Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருமுருகபூண்டி |
இறைவன் பெயர் : | திருமுருகநாதஸ்வாமி |
இறைவி பெயர் : | ஆவுடைநாயகி |
எப்படிப் போவது : | கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவினாசியில் இருந்து 5 Km தொலைவில், அவினாசி - திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருமுருகபூண்டி |
ஆலயம் பற்றி : கோவில் அமைப்பு: மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் சுமார் 2 1/2 அடி உயரம் உள்ளதாக தரிசனம் தருகிறார். மேற்குப்பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் முருகன் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கம் 5 தலைகளும், பின்பக்கம் ஒரு தலையும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் ஆவுடைநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம். திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும். ...திருசிற்றம்பலம்... |