள் அட்ட பெருமானே. 

1-24-254:
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல் 
காடே றிச்சங் கீனுங் காழியார் 
வாடா மலராள் பங்க ரவர்போலாம் 
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே. 

1-24-255:
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் 
கங்கை புனைந்த சடையார் காழியார் 
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ் 
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே. 

1-24-256:
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங் 
கல்ல வடத்தை யுகப்பார் காழியார் 
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம் 
பல்ல விடத்தும் பயிலும் பரமரே. 

1-24-257:
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக் 
கடுத்து முரிய அடர்த்தார் காழியார் 
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம் 
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே. 

1-24-258:
ஆற்ற லுடைய அரியும் பிரமனுந் 
தோற்றங் காணா வென்றிக் காழியார் 
ஏற்ற மேறங் கேறு மவர்போலாங் 
கூற்ற மறுகக் குமைத்த குழகரே. 

1-24-259:
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர் 
கரக்கும் உரையை விட்டார் காழியார் 
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம் 
அருப்பின் முலையாள் பங்கத் தையரே. 

1-24-260:
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச் 
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன 
பாரார் புகழப் பரவ வல்லவர் 
ஏரார் வானத் தினிதா இருப்பரே. 

1-30-316:
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக் 
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும் 
பதியா வதுபங் கயநின் றலரத்தேன் 
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே. 

1-30-317:
ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன் 
மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந் 
தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த 
பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே. 

1-30-318:
வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன் 
புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன் 
மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப் 
பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே. 

1-30-319:
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி 
அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன் 
இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும் 
புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே. 

1-30-320:
காதார்கன பொற்குழை தோட திலங்கத் 
தாதார்மலர் தண்சடை யேற முடித்து 
(மூ)நாதான்உறை யும்மிட மாவது நாளும் 
போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே. 
(மூ) நாதன் - நாதான் என நீண்டது. 

1-30-321:
வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன் 
கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன் 
குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன் 
புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே. 

1-30-322:
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச் 
செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக 
அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப் 
பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே. 

1-30-323:
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல 
எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற 
கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி 
பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே. 

1-30-324:
மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத் 
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி 
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம் 
பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. 

1-30-325:
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் 
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக் 
கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம் 
புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே. 

1-30-326:
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன் 
புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல் 
உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை 
வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே. 

1-34-360:
அடலே றமருங் கொடியண்ணல் 
மடலார் குழலா ளொடுமன்னுங் 
கடலார் புடைசூழ் தருகாழி 
தொடர்வா ரவர்தூ நெறியாரே. 

1-34-361:
திரையார் புனல்சூ டியசெல்வன் 
வரையார் மகளோ டுமகிழ்ந்தான் 
கரையார் புனல்சூழ் தருகாழி 
நிரையார் மலர்தூ வுமினின்றே. 

1-34-362:
இடியார் குரலே றுடையெந்தை 
துடியா ரிடையா ளொடுதுன்னுங் 
கடியார் பொழில்சூழ் தருகாழி 
அடியார் அறியார் அவலம்மே. 

1-34-363:
ஒளியார் விடமுண் டவொருவன் 
அளியார் குழல்மங் கையொடன்பாய் 
களியார் பொழில்சூழ் தருகாழி 
எளிதாம் அதுகண் டவரின்பே. 

1-34-364:
பனியார் மலரார் தருபாதன் 
முனிதா னுமையோ டுமுயங்கி 
கனியார் பொழில்சூழ் தருகாழி 
இனிதாம் அதுகண் டவரீடே. 

1-34-365:
கொலையார் தருகூற் றமுதைத்து 
மலையான் மகளோ டுமகிழ்ந்தான் 
கலையார் தொழுதேத் தியகாழி 
தலையால் தொழுவார் தலையாரே. 

1-34-366:
திருவார் சிலையால் எயிலெய்து 
உருவார் உமையோ டுடனானான் 
கருவார் பொழில்சூழ் தருகாழி 
மருவா தவர்வான் மருவாரே. 

1-34-367:
அரக்கன் வலியொல் கஅடர்த்து 
வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான் 
சுரக்கும் புனல்சூழ் தருகாழி 
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 

1-34-368:
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான் 
உருவிற் பெரியா ளொடுசேருங் 
கருநற் பரவை கமழ்காழி 
மருவப் பிரியும் வினைமாய்ந்தே. 

1-34-369:
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற 
அமைந்தான் உமையோ டுடனன்பாய்க் 
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி 
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 

1-34-370:
நலமா கியஞான சம்பந்தன் 
கலமார் கடல்சூழ் தருகாழி 
நிலையா கநினைந் தவர்பாடல் 
வலரா னவர்வான் அடைவாரே. 

1-47-504:
பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய் 
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே 
சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ் 
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே. 

1-47-505:
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய் 
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ் 
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார் 
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே. 

1-47-506:
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய் 
ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே 
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச் 
சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே. 

1-47-507:
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய் 
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே 
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள் 
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே. 

1-47-508:
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக் 
கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே 
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ் 
சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே. 

1-47-509:
கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும் 
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே 
எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த் 
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 

1-47-510:
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற் 
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே 
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து 
சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே. 

1-47-511:
மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால் 
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார் 
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ் 
சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே. 

1-47-512:
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது 
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே 
நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச் 
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே. 

1-47-513:
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும் 
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம் 
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே 
சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே. 

1-47-514:
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை 
அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை 
பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற் 
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே. 

1-60-645:
வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் 
ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத் 
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் 
பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. 

1-60-646:
எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை 
அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே 
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும் 
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. 

1-60-647:
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக் 
கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை 
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும் 
பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. 

1-60-648:
காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற் 
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர் 
சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும் 
ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. 

1-60-649:
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த 
காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள் 
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும் 
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. 

1-60-650:
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச 
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள் 
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத 
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. 

1-60-651:
முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை 
அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர் 
தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங் 
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. 

1-60-652:
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி 
ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே 
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர் 
கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே. 

1-60-653:
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன் 
பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன் 
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும் 
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. 

1-60-654:
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் 
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந் 
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் 
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. 

1-60-655:
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங் 
கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத் 
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த 
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 

1-63-678:
எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா 
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே 
சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன் 
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 

1-63-679:
பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே 
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே 
இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல் 
வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 

1-63-680:
நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே 
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே 
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர் 
புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. 

1-63-681:
சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன் 
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே 
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய 
வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. 

1-63-682:
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன் 
பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே 
அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத் 
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே. 

1-63-683:
கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே 
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே 
அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற் 
தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே. 

1-63-684:
முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே 
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே 
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச் 
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 

1-63-685:
எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக் 
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே 
ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப் 
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே. 

1-63-686:
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங் 
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார் 
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே 
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. 

1-63-687:
நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல 
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே 
அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய 
கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. 

1-63-688:
கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய 
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே 
நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த 
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே. 

1-63-689:
கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவு[ர்க்கவுணி 
நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல 
படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க் 
கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. 

1-66-712:
பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம் 
அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும் 
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின் 
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே. 

1-66-713:
சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப் 
போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர் 
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த 
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே. 

1-66-714:
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய 
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார் 
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத் 
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே. 

1-66-715:
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட 
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக் 
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற் 
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே. 

1-66-716:
கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த 
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி 
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை 
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே. 

1-66-717:
மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான் 
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க 
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே 
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே. 

1-66-718:
இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து 
அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின் 
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால் 
தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே. 

1-66-719:
மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும் 
எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி 
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற் 
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே. 

1-66-720:
போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும் 
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலனிருநான்கின் 
மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னுலர் 
சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே. 

1-66-721:
வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச் 
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய 
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல் 
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே. 

1-74-798:
நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால் 
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான் 
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த 
இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-799:
உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம் 
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால் 
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக 
இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-800:
பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக் 
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி 
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி 
எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-801:
நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங் 
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப் 
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக 
எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-802:
செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந் 
தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை 
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக 
எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-803:
பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய் 
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து 
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக 
என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-804:
உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர் 
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல் 
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக 
எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-805:
விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன் 
திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேய[ன்றிய 
புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக 
எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-806:
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப் 
படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற் 
பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக 
இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-807:
ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர் 
கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும் 
போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக 
ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 

1-74-808:
பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக 
மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத் 
தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை 
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே. 

1-75-809:
காலைநன் மாமலர் கொண்டடி பரவிக் 
கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன் 
ஓலம திடமுன் உயிரொடு மாள 
உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான் 
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி 
மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி 
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-810:
பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற் 
பிறையொடும் அரவினை யணிந் தழகாகப் 
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள் 
பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி 
மண்ணினை மூடி வான்முக டேறி 
மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து 
விண்ணள வோங்கி வந்திழி கோயில் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-811:
ஓரியல் பில்லா உருவம தாகி 
ஒண்டிறல் வேடன துருவது கொண்டு 
காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக் 
கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான் 
நேரிசை யாக அறுபத முரன்று 
நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து 
வேரிக ளெங்கும் விம்மிய சோலை 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-812:
வண்டணை கொன்றை வன்னியு மத்தம் 
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க 
கொண்டணி சடையர் விடையினர் பூதங் 
கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப் 
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் 
பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல் 
வெண்பிறை சூடி உமையவ ளோடும் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-813:
சடையினர் மேனி நீறது பூசித் 
தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக் 
கடைதொறும் வந்து பலியது கொண்டு 
கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப் 
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி 
உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து 
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-814:
கரைபொரு கடலில் திரையது மோதக் 
கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி 
உரையுடை முத்தம் மணலிடை வைகி 
ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும் 
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள் 
புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த 
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-815:
வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை 
மறுகிட வருமத களிற்றினை மயங்க 
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல் 
கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில் 
நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப 
நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு 
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-816:
பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப் 
பலதலை முடியொடு தோளவை நெரிய 
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே 
ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய 
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம் 
கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர் 
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-817:
ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண 
அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச் 
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ் 
செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண் 
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக் 
கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த 
வேறெமை யாள விரும்பிய விகிர்தர் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-818:
பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் 
பயில்தரு மறவுரை விட்டழ காக 
ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன் 
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து 
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக் 
கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய 
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 

1-75-819:
விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை 
நண்ணிய நுலன் ஞானச ம்பந்தன் 
நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும் 
பண்ணியல் பாகப் பத்திமை யாலே 
பாடியு மாடியும் பயில வல்லார்கள் 
விண்ணவர் விமானங் கொடுவர வேறி 
வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே. 

1-79-853:
அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் 
அரவமும் மதியமும் விரவிய அழகர் 
மயிலுறு சாயல் வனமுலை யொருபால் 
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர் 
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப் 
பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர் 
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-854:
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர் 
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர் 
பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும் 
படர்சடை யடிகளார் பதியத னயலே 
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும் 
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற் 
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-855:
எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம் 
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் 
மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம் 
வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர் 
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர் 
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட 
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-856:
எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர் 
ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித் 
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள் 
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி 
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச 
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த 
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-857:
ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக 
உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர் 
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற் 
படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம் 
நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம் 
நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக் 
காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-858:
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி 
முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப் 
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த 
பேரரு ளாளனார் பேணிய கோயில் 
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ் 
சாந்தமு மேந்திய கையின ராகிக் 
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-859:
கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார் 
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின் 
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம் 
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம் 
மலைக்கணித் தாவர வன்றிரை முரல 
மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக் 
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-860:
புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன் 
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள் 
பயம்பல படவடர்த் தருளிய பெருமான் 
பரிவொடு மினிதுறை கோயில தாகும் 
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும் 
வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக் 
கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-861:
விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும் 
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம் 
பலங்களால் நேடியும் அறிவரி தாய 
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில் 
மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும் 
மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து 
கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-862:
ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும் 
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர் 
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த 
மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச் 
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத் 
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக் 
காம்பன தோளியொ டினிதுறை கோயில் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 

1-79-863:
கலிகெழு பாரிடை ய[ரென வுளதாங் 
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல் 
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர் 
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின் 
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும் 
உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல் 
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும் 
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே. 

1-81-875:
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ் 
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த 
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங் 
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே. 

1-81-876:
துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந் 
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி 
ஒளிவெண் டலைமாலை உகந்தா னுர்போலுங் 
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே. 

1-81-877:
ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச் 
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால் 
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால் 
காலற் காய்ந்தானுர் காழிந் நகர்தானே. 

1-81-878:
இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும் 
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும் 
பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங் 
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே. 

1-81-879:
மாலும் பிரமனும் அறியா மாட்சியான் 
தோலும் புரிநுலுந் துதைந்த வரைமார்பன் 
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங் 
காலம் பகராதார் காழிந் நகர்தானே. 

1-81-880:
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள் 
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள் 
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக் 
கங்கை தரித்தானுர் காழிந் நகர்தானே. 

1-81-881:
வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த 
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன் 
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப் 
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே. 

1-90-969:
அரனை உள்குவீர், பிரம னுருளெம் 
பரனை யேமனம், பரவி உய்ம்மினே. 

1-90-970:
காண உள்குவீர், வேணு நற்புரத் 
தாணுவின் கழல், பேணி உய்ம்மினே. 

1-90-971:
நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல் 
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே. 

1-90-972:
அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன் 
வெங்கு ருமன்னும், எங்க ளீசனே. 

1-90-973:
வாணி லாச்சடைத், தோணி வண்புரத் 
தாணி நற்பொனைக், காணு மின்களே. 

1-90-974:
பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும் 
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே. 

1-90-975:
கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம் 
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே. 

1-90-976:
நறவ மார்பொழிற், புறவம் நற்பதி 
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே. 

1-90-977:
தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன் 
அன்று நெரித்தவா, நின்று நினைமினே. 

1-90-978:
அயனும் மாலுமாய், முயலுங் காழியான் 
பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே. 

1-90-979:
தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன் 
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே. 

1-90-980:
தொழும னத்தவர், கழும லத்துறை 
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 

1-97-1047:
எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த 
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச் 
செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும் 
பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே. 

1-97-1048:
மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற 
நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும் 
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப் 
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே. 

1-97-1049:
வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே 
புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர் 
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் 
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே. 

1-97-1050:
துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து 
மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப் 
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் 
பொன்னார்புரிநுல் அந்தணர்வாழும் புறவம்மே. 

1-97-1051:
தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங் 
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு 
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும் 
பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே. 

1-97-1052:
கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம் 
அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப் 
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர் 
பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே. 

1-97-1053:
எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக் 
கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப் 
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர் 
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே. 

1-97-1054:
பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத் 
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும் 
அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற் 
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே. 

1-97-1055:
மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும் 
மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங் 
கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர் 
பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே. 

1-97-1056:
வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான் 
மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம் 
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர் 
பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே. 

1-97-1057:
பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து 
மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற 
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன் 
இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே. 

1-102-1102:
உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங் 
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி 
அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த 
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே. 

1-102-1103:
மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக் 
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி 
மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே 
ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே. 

1-102-1104:
இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக் 
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி 
அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென் 
றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே. 

1-102-1105:
எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக் 
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப் 
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு 
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே. 

1-102-1106:
மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக் 
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி 
உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக் 
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே. 

1-102-1107:
குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு 
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி 
வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை 
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே. 

1-102-1108:
உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு 
கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி 
இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த 
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே. 

1-102-1109:
ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக் 
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப் 
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும் 
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே. 

1-102-1110:
மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங் 
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித் 
தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா 
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே. 

1-102-1111:
வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக் 
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி 
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன் 
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே. 

1-104-1122:
ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை 
சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான் 
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த 
ஆடிய எம்மிறைய[ர் புகலிப் பதியாமே. 

1-104-1123:
ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று 
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய 
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல 
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே. 

1-104-1124:
ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ 
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன் 
பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற 
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே. 

1-104-1125:
வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங் 
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில் 
அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப் 
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே. 

1-104-1126:
சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம் 
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன் 
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர் 
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே. 

1-104-1127:
மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து 
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம் 
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும் 
புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே. 

1-104-1128:
மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள் 
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ் 
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம் 
அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே. 

1-104-1129:
வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும் 
நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன் 
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள் 
ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே. 

1-104-1130:
தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி 
ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம் 
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த 
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே. 

1-104-1131:
வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும் 
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல் 
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த 
புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே. 

1-104-1132:
வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப் 
போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள் 
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் 
ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே. 

1-109-1174:
வாருறு வனமுலை மங்கைபங்கன் 
நீருறு சடைமுடி நிமலனிடங் 
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார் 
சீருறு வளவயற் சிரபுரமே. 

1-109-1175:
அங்கமொ டருமறை யருள்புரிந்தான் 
திங்களொ டரவணி திகழ்முடியன் 
மங்கையொ டினிதுறை வளநகரஞ் 
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே. 

1-109-1176:
பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித் 
திரிந்தவர் புரமவை தீயின்வேவ 
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத் 
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே. 

1-109-1177:
நீறணி மேனியன் நீள்மதியோ 
டாறணி சடையினன் அணியிழையோர் 
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ் 
சேறணி வளவயல் சிரபுரமே. 

1-109-1178:
அருந்திறல் அவுணர்கள் அரணழியச் 
சரந்துரந் தெரிசெய்த சங்கரனுர் 
குருந்தொடு கொடிவிடு மாதவிகள் 
திருந்திய புறவணி சிரபுரமே. 

1-109-1179:
கலையவன் மறையவன் காற்றொடுதீ 
மலையவன் விண்ணொடு மண்ணுமவன் 
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த 
சிலையவன் வளநகர் சிரபுரமே. 

1-109-1180:
வானமர் மதியொடு மத்தஞ்சூடித் 
தானவர் புரமெய்த சைவனிடங் 
கானமர் மடமயில் பெடைபயிலுந் 
தேனமர் பொழிலணி சிரபுரமே. 

1-109-1181:
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக் 
கறுத்தவன் காரரக் கன்முடிதோள் 
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன் 
செறுத்தவன் வளநகர் சிரபுரமே. 

1-109-1182:
வண்ணநன் மலருறை மறையவனுங் 
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய் 
விண்ணுற வோங்கிய விமலனிடம் 
திண்ணநன் மதிலணி சிரபுரமே. 

1-109-1183:
வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார் 
கற்றிலர் அறவுரை புறனுரைக்கப் 
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச் 
செற்றவன் வளநகர் சிரபுரமே. 

1-109-1184:
அருமறை ஞானசம் பந்தனந்தண் 
சிரபுர நகருறை சிவனடியைப் 
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார் 
திருவொடு புகழ்மல்கு தேசினரே. 

1-117-1259:
காட தணிகலங் காரர வம்பதி காலதனிற் 
தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர் 
வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர் 
பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே. 

1-117-1260:
கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை 
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண் 
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும் 
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே. 

1-117-1261:
கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது 
தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம் 
ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின் 
பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. 

1-117-1262:
உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை 
எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச் 
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னுல் 
விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே. 

1-117-1263:
கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன 
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின் 
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான் 
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே. 

1-117-1264:
சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங் 
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும் 
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார் 
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே. 

1-117-1265:
காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு 
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட் 
டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச் 
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே. 

1-117-1266:
நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண் 
மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன் 
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ் 
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே. 

1-117-1267:
இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள் 
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது 
கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச் 
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே. 

1-117-1268:
அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன் 
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர் 
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர் 
கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே. 

1-117-1269:
கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர் 
எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு 
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய 
கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே. 

1-117-1270:
கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை 
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச் 
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ் 
செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே. 

1-126-1359:
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப் 
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் 
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் 
சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் 
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற் 
தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங் 
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் 
காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. 

1-126-1360:
பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப் 
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும் 
உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே 
று{ராவு[ரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை 
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார் 
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங் 
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங் 
காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே. 

1-126-1361:
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் 
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ 
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப் 
பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும் 
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் 
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங் 
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் 
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 

1-126-1362:
அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத் 
தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம் 
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும் 
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய 
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ் 
மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங் 
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக் 
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 

1-126-1363:
திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் 
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே 
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப் 
போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ் 
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத் 
தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங் 
கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக் 
காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே. 

1-126-1364:
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் 
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய் 
ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் 
கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப் 
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும் 
பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங் 
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் 
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே. 

1-126-1365:
பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப் 
பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா 
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய் 
மூடாவு[டா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச் 
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் 
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங் 
கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள் 
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 

1-126-1366:
செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற் 
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன் 
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற் 
பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட் 
டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற் 
காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங் 
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக் 
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே. 

1-126-1367:
பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப் 
பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள 
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ 
னோதானோதான் அ/துணரா துருவின தடிமுடியுஞ் 
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின் 
றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங் 
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங் 
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 

1-126-1368:
தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத் 
தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும் 
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க் 
கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப் 
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும் 
போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங் 
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற் 
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 

1-126-1369:
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக் 
கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத் 
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை 
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள் 
எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண் 
டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா 
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர் 
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே. 

1-127-1370:
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் 
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் 
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் 
பிரம புரத்துறை பெம்மா னெம்மான். 

1-127-1371:
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் 
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் 
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் 
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன். 

1-127-1372:
புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே. 

1-127-1373:
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன். 

1-127-1374:
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன். 

1-127-1375:
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி 
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி 
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி 
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி. 

1-127-1376:
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் 
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் 
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் 
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில். 

1-127-1377:
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன். 

1-127-1378:
தசமுக னெறிதர வு[ன்று சண்பையான் 
தசமுக னெறிதர வு[ன்று சண்பையான் 
தசமுக னெறிதர வு[ன்று சண்பையான் 
தசமுக னெறிதர வு[ன்று சண்பையான். 

1-127-1379:
காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே. 

1-127-1380:
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே. 

1-127-1381:
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை. 

1-128-1382:
ஓருரு வாயினை மானாங் காரத் 
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் 
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் 
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை 
இருவரோ டொருவ னாகி நின்றனை 

1-129-1383:
சேவுயருந் திண்கொடியான் திருவடியே 
சரணென்று சிறந்தவன்பால் 
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான் 
வழிபட்ட நலங்கொள்கோயிற் 
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச் 
செங்குமுதம் வாய்கள்காட்டக் 
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் 
கண்காட்டுங் கழுமலமே. 

1-129-1384:
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய 
மலைச்செல்வி பிரியாமேனி 
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான் 
அமரர்தொழ வமருங்கோயில் 
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும் 
இறைவனது தன்மைபாடிக் 
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் 
பாட்டயருங் கழுமலமே. 

1-129-1385:
அலங்கல்மலி வானவருந் தானவரும் 
அலைகடலைக் கடையப்பூதங் 
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி 
கண்டத்தோன் கருதுங்கோயில் 
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் 
கூன்சலிக்குங் காலத்தானுங் 
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய 
மெய்யர்வாழ் கழுமலமே. 

1-129-1386:
பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச் 
சயமெய்தும் பரிசுவெம்மைப் 
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு 
சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில் 
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் 
சூளிகைமேல் மகப்பாராட்டக் 
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு 
மகிழ்வெய்துங் கழுமலமே. 

1-129-1387:
ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க 
ளொடுவன்னி மத்தமன்னும் 
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர் 
செஞ்சடையான் நிகழுங்கோயில் 
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி 
மலையென்ன நிலவிநின்ற 
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு 
சுதைமாடக் கழுமலமே. 

1-129-1388:
தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து 
தழலணைந்து தவங்கள்செய்த 
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ 
ழமையளித்த பெருமான்கோயில் 
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப 
அதுகுடித்துக் களித்துவாளை 
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய 
அகம்பாயுங் கழுமலமே. 

1-129-1389:
புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் 
நிலனைந்தாய்க் கரணம்நான்காய் 
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு 
வாய்நின்றான் அமருங்கோயில் 
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு 
கொம்புதைப்பக் கொக்கின்காய்கள் 
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப் 
புள்ளிரியுங் கழுமலமே. 

1-129-1390:
அடல்வந்த வானவரை யழித்துலகு 
தெழித்துழலும் அரக்கர்கோமான் 
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல் 
பணிகொண்டோ ன் மேவுங்கோயில் 
நடவந்த உழவரிது நடவொணா 
வகைபரலாய்த் தென்றுதுன்று 
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற் 
கரைகுவிக்குங் கழுமலமே. 

1-129-1391:
பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு 
கேழலுரு வாகிப்புக்கிட் 
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா 
வகைநின்றான் அமருங்கோயில் 
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள் 
கொண்டணிந்து பரிசினாலே 
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து 
நின்றேத்துங் கழுமலமே. 

1-129-1392:
குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை 
மெய்த்தவமாய் நின்றுகையில் 
உணல்மருவுஞ் சமணர்களு முணராத 
வகைநின்றான் உறையுங்கோயில் 
மணமருவும் வதுவையொலி விழவினொலி 
யிவையிசைய மண்மேல்தேவர் 
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க 
மேல்படுக்குங் கழுமலமே. 

1-129-1393:
கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து 
ளீசன்றன் கழல்மேல்நல்லோர் 
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் 
பந்தன்றான் நயந்துசொன்ன 
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார் 
தூமலராள் துணைவராகி 
முற்றுலக மதுவாண்டு முக்கணான் 
அடிசேர முயல்கின்றாரே. 

2-1-1470:
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. 

2-1-1471:
எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே. 

2-1-1472:
சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. 

2-1-1473:
சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே. 

2-1-1474:
பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே. 

2-1-1475:
மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே. 

2-1-1476:
வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே. 

2-1-1477:
வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே. 

2-1-1478:
வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே. 

2-1-1479:
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. 

2-11-1580:
நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. 

2-11-1581:
நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே. 

2-11-1582:
அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே. 

2-11-1583:
புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 

2-11-1584:
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே. 

2-11-1585:
செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே. 

2-11-1586:
துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே. 

2-11-1587:
குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே. 

2-11-1588:
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னாணடி கூறுமே. 

2-11-1589:
கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே. 

2-17-1645:
நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே. 

2-17-1646:
அரவார் கரவன் அமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே. 

2-17-1647:
ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேகந் தவழும் வேணு புரமே. 
 

2-17-1648:
காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுஇன் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே. 

2-17-1649:
அரையார் கலைசேர் அனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே. 

2-17-1650:
ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே. 

2-17-1651:
ஏவும் படைவேந் தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே. 

2-17-1652:
கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் இருவர் அறியா இறைய[ர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணிற் றிகழும் வேணு புரமே. 

2-17-1653:
போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் மறியா அடியார் இறைய[ர்
மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நுல்
மீகம் மறிவார் வேணு புரமே. 

2-17-1654:
கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே. 

2-25-1731:
உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 

2-25-1732:
பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே. 

2-25-1733:
வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே. 

2-25-1734:
கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிகளை யடைந் தன்பு செய்யுமே. 

2-25-1735:
பாதத் தாரொலி பல்சி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே. 

2-25-1736:
மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறையி னானுறை யும்பு கலியை
நிறையி னாற்றொழ நேச மாகுமே. 

2-25-1737:
கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே. 

2-25-1738:
அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலிய[ர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 

2-25-1739:
மாலும் நான்முகன் றானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலு மேனியன் பூம்பு கலியுள்
பால தாடிய பண்ப னல்லனே. 

2-25-1740:
நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
நின்ற வன்னிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே. 

2-25-1741:
புல்ல மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை இருநி லத்துளே. 

2-29-1775:
முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வு[ர்வினவின் ஞாலந்
துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே. 

2-29-1776:
வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே. 

2-29-1777:
பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே. 

2-29-1778:
மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே. 

2-29-1779:
முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே. 

2-29-1780:
வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே. 

2-29-1781:
நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 

2-29-1782:
பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே. 

2-29-1783:
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே. 

2-29-1784:
கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானுர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே. 

2-29-1785:
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 

2-40-1895:
எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே. 

2-40-1896:
தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே. 

2-40-1897:
நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே. 

2-40-1898:
சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே. 

2-40-1899:
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே. 

2-40-1900:
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே. 

2-40-1901:
சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. 

2-40-1902:
எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே. 

2-40-1903:
கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே. 

2-40-1904:
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே. 

2-40-1905:
தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே. 

2-49-1993:
பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறும்
கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்
பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே. 

2-49-1994:
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 

2-49-1995:
நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி
தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே. 

2-49-1996:
மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறுங்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே. 

2-49-1997:
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே. 

2-49-1998:
மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானைநி னைந்தி ருந்திசை பாடுவார் வினை
செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே. 

2-49-1999:
தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே. 

2-49-2000:
மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே. 

2-49-2001:
பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி
திருவின் நாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே. 

2-49-2002:
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடுங் கூடிய வேடனே சுட லைப்பொ டியணி
அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே. 

2-49-2003:
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும் உண்டெ னப்பெயர் பெற்ற வு[ர்திகழ்
கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே. 

2-54-2048:
உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே. 

2-54-2049:
நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 

2-54-2050:
அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்
பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே. 

2-54-2051:
கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே. 

2-54-2052:
நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி
தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே. 

2-54-2053:
மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 

2-54-2054:
களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே. 

2-54-2055:
பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 

2-54-2056:
சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே. 

2-54-2057:
நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 

2-54-2058:
ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே. 

2-59-2102:
நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே. 

2-59-2103:
ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே. 

2-59-2104:
வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்
கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே. 

2-59-2105:
மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்
பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே. 

2-59-2106:
பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே. 

2-59-2107:
மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே. 

2-59-2108:
புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே. 

2-59-2109:
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்
பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே. 

2-59-2110:
மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே. 

2-59-2111:
அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே. 

2-59-2112:
ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே. 

2-65-2167:
கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும் 
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் 
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் 
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2168:
கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும் 
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந் 
தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும் 
பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2169:
சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங் 
கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் 
மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும் 
பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2170:
நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங் 
கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும் 
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் 
பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2171:
தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும் 
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும் 
ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும் 
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2172:
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும் 
அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும் 
வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும் 
பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2173:
பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங் 
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந் 
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும் 
பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2174:
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் 
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும் 
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும் 
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2175:
அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங் 
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும் 
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும் 
பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2176:
வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் 
அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும் 
உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும் 
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 

2-65-2177:
பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய 
அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே 
நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் 
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே. 

2-70-2222:
பிரமனுர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி 
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை 
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய 
பரமனுர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே. 

2-70-2223:
வேணுபுரம் பிரமனுர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந் 
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி 
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங் 
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே. 

2-70-2224:
புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி 
நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர் 
அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம் 
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே. 

2-70-2225:
வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத் 
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி 
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர் 
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே. 

2-70-2226:
தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி 
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனுர் எழிலார் சண்பை 
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல 
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே. 

2-70-2227:
தண்ணந் தராய்புகலி தாமரையா னுர்சண்பை தலைமுன் ஆண்ட 
அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி 
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து 
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே. 

2-70-2228:
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல 
ஆராத் தராய்பிரம னுர்புகலி வெங்குருவோ டந்தண் காழி 
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி 
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னுரே. 

2-70-2229:
புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி 
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனுர் 
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து 
திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே. 

2-70-2230:
சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப் 
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல் 
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத 
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னுரே. 

2-70-2231:
செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய 
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய 
விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக் 
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே. 

2-70-2232:
கொச்சை வயம்பிரம னுர்புகலி வெங்குரு புறவங் காழி 
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர் 
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல் 
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே. 

2-70-2233:
காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் 
பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னுலாப் பத்திமையாற் பனுவல் மாலை 
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன 
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே. 

2-73-2256:
விளங்கியசீர்ப் பிரமனுர் வேணுபுரம் 
புகலிவெங் குருமேற் சோலை 
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச் 
சிரபுரம்வண் புறவ மண்மேல் 
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் 
கொச்சைகழு மலமென் றின்ன 
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் 
பகையெறிவித் திறைவ னுரே. 

2-73-2257:
திருவளருங் கழுமலமே கொச்சைதே 
வேந்திரனுர் அயனுர் தெய்வத் 
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனுர் 
காழிதகு சண்பை யொண்பா 
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் 
தோணிபுரம் உயர்ந்த தேவர் 
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் 
கண்டத்தோன் விரும்புமூரே. 

2-73-2258:
வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் 
பூந்தராய் சிலம்பன் வா|ர் 
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில் 
காழியிறை கொச்சை யம்பொன் 
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய 
மிக்கயனுர் அமரர் கோனுர் 
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ 
தரன்நாளும் அமரு மூரே. 

2-73-2259:
மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் 
புகலிதராய் தோணிபுரம் வான் 
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே 
கொச்சைதே வேந்திரனுர் சீர்ப் 
பூமகனுர் பொலிவுடைய புறவம்விறற் 
சிலம்பனுர் காழி சண்பை 
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் 
பயன்நுகர்வோர் பரவு மூரே. 
 

2-73-2260:
வயங்கொச்சை தயங்கு பூமேல் 
விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனுர் 
விண்ணவர்தங் கோனுர் வென்றித் 
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல் 
வம்பெருகு தோணிபுரஞ் சீர் 
உரைசேர்பூந் தராய்சிலம்ப னுர்புறவம் 
உலகத்தில் உயர்ந்த வு[ரே. 

2-73-2261:
புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு 
சிரபுரம்பூங் காழி சண்பை 
எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி 
பூந்தராய் தோணிபுரஞ் சீர் 
வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற் 
கொச்சைவா னவர்தங் கோனுர் 
அண்டயனு ரிவையென்பர் அருங்கூற்றை 
யுதைத்துகந்த அப்ப னுரே. 

2-73-2262:
வண்மைவளர் வரத்தயனுர் வானவர்தங் 
கோனுர்வண் புகலி யிஞ்சி 
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு 
சண்பைவியன் காழி கொச்சை 
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் 
தோணிபுரம் பூந்தராய் சீர்ப் 
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் 
பால்வண்ணன் பயிலு மூரே. 

2-73-2263:
மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் 
சிலம்பனுர் காழி மூதூர் 
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை 
வேணுபுரங் கமல நீடு 
கூடியய னுர்வளர்வெங் குருப்புகலி 
தராய்தோணி புரங்கூ டப்போர் 
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள் 
செற்றமலைச் சிலைய னுரே. 

2-73-2264:
இரக்கமுடை யிறையவனுர் தோணிபுரம் 
பூந்தராய் சிலம்பன் தன்னுர் 
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத் 
தயனுர்சீர்த் தேவர் கோனுர் 
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி 
லாச்சண்பை காழி கொச்சை 
அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந் 
தணர்வேத மறாத வு[ரே. 

2-73-2265:
மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் 
கொச்சையிந் திரனுர் மெய்ம்மை 
நுலோதும் அயன்றனுர் நுண்ணறிவார் 
குருப்புகலி தராய்தூ நீர்மேல் 
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் 
சிலம்பனுர் செருச்செய் தன்று 
மாலோடும் அயனறியான் வண்காழி 
சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே. 

2-73-2266:
ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் 
கொச்சைகழு மலமன் பானுர் 
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் 
சிரபுரமொண் புறவ நண்பார் 
பூக்கமலத் தோன்மகி|ர் புரந்தரனுர் 
புகலிவெங் குருவு மென்பர் 
சாக்கியரோ டமண்கையர் தாமறியா 
வகைநின்றான் தங்கு மூரே. 

2-73-2267:
அக்கரஞ்சேர் தருமனுர் புகலிதராய் 
தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப் 
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனுர் 
புகழ்க்காழி சண்பை தொல்லூர் 
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் 
வேணுபுரம் அயனுர் மேலிச் 
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன 
தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே. 

2-74-2268:
பூமகனுர் புத்தேளுக் கிறைவனுர் 
குறைவிலாப் புகலி பூமேல் 
மாமக@ர் வெங்குருநல் தோணிபுரம் 
பூந்தராய் வாய்ந்த இஞ்சிச் 
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை 
புகழ்ச்சண்பை காழி கொச்சை 
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனுர் 
கழுமலம்நாங் கருது மூரே. 

2-74-2269:
கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த் 
தோணிபுரம் கனக மாட 
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா 
யுலகாருங் கொச்சை காழி 
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனுர் 
செங்கமலத் தயனுர் தெய்வத் 
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை 
முடியண்ணல் தங்கு மூரே. 

2-74-2270:
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை 
யொளிமருவு காழி கொச்சை 
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் 
தோணிபுரங் கற்றோ ரேத்துஞ் 
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப் 
புறவம்அய னுர்பூங் கற்பத் 
தார்மருவும் இந்திரனுர் புகலிவெங் 
குருக்கங்கை தரித்தோ னுரே. 

2-74-2271:
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் 
தோணிபுரந் தரியா ரிஞ்சி 
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் 
தராய்புகலி யிமையோர் கோனுர் 
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி 
சண்பைசெழு மறைக ளெல்லாம் 
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ 
னுருலகில் விளங்கு மூரே. 

2-74-2272:
விளங்கயனுர் பூந்தராய் மிகுசண்பை 
வேணுபுரம் மேக மேய்க்கும் 
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி 
யெழிற்புகலி புறவம் ஏரார் 
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் 
சிரபுரம்வன் னஞ்ச முண்டு 
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா 
மன்னுடலங் காய்ந்தோ னுரே. 

2-74-2273:
காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனுர் 
கழுமலமாத் தோணிபுரஞ் சீர் 
ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனுர் 
இருங்கமலத் தயனுர் இன்பம் 
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் 
தராய்கொச்சை காழி சண்பை 
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் 
பகைகெடுத்தோன் திகழு மூரே. 

2-74-2274:
திகழ்மாட மலிசண்பை பூந்தராய் 
பிரமனுர் காழி தேசார் 
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் 
வயங்கொச்சை புறவம் விண்ணோர் 
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் 
குருவெம்போர் மகிடற் செற்று 
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள் 
பணிந்துலகில் நின்ற வு[ரே. 

2-74-2275:
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி 
புரநிகழும் வேணு மன்றில் 
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி 
சண்பைவளர் புறவ மோடி 
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் 
தராய்புகலி தேவர் கோனுர் 
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள் 
தாங்காக்க மிக்க வு[ரே. 

2-74-2276:
மிக்ககம லத்தயனுர் விளங்குபுற 
வஞ்சண்பை காழி கொச்சை 
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் 
பூந்தராய் சிலம்பன் சேரூர் 
மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி 
வெங்குருவல் அரக்கன் திண்டோ ள் 
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ 
டழித்துகந்த எம்மா னுரே. 

2-74-2277:
எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனுர் 
கழுமலநற் புகலி யென்றும் 
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் 
தரனுர்நற் றோணிபுரம் போர்க் 
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய 
னுர்தராய் சண்பை காரின் 
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் 
விளங்கியஎம் இறைவ னுரே. 

2-74-2278:
இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய 
னுர்இமையோர்க் கதிபன் சேரூர் 
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி 
புரங்குணமார் பூந்தராய் நீர்ச் 
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் 
கொச்சைகழு மலந்தே சின்றிப் 
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் 
பரிசறியா அம்மா னுரே. 

2-74-2279:
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் 
குருக்கொச்சை புறவ மஞ்சீர் 
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி 
தோணிபுரந் தேவர் கோனுர் 
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனுர் 
வழிமுடக்கு மாவின் பாச்சல் 
தம்மானொன் றியஞான சம்பந்தன் 
தமிழ்கற்போர் தக்கோர் தாமே. 

2-75-2280:
விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப் 
பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற் 
கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள் 
மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. 

2-75-2281:
வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும் 
பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான் 
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் 
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. 

2-75-2282:
சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத் 
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான் 
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள் 
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே. 

2-75-2283:
பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை 
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங் 
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள் 
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. 

2-75-2284:
தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய் 
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக் 
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள் 
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே. 

2-75-2285:
சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே 
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன் 
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள் 
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே. 

2-75-2286:
முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ 
அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங் 
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள் 
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. 

2-75-2287:
வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி 
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள் 
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே 
தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. 

2-75-2288:
மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும் 
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனுர் 
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை 
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. 

2-75-2289:
நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர் 
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான் 
கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள் 
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே. 

2-75-2290:
கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள் 
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல் 
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார் 
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. 

2-81-2346:
பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர் 
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து 
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும் 
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 

2-81-2347:
சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல் 
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம் 
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும் 
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 

2-81-2348:
கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர் 
திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர் 
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப் 
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 

2-81-2349:
நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும் 
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே 
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக் 
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே. 

2-81-2350:
ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு 
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார் 
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும் 
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 

2-81-2351:
மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர் 
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர் 
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத் 
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 

2-81-2352:
நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர் 
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர் 
ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங் 
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. 

2-81-2353:
இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன் 
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற் 
கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார் 
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே. 

2-81-2354:
தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால் 
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர் 
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு 
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே. 

2-81-2355:
நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள் 
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே 
நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும் 
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே. 

2-83-2367:
நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த 
நெடுமா வுரித்த நிகரில் 
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள் 
திகழ்தேவன் மேவு பதிதான் 
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை 
விழவோசை வேத வொலியின் 
சாலநல் வேலையோசை தருமாட வீதி 
கொடியாடு கொச்சை வயமே. 

2-83-2368:
விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல 
விகிர்தத் துருக்கொள் விமலன் 
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் 
தகவைத்த சோதிபதி தான் 
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து 
கமலத்து வைகும் வயல்சூழ் 
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் 
வளர்கின்ற கொச்சை வயமே. 

2-83-2369:
படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை 
களைவிக்கும் எங்கள் பரமன் 
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன் 
இடமாய வேர்கொள் பதிதான் 
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும் 
நளிர்சோலை கோலு கனகக் 
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல 
மறையோது கொச்சை வயமே. 

2-83-2370:
எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து 
முயல்வுற்ற சிந்தை முடுகி 
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு 
பணிவுற்ற பாதர் பதிதான் 
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி 
வயல்பாய வாளை குழுமிக் 
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன 
வளர்கின்ற கொச்சை வயமே. 

2-83-2371:
பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர 
னொடுதோழ மைக்கொள் பகவன் 
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும் 
இறைவன் இடங்கொள் பதிதான் 
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் 
வளர்தூம மோடி யணவிக் 
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து 
நிறைகின்ற கொச்சை வயமே. 

2-83-2372:
புலியதள் கோவணங்கள் உடையாடை யாக 
வுடையான் நினைக்கு மளவில் 
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் 
நலமா இருந்த நகர்தான் 
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை 
யுடையார் நிறைந்து வளரப் 
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு 
வரைமேவு கொச்சை வயமே. 

2-83-2373:
மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் 
முடியோடு தோள்கள் நெரியப் 
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ 
டுடனாடி மேய பதிதான் 
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட 
விடுமூச லன்ன கமுகின் 
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள் 
அடிதேடு கொச்சை வயமே. 

2-83-2374:
வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம் 
முழுதுண்ட மாலும் இகலிக் 
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும் 
அறியாத சோதி பதிதான் 
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து 
விரைதேரப் போது மடுவிற் 
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து 
வயல்மேவு கொச்சை வயமே. 

2-83-2375:
கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர் 
இடுசீவ ரத்தி னுடையார் 
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல 
விகிர்தத் துருக்கொள் விமலன் 
பையுடை நாகவாயில் எயிறார மிக்க 
குரவம் பயின்று மலரச் 
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து 
மணநாறு கொச்சை வயமே. 

2-83-2376:
இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை 
உலகங்க ளேழு முடனே 
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி 
இனிதா இருந்த மணியைக் 
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த 
தமிழ்மாலை பாடு மவர்போய் 
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும் 
அழகா இருப்ப தறிவே. 

2-89-2432:
அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற் 
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார் 
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத 
குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2433:
சுண்ணத்தர் தோலொடு நுல்சேர் மார்பினர் துன்னிய பூதக் 
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில் 
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும் 
வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2434:
பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ 
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர் 
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங் 
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2435:
கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர் 
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர் 
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து 
கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2436:
ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ 
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார் 
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக் 
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2437:
மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற் 
துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக 
விண்ட தானவர் அரணம் வௌ;வழல் எரிகொள விடைமேற் 
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2438:
அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப் 
பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை 
வென்றி வேந்தனை யொல்க வு[ன்றிய விரலினர் வான்தோய் 
குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2439:
சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த 
ஏர்கொள் வௌ;வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும் 
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங் 
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2440:
குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள் 
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர் 
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங் 
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 

2-89-2441:
கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய 
அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன் 
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய் 
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே. 

2-96-2507:
பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான் 
செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில் 
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந் 
தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே. 

2-96-2508:
தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி 
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு 
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் 
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே. 

2-96-2509:
கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந் 
திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர் 
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி 
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே. 

2-96-2510:
சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி 
அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வு[ராந் 
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து 
வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே. 

2-96-2511:
மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான் 
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ் 
சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க 
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. 

2-96-2512:
நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன் 
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர் 
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித் 
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே. 

2-96-2513:
நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில் 
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம் 
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற் 
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே. 

2-96-2514:
கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி 
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச் 
சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில் 
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே. 

2-96-2515:
மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற் 
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ் 
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய 
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே. 

2-96-2516:
புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ் 
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ் 
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு 
முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே. 

2-96-2517:
ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு 
---- ---- ---- ---- 
---- ---- ---- ---- 
---- ---- ---- ---- 

2-97-2518:
நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர் 
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் 
உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை 
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. 

2-97-2519:
பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும் 
ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர் 
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந் 
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. 

2-97-2520:
சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக் 
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம் 
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன் 
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே. 

2-97-2521:
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும் 
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம் 
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார் 
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. 

2-97-2522:
கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய் 
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம் 
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய் 
கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே. 

2-97-2523:
அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர் 
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ 
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் 
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. 

2-97-2524:
பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர் 
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம் 
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன் 
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. 

2-97-2525:
காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் 
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம் 
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா 
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. 

2-97-2526:
நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள் 
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந் 
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன் 
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. 

2-97-2527:
தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை 
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை 
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் 
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே. 

2-102-2572:
அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை 
அமரர்தம் பெருமானார் 
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் 
வைத்தவர் வேதந்தாம் 
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் 
சிரபுரத் தார்சீரார் 
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர் 
வினையொடும் பொருந்தாரே. 

2-102-2573:
கோல மாகரி உரித்தவர் அரவொடும் 
ஏனக்கொம் பிளஆமை 
சாலப் பூண்டுதண் மதியது சூடிய 
சங்கர னார்தம்மைப் 
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் 
பொருகடல் விடமுண்ட 
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் 
தொழவினை நில்லாவே. 

2-102-2574:
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் 
தவங்கெட மதித்தன்று 
கானத் தேதிரி வேடனா யமர்செயக் 
கண்டருள் புரிந்தார்பூந் 
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் 
சிரபுரத் துறையெங்கள் 
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை 
குற்றங்கள் குறுகாவே. 

2-102-2575:
மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் 
காலனை உதைசெய்தார் 
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் 
பிணக்கறுத் தருள்செய்வார் 
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் 
சிரபுரத் தமர்கின்ற 
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க் 
கருவினை யடையாவே. 

2-102-2576:
பாரும் நீரொடு பல்கதிர் இரவியும் 
பனிமதி ஆகாசம் 
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் 
தலைவனு மாய்நின்றார் 
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி 
செழும்புனற் கோட்டாறு 
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும் 
அடியவர் வருந்தாரே. 

2-102-2577:
ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ் 
வுலகங்க ளவைமூட 
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக 
அந்தரத் துயர்ந்தார்தாம் 
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை 
இன்பன்எம் பெருமானார் 
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ 
வல்வினை அடையாவே. 

2-102-2578:
பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய 
பிணமிடு சுடுகாட்டில் 
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம் 
ஆடும்வித் தகனாரொண் 
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர் 
தகுசிர புரத்தார்தாந் 
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் 
தொழுமவர் தளராரே. 

2-102-2579:
இலங்கு பூண்வரை மார்புடை இராவணன் 
எழில்கொள்வெற் பெடுத்தன்று 
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி 
நெரியவைத் தருள்செய்தார் 
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன் 
றதனிடைப் புகுந்தாருங் 
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு 
தெழவினை குறுகாவே. 

2-102-2580:
வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் 
மாயனென் றிவரன்று 
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க் 
கிளறியும் பறந்துந்தாம் 
பண்டு கண்டது காணவே நீண்டவெம் 
பசுபதி பரமேட்டி 
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ 
வினையவை கூடாவே. 

2-102-2581:
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும் 
பார்மிசைத் துவர்தோய்ந்த 
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் 
தேவர்கள் பெருமானார் 
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில் 
மூழ்கிட இளவாளை 
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை 
விட்டிடும் மிகத்தானே. 

2-102-2582:
பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் 
பையர வோடக்கு 
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை 
நித்திலப் பெருந்தொத்தை 
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை 
விண்ணவர் பெருமானைப் 
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் 
பரமனைப் பணிவாரே. 

2-113-2692:
பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர் 
அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம் 
இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக் 
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. 

2-113-2693:
மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள் 
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம் 
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே 
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே. 

2-113-2694:
கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர் 
மார்விலங்கும் புரிநுலு கந்தம்மண வாளனுர் 
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க் 
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே. 

2-113-2695:
குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர் 
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம் 
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங் 
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே. 

2-113-2696:
விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார் 
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது 
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற் 
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. 

2-113-2697:
தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப் 
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது 
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின் 
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே. 

2-113-2698:
மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித் 
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம் 
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால் 
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே. 

2-113-2699:
முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன் 
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன் 
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது 
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே. 

2-113-2700:
பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை 
மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந் 
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங் 
காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே. 

2-113-2701:
உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார் 
முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம் 
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர 
கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே. 

2-113-2702:
கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள் 
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற் 
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ் 
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே. 

2-122-2791:
விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார் 
படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது 
கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம் 
புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே. 

2-122-2792:
வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார் 
ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது 
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச் 
சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. 

2-122-2793:
வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித் 
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது 
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி 
புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. 

2-122-2794:
திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க் 
கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது 
பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற் 
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. 

2-122-2795:
ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர் 
நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது 
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப் 
பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே. 

2-122-2796:
தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் 
ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது 
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள் 
புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே. 

2-122-2797:
தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன் 
தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது 
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார் 
பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே. 

2-122-2798:
கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க் 
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது 
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற் 
பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. 

2-122-2799:
தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர் 
இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது 
மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர் 
அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே. 

2-122-2800:
எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக் 
கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர் 
செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில் 
எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே. 

3-2-2812:
பந்துசேர்விர லாள்பவ ளத்துவர் 
வாயினாள்பனி மாமதி போல்முகத் 
தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான் 
வந்துசேர்விடம் வானவ ரெத்திசை 
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர் 
புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே. 

3-2-2813:
காவியங்கருங் கண்ணி னாள்கனித் 
தொண்டைவாய்கதிர் முத்தநல் வெண்ணகைத் 
தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள் 
தேவியுந்திரு மேனியோர் பாகமாய் 
ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி 
பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே. 

3-2-2814:
பையராவரும் அல்குல் மெல்லியல் 
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத் 
தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ் 
செய்யெலாங்கழு நீர்கமலம் மலர்த் 
தேறலூறலின் சேறுல ராதநற் 
பொய்யிலாமறை யோர்பயில்பூந்தராய் போற்றுதுமே. 

3-2-2815:
முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின் 
அரும்புதேன்கொள் குரும்பைமூ வாமருந் 
துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை 
வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின் 
மேவினார்பதி வீமரு தண்பொழிற் 
புள்ளினந்துயில் மல்கியபூந்தராய் போற்றுதுமே. 

3-2-2816:
பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர் 
கோதையேர்திகழ் பைந்தளிர் மேனியோர் 
பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார் 
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு 
நீலமல்கிய காமரு வாவிநற் 
புண்ணியருறை யும்பதிபூந்தராய் போற்றுதுமே. 

3-2-2817:
வாணிலாமதி போல்நுத லாள்மட 
மாழையொண்கணாள் வண்தர ளந்நகை 
பாணிலாவிய இன்னிசையார்மொழிப் பாவையொடுஞ் 
சேணிலாத்திகழ் செஞ்சடையெம்மண்ணல் 
சேர்வதுசிக ரப்பெருங் கோயில்சூழ் 
போணிலாநுழை யும்பொழிற்பூந்தராய் போற்றுதுமே. 

3-2-2818:
காருலாவிய வார்குழ லாள்கயற் 
கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை 
வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய் 
நீருலாவிய சென்னி யன்மன்னி 
நிகருநாமம்முந் நான்கு நிகழ்பதி 
போருலாவெயில் சூழ்பொழிற்பூந்தராய் போற்றுதுமே. 

3-2-2819:
காசைசேர்குழ லாள்கய லேர்தடங் 
கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலைத் 
தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகலத் 
தீசன்மேவும் இருங்கயி லையெடுத் 
தானைஅன்றடர்த் தான்இணைச் சேவடி 
பூசைசெய்பவர் சேர்பொழிற்பூந்தராய் போற்றுதுமே. 

3-2-2820:
கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை 
கொவ்வைவாய்க் கொடியேரிடை யாளுமை 
பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய் 
மங்குல்வண்ணனும் மாமல ரோனும் 
மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு 
பொங்குநீரின் மிதந்தநன்பூந்தராய் போற்றுதுமே. 

3-2-2821:
கலவமாமயி லார்இய லாள்கரும் 
பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற் 
குலவுபூங்குழ லாளுமைகூறனை வேறுரையால் 
அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள் 
ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற் 
புலவர்தாம்புகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமே. 

3-2-2822:
தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன 
கண்ணியோடண்ணல் சேர்விடந் தேன்அமர் 
பூம்பொழில்திகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமென் 
றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை 
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண் 
டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே. 

3-3-2823:
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம் 
புயலன மிடறுடைப் புண்ணியனே 
கயலன அரிநெடுங் கண்ணியொடும் 
அயலுல கடிதொழ அமர்ந்தவனே 
கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள் 
நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே. 

3-3-2824:
நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம் 
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம் 
மலையினில் அரிவையை வெருவவன்தோல் 
அலைவரு மதகரி யுரித்தவனே 
இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி 
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே. 

3-3-2825:
பாடினை அருமறை வரல்முறையால் 
ஆடினை காணமுன் அருவனத்திற் 
சாடினை காலனைத் தயங்கொளிசேர் 
நீடுவெண் பிறைமுடி நின்மலனே 
நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர் 
தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே. 

3-3-2826:
நிழல்திகழ் மழுவினை யானையின்தோல் 
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே 
கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல 
முழவொடும் அருநட முயற்றினனே 
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி 
அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே. 

3-3-2827:
கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட 
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன் 
பெருமையை நிலத்தவர் பேசினல்லால் 
அருமையில் அளப்பரி தாயவனே 
அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப் 
பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே. 

3-3-2828:
அடையரி மாவொடு வேங்கையின்தோல் 
புடைபட அரைமிசைப் புனைந்தவனே 
படையுடை நெடுமதிற் பரிசழித்த 
விடையுடைக் கொடிமல்கு வேதியனே 
விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலித் 
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே. 

3-3-2829:
அடியவர் தொழுதெழ அமரரேத்தச் 
செடியவல் வினைபல தீர்ப்பவனே 
துடியிடை அகலல்குல் தூமொழியைப் 
பொடியணி மார்புறப் புல்கினனே 
புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர் 
நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே. 

3-3-2830:
இரவொடு பகலதாம் எம்மானுன்னைப் 
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன் 
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த 
அரவிரி சடைமுடி ஆண்டகையே 
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை 
இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே. 

3-3-2831:
உருகிட வுவகைதந் துடலினுள்ளால் 
பருகிடும் அமுதன பண்பினனே 
பொருகடல் வண்ணனனும் பூவுளானும் 
பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய் 
உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ் 
வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே. 

3-3-2832:
கையினி லுண்பவர் கணிகைநோன்பர் 
செய்வன தவமலாச் செதுமதியார் 
பொய்யவ ருரைகளைப் பொருளெனாத 
மெய்யவ ரடிதொழ விரும்பினனே 
வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி 
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே. 

3-3-2833:
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர் 
விண்ணவ ரடிதொழ விளங்கினானை 
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை 
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார் 
நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம் 
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே. 

3-5-2845:
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் 
மிக்க செம்மை விமலன் வியன்கழல் 
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி 
நன்ற தாகிய நம்பன்தானே. 

3-5-2846:
புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய் 
வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ 
ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி 
மூல மாய முதல்வன்தானே. 

3-5-2847:
வேந்த ராயுல காள விருப்புறிற் 
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல் 
நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச் 
சாதி யாவினை யானதானே. 

3-5-2848:
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய் 
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச் 
சிந்தை நோயவை தீர நல்கிடும் 
இந்து வார்சடை யெம்மிறையே. 

3-5-2849:
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய் 
மலிந்த புந்திய ராகி வணங்கிட 
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய் 
எந்தை யாயஎம் ஈசன்தானே. 

3-5-2850:
பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய் 
நாதன் சேவடி நாளும் நவின்றிட 
நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல் 
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே. 

3-5-2851:
புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய் 
பற்றி வாழும் பரமனைப் பாடிடப் 
பாவ மாயின தீரப் பணித்திடுஞ் 
சேவ தேறிய செல்வன்தானே. 

3-5-2852:
போத கத்துரி போர்த்தவன் பூந்தராய் 
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால் 
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள் 
பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே. 

3-5-2853:
மத்த மான இருவர் மருவொணா 
அத்த னானவன் மேவிய பூந்தராய் 
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை 
மாளு மாறருள் செய்யுந்தானே. 

3-5-2854:
பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந் 
திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப் 
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை 
ஏந்து மான்மறி யெம்மிறையே. 

3-5-2855:
புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய் 
அந்த மில்லெம் மடிகளை ஞானசம் 
பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும் 
பந்த மார்வினை பாறிடுமே. 

3-7-2867:
கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே 
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும் 
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப் 
பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே. 

3-7-2868:
சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப் 
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும் 
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர் 
காம்பன தோளியோ டும்மிருந் தகட வுளன்றே. 

3-7-2869:
கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும் 
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும் 
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர் 
விருப்பின்நல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே. 

3-7-2870:
அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே 
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப் 
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர் 
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே. 

3-7-2871:
சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும் 
நாமநு றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும் 
பூமல்கு தண்பொழில் மன்னுமந் தண்புக லிந்நகர்க் 
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே. 

3-7-2872:
இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை யோர்தொழச் 
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும் 
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர் 
அரவிடை மாதொடும் வீற்றிருந் தஅழ கனன்றே. 

3-7-2873:
சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல் 
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை 
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர் 
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே. 

3-7-2874:
கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும் 
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு 
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர் 
அன்னமன் னநடை மங்கையொ டுமமர்ந் தானன்றே. 

3-7-2875:
பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித் 
தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும் 
புன்னைபொன் தாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர் 
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே. 

3-7-2876:
பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர் 
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான் 
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர் 
வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே. 

3-7-2877:
பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப் 
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை 
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர் 
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே. 

3-13-2932:
மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந் 
துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர் 
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர் 
அன்னமன் னந்நடை அரிவை பங்கரே. 

3-13-2933:
மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை 
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர் 
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர் 
தாதணி குழலுமை தலைவர் காண்மினே. 

3-13-2934:
தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப் 
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர் 
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க் 
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே. 

3-13-2935:
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா 
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர் 
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப் 
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே. 

3-13-2936:
வெள்ளெயி றுடையவவ் விரவ லார்க@ர் 
ஒள்ளெரி ய[ட்டிய வொருவ னாரொளிர் 
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க் 
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே. 

3-13-2937:
துங்கியல் தானவர் தோற்ற மாநகர் 
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர் 
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர் 
அங்கய லனகணி அரிவை பங்கரே. 

3-13-2938:
அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தரக் 
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார் 
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர் 
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே. 

3-13-2939:
மாசின அரக்கனை வரையின் வாட்டிய 
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார் 
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க் 
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே. 

3-13-2940:
தாமுக மாக்கிய அசுரர் தம்பதி 
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும் 
பூமகன் அறிகிலாப் பூந்தராய் நகர்க் 
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே 

3-13-2941:
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம் 
அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண் 
புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க் 
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே. 

3-13-2942:
புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப் 
பரமலி குழலுமை நங்கை பங்கரைப் 
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர் 
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே. 

3-24-3052:
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் 
கண்ணின்நல் ல/துறுங் கழுமல வளநகர்ப் 
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3053:
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத் 
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன் 
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் 
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3054:
தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம் 
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் 
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப் 
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3055:
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே 
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங் 
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப் 
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3056:
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே 
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங் 
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப் 
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3057:
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல 
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் 
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும் 
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3058:
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே 
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங் 
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் 
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3059:
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட 
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே 
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப் 
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3060:
நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர் 
அடியொடு முடியறி யாவழல் உருவினன் 
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப் 
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3061:
தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம் 
ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின் 
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப் 
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே. 

3-24-3062:
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப் 
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை 
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ் 
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே. 

3-37-3190:
கரமுனம்மல ராற்புனல்மலர் 
தூவியேகலந் தேத்துமின் 
பரமனுர்பல பேரினாற்பொலி 
பத்தர்சித்தர்கள் தாம்பயில் 
வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம் 
ஐயன்நாடொறும் மேயசீர்ப் 
பிரமனுர்பிர மாபுரத்துறை 
பிஞ்ஞகனருள் பேணியே. 

3-37-3191:
விண்ணிலார்மதி சூடினான்விரும் 
பும்மறையவன் தன்றலை 
உண்ணநன்பலி பேணினான்உல 
கத்து@னுயி ரான்மலைப் 
பெண்ணினார்திரு மேனியான்பிர 
மாபுரத்துறை கோயிலுள் 
அண்ணலாரரு ளாளனாயமர் 
கின்றஎம்முடை யாதியே. 

3-37-3192:
எல்லையில்புக ழாளனும்இமை 
யோர்கணத்துடன் கூடியும் 
பல்லையார்தலை யிற்பலியது 
கொண்டுகந்த படிறனுந் 
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள் 
தூமலர்சொரிந் தேத்தவே 
மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர 
மாபுரத்துறை மைந்தனே. 

3-37-3193:
அடையலார்புரஞ் சீறியந்தணர் 
ஏத்தமாமட மாதொடும் 
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர 
மாபுரத்துறை கோயிலான் 
தொடையலார்நறுங் கொன்றையான்தொழி 
லேபரவிநின் றேத்தினால் 
இடையிலார்சிவ லோகமெய்துதற் 
கீதுகாரணங் காண்மினே. 

3-37-3194:
வாயிடைம்மறை யோதிமங்கையர் 
வந்திடப்பலி கொண்டுபோய்ப் 
போயிடம்எரி கானிடைப்புரி 
நாடகம்இனி தாடினான் 
பேயொடுங்குடி வாழ்வினான்பிர 
மாபுரத்துறை பிஞ்ஞகன் 
தாயிடைப்பொருள் தந்தையாகுமென் 
றோதுவார்க்கருள் தன்மையே. 

3-37-3195:
ஊடினாலினி யாவதென்னுயர் 
நெஞ்சமேயுறு வல்வினைக் 
கோடிநீயுழல் கின்றதென்னழ 
லன்றுதன்கையி லேந்தினான் 
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர 
மாபுரத்துறை வேதியன் 
ஏடுநேர்மதி யோடராவணி 
எந்தையென்றுநின் றேத்திடே. 

3-37-3196:
செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில 
ரென்றும்ஏத்தி நினைந்திட 
ஐயன்ஆண்டகை அந்தணன்அரு 
மாமறைப்பொரு ளாயினான் 
பெய்யும்மாமழை யானவன்பிர 
மாபுரம்இடம் பேணிய 
வெய்யவெண்மழு வேந்தியைநினைந் 
தேத்துமின்வினை வீடவே. 

3-37-3197:
கன்றொருக்கையில் ஏந்திநல்விள 
வின்கனிபட நுறியுஞ் 
சென்றொருக்கிய மாமறைப்பொருள் 
தேர்ந்தசெம்மல ரோனுமாய் 
அன்றரக்கனைச் செற்றவன்அடி 
யும்முடியவை காண்கிலார் 
பின்றருக்கிய தண்பொழிற்பிர 
மாபுரத்தரன் பெற்றியே. 

3-37-3198:
உண்டுடுக்கைவிட் டார்களும்உயர் 
கஞ்சிமண்டைகொள் தேரரும் 
பண்டடக்குசொற் பேசுமப்பரி 
வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின் 
தண்டொடக்குவன் சூலமுந்தழல் 
மாமழுப்படை தன்கையிற் 
கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர 
மாபுரத்துறை கூத்தனே. 

3-37-3199:
பித்தனைப்பிர மாபுரத்துறை 
பிஞ்ஞகன்கழல் பேணியே 
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை 
செய்துநன்பொருள் மேவிட 
வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன் 
வாய்நவின்றெழு மாலைகள் 
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை 
போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே. 

3-43-3255:
சந்த மார்முலை யாள்தன கூறனார் 
வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார் 
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள் 
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே. 

3-43-3256:
மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத் 
தேனி டங்கொளுங் கொன்றையந் தாரினார் 
கானி டங்கொளுந் தண்வயற் காழியார் 
ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே. 

3-43-3257:
மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர் 
பைகொள் வாளர வாட்டும் படிறனார் 
கைகொள் மான்மறி யார்கடற் காழியுள் 
ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே. 

3-43-3258:
புற்றின் நாகமும் பூளையும் வன்னியுங் 
கற்றை வார்சடை வைத்தவர் காழியுட் 
பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல் 
உற்ற போதுடன் ஏத்தி யுணருமே. 

3-43-3259:
நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை 
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய 
கலிக டிந்தகை யார்கடற் காழியுள் 
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே. 

3-43-3260:
பெண்ணோர் கூறினர் பேயுடன் ஆடுவர் 
பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர் 
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள் 
அண்ண லாய அடிகள் சரிதையே. 

3-43-3261:
பற்று மானும் மழுவும் அழகுற 
முற்று மூர்திரிந் துபலி முன்னுவர் 
கற்ற மாநன் மறையவர் காழியுட் 
பெற்றம் ஏற துகந்தார் பெருமையே. 

3-43-3262:
எடுத்த வல்லரக் கன்முடி தோளிற 
அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுள் 
கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற 
இடத்து மாதொடு தாமும் இருப்பரே. 

3-43-3263:
காலன் தன்னுயிர் வீட்டு கழலடி 
மாலு நான்முகன் தானும் வனப்புற 
ஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலாச் 
சீலங் கொண்டவ னுர்திகழ் காழியே. 

3-43-3264:
உருவ நீத்தவர் தாமும் உறுதுவர் 
தருவ லாடையி னாருந் தகவிலர் 
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள் 
ஒருவன் சேவடி யேயடைந் துய்ம்மினே. 

3-43-3265:
கானல் வந்துல வுங்கடற் காழியுள் 
ஈன மில்லி இணையடி யேத்திடும் 
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ் 
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே. 

3-56-3394:
இறையவன் ஈசன்எந்தை இமையோர்தொழு தேத்தநின்ற 
கறையணி கண்டன்வெண்தோ டணிகாதினன் காலத்தன்று 
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னுசென்னிப் 
பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே. 

3-56-3395:
சடையினன் சாமவேதன் சரிகோவண வன்மழுவாட் 
படையினன் பாய்புலித்தோ லுடையான்மறை பல்கலைநுல் 
உடையவன் ஊனமில்லி யுடனாயுமை நங்கையென்னும் 
பெடையொடும் பேணுமிடம் பிரமாபுரம் பேணுமினே. 

3-56-3396:
மாணியை நாடுகாலன் உயிர்மாய்தரச் செற்றுக்காளி 
காணிய ஆடல்கொண்டான் கலந்தூர்வழிச் சென்றுபிச்சை 
ஊணியல் பாகக்கொண்டங் குடனேயுமை நங்கையொடும் 
பேணிய கோயில்மன்னும் பிரமாபுரம் பேணுமினே. 

3-56-3397:
பாரிடம் விண்ணுமெங்கும் பயில்நஞ்சு பரந்துமிண்ட 
பேரிடர்த் தேவர்கணம் பெருமானிது காவெனலும் 
ஓரிடத்தே கரந்தங் குமைநங்கையொ டும்முடனே 
பேரிட மாகக்கொண்ட பிரமாபுரம் பேணுமினே. 

3-56-3398:
நச்சர வச்சடைமேல் நளிர்திங்களு மொன்றவைத்தங் 
கச்சமெ ழவிடைமேல் அழகார்மழு வேந்திநல்ல 
இச்சை பகர்ந்துமிக இடுமின்பலி யென்றுநாளும் 
பிச்சைகொள் அண்ணல்நண்ணும் பிரமாபுரம் பேணுமினே. 

3-56-3399:
பெற்றவன் முப்புரங்கள் பிழையாவண்ணம் வாளியினாற் 
செற்றவன் செஞ்சடையில் திகழ்கங்கைத னைத்தரித்திட் 
டொற்றை விடையினனாய் உமைநங்கையொ டும்முடனே 
பெற்றிமை யாலிருந்தான் பிரமாபுரம் பேணுமினே. 

3-56-3400:
வேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி 
கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை 
ஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான் 
பேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே. 

3-56-3401:
இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி 
அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்பக் 
குமையது செய்துபாடக் கொற்றவாளொடு நாள்கொடுத்திட் 
டுமையொ டிருந்தபிரான் பிரமாபுரம் உன்னுமினே. 

3-56-3402:
ஞாலம் அளித்தவனும் அரியும்மடி யோடுமுடி 
காலம் பலசெலவுங் கண்டிலாமையி னாற்கதறி 
ஓல மிடஅருளி உமைநங்கையொ டும்முடனாய் 
ஏல இருந்தபிரான் பிரமாபுரம் ஏத்துமினே. 

3-56-3403:
துவருறும் ஆடையினார் தொக்கபீலியர் நக்கரையர் 
அவரவர் தன்மைகள்கண் டணுகேன்மின் னருள்பெறுவீர் 
கவருறு சிந்தையொன்றிக் கழிகாலமெல் லாம்படைத்த 
இவரவர் என்றிறைஞ்சிப் பிரமாபுரம் ஏத்துமினே. 

3-56-3404:
உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்தவொண் மாதினொடும் 
வரையென வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத் 
தரசினை யேத்தவல்ல அணிசம்பந்தன் பத்தும்வல்லார் 
விரைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே. 

3-67-3514:
சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே. 

3-67-3515:
தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர் பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே. 

3-67-3516:
பகலொளிசெய் நகமணியை முகைமலரைநிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை மிகஅருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிக ழலர்பெருகு புகலிநகரே. 

3-67-3517:
அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர வங்களெழில் தங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிகர் எங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே. 

3-67-3518:
ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே. 

3-67-3519:
நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே. 

3-67-3520:
அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே. 

3-67-3521:
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே. 

3-67-3522:
விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே. 

3-67-3523:
பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே. 

3-67-3524:
நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே. 

3-67-3525:
ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே. 

3-75-3603:
எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானெனஇ றைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே. 

3-75-3604:
அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன்
பங்கயமு கத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ ளத்திரள்பொ லிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி றங்கொளிகொள் சண்பைநகரே. 

3-75-3605:
போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பைநகரே. 

3-75-3606:
கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே. 

3-75-3607:
பணங்கெழுவு பாடலினோ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில் நீடுவிரை யார்புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே. 

3-75-3608:
பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி ஆயிழைத னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர் கெண்டிநற வுண்டிசைசெய
சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே. 

3-75-3609:
விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
மண்பொய்அத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னுழிபல தோறும்நிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே. 

3-75-3610:
வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
யரக்கனது ரக்கரசி ரத்துறவ டர்த்தருள் புரிந்தஅழகன்
இருக்கையத ருக்கன்முத லானஇமை யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே. 

3-75-3611:
நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
சேலும்இன வேலும்அன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே. 

3-75-3612:
போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல் புகஎறிகொள் சண்பைநகரே. 

3-75-3613:
வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே. 

3-81-3668:
சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி
அங்கமுடல் மேலுறவ ணிந்துபிணி தீரஅருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே. 

3-81-3669:
சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 

3-81-3670:
வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலின் நஞ்சமமு துண்டகட வுள்@ர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே. 

3-81-3671:
கொல்லைவிடை யேறுடைய கோவணவன் நாவணவு மாலை
ஒல்லையுடை யான்அடைய லார்அரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே. 

3-81-3672:
தேயுமதி யஞ்சடை யிலங்கிட விலங்கன்மலி கானிற்
காயுமடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன் நினைப்பார்
தாயெனநி றைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே. 

3-81-3673:
பற்றலர்தம் முப்புரம் எரித்தடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம தொழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்
பற்றவன் இசைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்
துற்றசடை அத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே. 

3-81-3674:
பண்ணமரு நான்மறையர் நுன்முறை பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசும்அடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தலுடை யானுர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே. 

3-81-3675:
தென்றிசை யிலங்கையரை யன்திசைகள் வீரம்விளை வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தக னிடஞ்சீர்
ஒன்றிசை யியற்கிளவி பாடமயி லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுர மாமே. 

3-81-3676:
நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி
ஆற்றலத னால்மிக வளப்பரிய வண்ணம்எரி யாகி
ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே. 

3-81-3677:
மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டும்அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழி கெடுத்தடை வினானக்
காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற்
தோடுகுழை பெய்தவர் தமக்குறைவு தோணிபுர மாமே. 

3-81-3678:
துஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
மஞ்சனை வணங்குதிரு ஞானசம் பந்தனசொன் மாலை
தஞ்சமென நின்றிசை மொழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்றுவளர் வாரே. 

3-84-3701:
பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே. 

3-84-3702:
கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமோர் அரவமு மலரரை மிசையினிற்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே. 

3-84-3703:
கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொரு
பங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவர் உறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே. 

3-84-3704:
மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவரு
போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே. 

3-84-3705:
காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே. 

3-84-3706:
சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னைய நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதி
புன்னையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே. 

3-84-3707:
வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரு முருவினர் இமையவர் தொழுவதோ ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே. 

3-84-3708:
வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே. 

3-84-3709:
தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே. 

3-84-3710:
கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே. 

3-84-3711:
போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே. 

3-89-3756:
திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே. 

3-89-3757:
ஏலமார் இலவமோ டினமலர்த் தொகுதியா யெங்கும்நுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே அஞ்சல்நீயே. 

3-89-3758:
பொன்னுமா மணிகொழித் தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக்
கன்னிமார் முலைநலம் கவரவந் தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவின்நாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகாண் நெஞ்சமே அஞ்சல்நீயே. 

3-89-3759:
கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடிநினைந் துய்யலாம் நெஞ்சமே அஞ்சல்நீயே. 

3-89-3760:
மறைகொளுந் திறலினார் ஆகுதிப் புகைகள்வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணி செழுமதி திகழ்மதிற் கொச்சைதன்பால்
உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே. 

3-89-3761:
சுற்றமும் மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா உள்கினானோர்
குற்றமில் லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும்நெஞ்சே. 

3-89-3762:
கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ அஞ்சல்நெஞ்சே. 

3-89-3763:
அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார் உறைவிடம் ஒளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமுந் தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே. 

3-89-3764:
அரவினிற் றுயில்தரும் அரியும்நற் பிரமனும் அன்றயர்ந்து
குரைகழற் றிருமுடி யளவிட அரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே. 

3-89-3765:
கடுமலி யுடலுடை அமணருங் கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை இகழ்பவர் கருதுநம் ஈசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே. 

3-89-3766:
காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென இருந்தநல் லடிகளை ஆதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழில்மறை ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லவா னுலகின்மேலே. 

3-94-3810:
விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே. 

3-94-3811:
வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே
ஆதிய அருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே. 

3-94-3812:
விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள உறுபிணி யிலரே. 

3-94-3813:
விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்கள் துயர்பிணி யிலரே. 

3-94-3814:
மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினோ டரவசைத் தீரே
அக்கினோ டரவசைத் தீரும தடியிணை
தக்கவர் உறுவது தவமே. 

3-94-3815:
வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே. 

3-94-3816:
விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழன்மல்கும் அங்கையி னீரே
அழன்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே. 

3-94-3817:
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே. 

3-94-3818:
மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே. 

3-94-3819:
விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே. 

3-100-3872:
கரும்பமர் வில்லியைக் காய்ந்துகாதற் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதாற்
பெரும்பக லேவந்தென் பெண்மைகொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே. 

3-100-3873:
கொங்கியல் பூங்குழற் கொவ்வைச்செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே. 

3-100-3874:
மத்தக் களிற்றுரி போர்க்கக்கண்டு மாதுமை பேதுறலுஞ்
சித்தந் தெளியநின் றாடியேறு{ர் தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங்கொண்ட ஒருவர்க் கிடம்போலுந்
துத்தநல் லின்னிசை வண்டுபாடுந் தோணி புரந்தானே. 

3-100-3875:
வள்ள லிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத்தோன் உரம்நெரிய
மௌ;ள விரல்வைத்தென் உள்ளங்கொண்டார் மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணி புரந்தானே. 

3-100-3876:
வெல்பற வைக்கொடி மாலும்மற்றை விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்பணிந்துஞ்
செல்வற நீண்டெஞ் சிந்தைகொண்ட செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்குசெம்மைத் தோணி புரந்தானே. 

3-100-3877:
குண்டிகை பீலிதட் டோ டுநின்று கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி ய[ணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தென் எழில்கவர்ந் தாரிடமாந்
தொண்டிசை பாடல றாததொன்மைத் தோணி புரந்தானே. 

3-100-3878:
தூமரு மாளிகை மாடம்நீடு தோணிபுரத் திறையை
மாமறை நான்கினொ டங்கமாறும் வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம் பந்தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும்வல்லார் பார்முழு தாள்பவரே. 

3-110-3978:
வரம தேகொளா உரம தேசெயும் 
புரமெ ரித்தவன் பிரம நற்புரத்
தரன்நன் நாமமே பரவு வார்கள்சீர் 
விரவு நீள்புவியே. 

3-110-3979:
சேணு லாமதில் வேணு மண்ணுளோர் 
காண மன்றலார் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணு கின்றவ 
ராணி யொத்தவரே. 

3-110-3980:
அகல மார்தரைப் புகலும் நான்மறைக் 
கிகலி யோர்கள்வாழ் புகலி மாநகர்ப்
பகல்செய் வோனெதிர்ச் சகல சேகரன் 
அகில நாயகனே. 

3-110-3981:
துங்க மாகரி பங்க மாவடுஞ் 
செங்கை யானிகழ் வெங்கு ருத்திகழ்
அங்க ணானடி தங்கை யாற்றொழத் 
தங்கு மோவினையே. 

3-110-3982:
காணி யொண்பொருட் கற்ற வர்க்கீகை 
யுடைமை யோரவர் காதல் செய்யுநற்
றோணி வண்புரத் தாணி யென்பவர் 
தூமதி யினரே. 

3-110-3983:
ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப் 
பூந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற் 
சேர்ந்தி ராவினையே. 

3-110-3984:
சுரபு ரத்தினைத் துயர்செய் தாருகன் 
துஞ்ச வெஞ்சினக் காளி யைத்தருஞ்
சிரபு ரத்துளா னென்ன வல்லவர் 
சித்தி பெற்றவரே. 

3-110-3985:
உறவு மாகியற் றவர்க ளுக்குமா 
நெதிகொ டுத்துநீள் புவியி லங்குசீர்ப்
புறவ மாநகர்க் கிறைவ னேயெனத் 
தெறகி லாவினையே. 

3-110-3986:
பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன் 
முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
சண்பை யாதியைத் தொழும வர்களைச் 
சாதியா வினையே. 

3-110-3987:
ஆழி யங்கையிற் கொண்ட மாலயன் 
அறிவொ ணாததோர் வடிவு கொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே 
கற்றல் நற்றவமே. 

3-110-3988:
விச்சை யொன்றிலாச் சமணர் சாக்கியப் 
பிச்சர் தங்களைக் கரிச றுத்தவன்
கொச்சை மாநகர்க் கன்பு செய்பவர் 
குணங்கள் கூறுமினே. 

3-110-3989:
கழும லத்தினுட் கடவுள் பாதமே 
கருது ஞானசம் பந்த னின்றமிழ்
முழுதும் வல்லவர்க் கின்ப மேதரும் 
முக்கண் எம்மிறையே. 

3-113-4012:
உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே. 

3-113-4013:
சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே. 

3-113-4014:
காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்தன் உடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே. 

3-113-4015:
மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே. 

3-113-4016:
உடன்பயில் கின்றனன் மாதவனே யுறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே
படங்கொள் அரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே. 

3-113-4017:
திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழில் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்கத ராயுறை சுந்தரரே. 

3-113-4018:
ஓர்வரு கண்கள் இணைக்கயலே உமையவள் கண்கள் இணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொ ளுதாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே. 

3-113-4019:
ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையே
பூண்டனர் சேரலு மாபதியே புறவம் அமர்ந்த வுமாபதியே. 

3-113-4020:
நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்ட கருங்களனே
மன்னி வரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே. 

3-113-4021:
இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரும் இராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே. 

3-113-4022:
கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வு[ர்வர் பசுபதியே. 

3-113-4023:
பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே
கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே. 

3-117-4057:
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 

3-117-4058:
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. 

3-117-4059:
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. 

3-117-4060:
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. 

3-117-4061:
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா. 

3-117-4062:
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே. 

3-117-4063:
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண. 

3-117-4064:
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே. 

3-117-4065:
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. 

3-117-4066:
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. 

3-117-4067:
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. 

3-118-4068:
மடமலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியும் மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொலி பரந்த வெண்டிரை முத்தம் இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோதம் மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே. 

3-118-4069:
மின்னிய அரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் தேவர்தம் பெருமான் சேயிழை யொடும்உறை விடமாம்
பொன்னியன் மணியும் முரிகரி மருப்புஞ் சந்தமும் உந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே. 

3-118-4070:
சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடு தூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல நகரென லாமே. 

3-118-4071:
மண்ணினா ரேத்த வானுலார் பரச அந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கார் இயல்பினா னிறைந்தார் ஏந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே. 

3-118-4072:
சுருதியான் றலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
பருதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையும் அங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே. 

3-118-4073:
புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைகள் ஒன்றொடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே. 

3-118-4074:
அலைபுனற் கங்கை தங்கிய சடையார் அடல்நெடு மதிலொரு மூன்றுங்
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே. 

3-118-4075:
ஒருக்கமுன் நினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றலன் றழித்த அழகனார் அமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமா றறியா வண்மையால் வாழுங் கழுமல நகரென லாமே. 

3-118-4076:
அருவரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரியுரு வான இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே. 

3-118-4077:
உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும் அத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்து புன்மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே. 

3-118-4078:
கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே. 

4-82-4948:
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட 
ஞான்றுநின் பாதமெல்லாம் 
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின 
என்பர் நளிர்மதியங் 
கால்கொண்ட வண்கைச் சடைவிரித் 
தாடுங் கழுமலவர்க் 
காளன்றி மற்றுமுண் டோ அந்த 
ணாழி அகலிடமே. 

4-82-4949:
கடையார் கொடிநெடு மாடங்க 
ளெங்குங் கலந்திலங்க 
உடையா னுடைதலை மாலையுஞ் 
சூடி உகந்தருளி 
விடைதா னுடையவவ் வேதியன் 
வாழுங் கழுமலத்துள் 
அடைவார் வினைக ளவையௌ;க 
நாடொறும் ஆடுவரே. 

4-82-4950:
திரைவாய்ப் பெருங்கடல் முத்தங் 
குவிப்ப முகந்துகொண்டு 
நுரைவாய் நுளைச்சிய ரோடிக் 
கழுமலத் துள்ளழுந்தும் 
விரைவாய் நறுமலர் சூடிய 
விண்ணவன் றன்னடிக்கே 
வரையாப் பரிசிவை நாடொறும் 
நந்தமை யாள்வனவே. 

4-82-4951:
விரிக்கும் அரும்பதம் வேதங்க 
ளோதும் விழுமியநுல் 
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர் 
கேட்கில் உலகமுற்றும் 
இரிக்கும் பறையொடு பூதங்கள் 
பாடக் கழுமலவன் 
நிருத்தம் பழம்படி யாடுங் 
கழல்நம்மை ஆள்வனவே. 

4-82-4952:
சிந்தித் தெழுமன மேநினை 
யாமுன் கழுமலத்தைப் 
பந்தித்த வல்வினை தீர்க்க 
வல்லானைப் பசுபதியைச் 
சந்தித்த கால மறுத்துமென் 
றெண்ணி யிருந்தவர்க்கு 
முந்தித் தொழுகழல் நாடொறும் 
நந்தம்மை ஆள்வனவே. 

4-82-4953:
நிலையும் பெருமையும் நீதியுஞ் 
சால அழகுடைத்தாய் 
அலையும் பெருவெள்ளத் தன்று 
மிதந்தவித் தோணிபுரஞ் 
சிலையில் திரிபுரம் மூன்றெரித் 
தார்தங் கழுமலவர் 
அலருங் கழலடி நாடொறும் 
நந்தமை ஆள்வனவே. 

4-82-4954:
முற்றிக் கிடந்துமுந் நீரின் 
மிதந்துடன் மொய்த்தமரர் 
சுற்றிக் கிடந்து தொழப்படு 
கின்றது சூழரவந் 
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் 
துன்றிவெண் திங்கள்சூடுங் 
கற்றைச் சடைமுடி யார்க்கிட 
மாய கழுமலமே. 

4-82-4955:
உடலும் உயிரும் ஒருவழிச் 
செல்லும் உலகத்துள்ளே 
அடையும் உனைவந் தடைந்தார் 
அமரர் அடியிணைக்கீழ் 
நடையும் விழவொடு நாடொறும் 
மல்கும் கழுமலத்துள் 
விடையன் தனிப்பதம் நாடொறும் 
நந்தமை ஆள்வனவே. 

4-82-4956:
பரவைக் கடல்நஞ்ச முண்டது 
மில்லையிப் பார்முழுதும் 
நிரவிக் கிடந்து தொழப்படு 
கின்றது நீண்டிருவர் 
சிரமப் படவந்து சார்ந்தார் 
கழலடி காண்பதற்கே 
அரவக் கழலடி நாடொறும் 
நந்தமை ஆள்வனவே. 

4-82-4957:
கரையார் கடல்சூழ் இலங்கையர் 
கோன்றன் முடிசிதறத் 
தொலையா மலரடி ஊன்றலும் 
உள்ளம் விதிர்விதிர்த்துத் 
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் 
கழுமலங் காண்பதற்கே 
அலையாப் பரிசிவை நாடொறும் 
நந்தமை ஆள்வனவே. 

4-83-4958:
படையார் மழுவொன்று பற்றிய 
கையன் பதிவினவிற் 
கடையார் கொடிநெடு மாடங்க 
ளோங்குங் கழுமலமாம் 
மடைவாய்க் குருகினம் பாளை 
விரிதொறும் வண்டினங்கள் 
பெடைவாய் மதுவுண்டு பேரா 
திருக்கும் பெரும்பதியே. 

5-45-5676:
மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனுஞ்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே. 

5-45-5677:
நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்க தன்று தமது பெருமைக்கே. 

5-45-5678:
கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறு கின்றனள் கன்னியே. 

5-45-5679:
பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லளா கின்றனள் தையலே. 

5-45-5680:
பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணி புரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே. 

5-45-5681:
முல்லை வெண்ணகை மொய்குழ லாயுனக்
கல்ல னாவ தறிந்திலை நீகனித்
தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே. 

5-45-5682:
ஒன்று தானறி யாருல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தங்
கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே. 

5-45-5683:
உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே. 

5-45-5684:
மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே. 

5-45-5685:
இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய காரரக் கன்றனைத்
துட்ட டக்கிய தோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே. 

7-58-7817:
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் 
 தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின் 
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை 
 வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை 
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை 
 எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக் 
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7818:
மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
 வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன் 
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன் 
 துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை 
முத்தியும் ஞானமும் வானவர் அறியா 
 முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக் 
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7819:
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
 செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன் 
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன் 
 உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால் 
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி 
 விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன் 
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7820:
மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை 
 வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன் 
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் 
 பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார் 
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே 
 பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன் 
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7821:
குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
 கொடுமழு வாட்படைக் குழகனே என்றும் 
வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும் 
 வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே 
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப் 
 பசுபதி பதிவின விப்பல நாளுங் 
கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7822:
வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி
 வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன் 
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி 
 வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே 
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை 
 ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங் 
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7823:
அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
 அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன் 
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை 
 படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப் 
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை 
 மின்னின துருவை என்னிடைப் பொருளைக் 
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7824:
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
 நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை 
மலைதரு மலைமகள் கணவனை வானோர் 
 மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப் 
புனைதரு புகழினை எங்கள தொளியை 
 இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக் 
கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7825:
மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப 
 வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத் 
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த 
 உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன் 
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப் 
 பேரரு ளாளனைக் காரிருள் போன்ற 
கறையணி மிடறுடை அடிகளை அடியேன் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 

7-58-7826:
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் 
 விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட் 
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் 
 அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங் 
கழுமல வளநகர்க் கண்டுகொண் ^ரன் 
 சடையன்றன் காதலன் பாடிய பத்துந் 
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் 
 துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.