HolyIndia.Org

வடுகூர் (திருவாண்டார் கோவில் ) , வடுகூர்நாதர், வடுகீஸ்வரர் ஆலயம்

வடுகூர்நாதர், வடுகீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : வடுகூர் (திருவாண்டார் கோவில் )
இறைவன் பெயர் : வடுகூர்நாதர், வடுகீஸ்வரர்
இறைவி பெயர் : வடுவகிர்க்கன்னி அம்மை
எப்படிப் போவது : விழுப்புரம் - பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 Km தொலைவில் வடுகூர் சிவஸ்தலம் உள்ளது. அருகில் உள்ள நகரங்கள் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி. சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையம் சென்னையில் இருந்து சுமார் 180
சிவஸ்தலம் பெயர் : வடுகூர் (திருவாண்டார் கோவில் )
ஆலயம் பற்றி :

இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லாத கட்டை கோபுரம் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. கோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இங்கு தெற்கு நோக்கியவாறு இறைவி வடுவகிர்க்கன்னி அம்மை சந்நிதி உள்ளது. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தை அடுத்து மூலவர் வடுகூர்நாதர் கருவறை இருக்கிறது. மூலவர் ஒரு சுயம்பு லிங்கம். கருவறைச் சுற்றில் தென் திசையில் நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி ஆகியவை இருக்கின்றன.

அர்த்த மண்டபத்தையும், கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. மேலும் தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சினாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன.

தல வரலாறு: முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும், பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள், பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா முதலியோர் சிவனிடம் சரனடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும், வடுகபைரவர் தான் செய்த கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது.

...திருசிற்றம்பலம்...

வடுகூர் (திருவாண்டார் கோவில் ) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.21 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • புறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.90 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • இரும்பை மாகாளம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.03 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅரசிலி (ஒழிந்தியாபட்டு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.08 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.41 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.21 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.39 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.10 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.10 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.