HolyIndia.Org

திருவிளமர் ( விளமல் ) , பதஞ்சலி மனோகரர் ஆலயம்

பதஞ்சலி மனோகரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவிளமர் ( விளமல் )
இறைவன் பெயர் : பதஞ்சலி மனோகரர்
இறைவி பெயர் : யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி
எப்படிப் போவது : திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் உள்லது.
சிவஸ்தலம் பெயர் : திருவிளமர் ( விளமல் )
ஆலயம் பற்றி :
சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். அதுமட்டுமன்றி இறைவனுக்கு தினமும் மரத்தில் ஏறிப் பூ பறிபதற்காக பாம்பின் கால்களை வேண்டி வரமாகப் பெற்றவர். இவர் மதுரமான குரலினிமை பெற யாழினும் மென்மொழியாள் என்ற இறைவியையும், பதஞ்சலி மனோஹரர் என்ற சிவபெருமானின் லிங்கத் திருவுருவையும் ஏற்படுத்தி பூஜித்த தலம் தான் திருவிளமர். இறைவன் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கிறார். இத்தலத்தில் உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சந்நிதியும் இக்கோவிலில் உள்ளது. கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. பைரவருக்கு தனி சந்நிதி இருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். பைரவரை தேய்பிறை, அஷ்டமி நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். ...திருசிற்றம்பலம்...

திருவிளமர் ( விளமல் ) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.30 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாரூர் அரநெறி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.36 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • ஆரூர் பரவையுண்மண்டளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.69 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகரவீரம் (கரையுபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.88 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பெருவேளூர் ( மணக்கால் ஐயம்பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.19 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிற்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.13 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திரு பள்ளியின்முக்கூடல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.27 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பேரெயில் (ஓகைப்பேரையூர் ,வங்காரப் பேரையூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.59 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசக்கரப்பள்ளி ( அய்யம்பேட்டை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.84 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாட்டியாத்தான்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.91 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.