திருபல்லவனீச்சுரம் ஆலய தேவாரம்
திருபல்லவனீச்சுரம் ஆலயம்1-65-701:
அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த
விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம்
கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே.
1-65-702:
எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர்
கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம்
மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப்
பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
1-65-703:
மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல்
கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
1-65-704:
தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம்
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
1-65-705:
மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப
மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங்
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே
பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே.
1-65-706:
குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக்
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.
1-65-707:
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
1-65-708:
தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன்
தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனுர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப்
பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே.
1-65-709:
அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்
தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்
வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.
1-65-710:
உண்டுடுக்கை யின்றியேநின் று{ர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே.
1-65-711:
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்
அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே.
3-112-4001:
பரசு பாணியர் பாடல் வீணையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4002:
பட்ட நெற்றியர் நட்ட மாடுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திட்ட மாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4003:
பவள மேனியர் திகழும் நீற்றினர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தழக ராயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4004:
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தண்ண லாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4005:
பல்லி லோட்டினர் பலிகொண் டுண்பவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெல்லி யாட்டுகந் தாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4006:
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திச்சை யாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4007:
பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெங்கு மாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4008:
பாதங் கைதொழ வேத மோதுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தாதி யாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4009:
படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தடிக ளாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4010:
பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திறைவ ராயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
3-112-4011:
வான மாள்வதற் கூன மொன்றிலை
மாதர் பல்லவ னீச்ச ரத்தானை
ஞான சம்பந்தன் நற்ற மிழ்சொல்ல
வல்லவர் நல்லரே.