HolyIndia.Org

திருபல்லவனீச்சுரம் ஆலய தேவாரம்

திருபல்லவனீச்சுரம் ஆலயம்
1-65-701:
அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த 
விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம் 
கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப் 
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே. 

1-65-702:
எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர் 
கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம் 
மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப் 
பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 

1-65-703:
மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல் 
கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம் 
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற் 
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 

1-65-704:
தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம் 
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம் 
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற் 
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 

1-65-705:
மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப 
மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங் 
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே 
பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே. 

1-65-706:
குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் 
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ் 
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப் 
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 

1-65-707:
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர் 
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம் 
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின் 
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 

1-65-708:
தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன் 
தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனுர் 
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப் 
பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே. 

1-65-709:
அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால் 
தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம் 
வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப் 
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 

1-65-710:
உண்டுடுக்கை யின்றியேநின் று{ர்நகவேதிரிவார் 
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந் 
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார் 
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 

1-65-711:
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம் 
அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல் 
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய் 
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே. 

3-112-4001:
பரசு பாணியர் பாடல் வீணையர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4002:
பட்ட நெற்றியர் நட்ட மாடுவர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திட்ட மாயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4003:
பவள மேனியர் திகழும் நீற்றினர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தழக ராயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4004:
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தண்ண லாயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4005:
பல்லி லோட்டினர் பலிகொண் டுண்பவர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெல்லி யாட்டுகந் தாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4006:
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திச்சை யாயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4007:
பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெங்கு மாயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4008:
பாதங் கைதொழ வேத மோதுவர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தாதி யாயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4009:
படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தடிக ளாயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4010:
பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திறைவ ராயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார். 

3-112-4011:
வான மாள்வதற் கூன மொன்றிலை 
மாதர் பல்லவ னீச்ச ரத்தானை
ஞான சம்பந்தன் நற்ற மிழ்சொல்ல 
வல்லவர் நல்லரே.