சிவஸ்தலம் பெயர் : | திருவாவடுதுறை |
இறைவன் பெயர் : | மாசிலாமனி ஈஸ்வரர், பிரகாசமனி நாதர், கோமுதீசர் |
இறைவி பெயர் : | அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை |
தல மரம் : | அரசு (இது, படர்ந்துள்ளதால், படர் அரசு எனப்படுகிறது.) |
தீர்த்தம் : | கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம் |
வழிபட்டோர்: | அம்பிகை, தரும தேவதை, முசுகுந்தச் சக்கரவர்த்தி, திருமூலர், போகர் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்த |
சிவஸ்தலம் பெயர் : | திருவாவடுதுறை |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
- அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு) .
- தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. மேலும் சந்நிதியில்
அரசமரத்தின் நிழலில் கோவில்கொண்டிருக்கும் பேறும் பெற்றது. - தலமரமான படர் அரசின் கீழ், தேவர்களும் முனிவர்களும் வேண்டிட, இறைவன் தாண்டவம் புரிந்தமையால்,
இது போதி அம்பல சபை எனப்படுகிறது(போதி-அரசமரம்). - நந்தி தருமநந்திதேவராவார்.
- முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு, இறைவன் இத் தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும்
காட்டியருளியது. தியாகேசருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. (தியாகர்-செம்பொன் தியாகர்:
ஆசனம்-வீரசிங்காசனம்; நடனம்-சுந்தர நடனம்.)
- திருமூலரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தி, இறைவன் திருவருள் புரிந்த பதி.
- போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளிய பதி.
- முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளித்த பதி.
- சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.
- திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.
...திருசிற்றம்பலம்... |