Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பாண்டிக்கொடுமுடி |
இறைவன் பெயர் : | கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி |
இறைவி பெயர் : | வடிவுடைநாயகி, சௌடாம்பிகை |
எப்படிப் போவது : | ஈரோட்டில் இருந்து சுமார் 40 Km தொலைவில் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. கோவில் ரயில் நிலயத்திற்கு அருகிலேயே உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பாண்டிக்கொடுமுடி |
ஆலயம் பற்றி : கோவில் அமைப்பு: வடமேற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மெற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம். இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் ச்ந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் பிரம்மாவின் சந்நிதி உள்ளது. பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இருந்து, மலயத்துவஜ பாண்டியன், பாறவர்மன் சுந்தரபாண்டியன், பாண்டிய கேசரிவர்மன் முதலிய பாண்டிய மன்னர்கள் நிலம், நகைகள் மற்றும் கிராமங்களை இந்தக் கோவிலுக்கு தானமாக கொடுத்திருப்பது தெரிய வருகிறது. |