HolyIndia.Org

திருநீலக்குடி , நீலகண்டேஸ்வரர், நல்லநாயகேஸ்வரர் ஆலயம்

நீலகண்டேஸ்வரர், நல்லநாயகேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருநீலக்குடி
இறைவன் பெயர் : நீலகண்டேஸ்வரர், நல்லநாயகேஸ்வரர்
இறைவி பெயர் : உமையம்மை, அழகாம்பிகை
தல மரம் : பஞ்சவில்வம்
தீர்த்தம் : தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம தீர்த்தம்,க்ஷீரகுண்டம்.
வழிபட்டோர்: வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர்
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து 16 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 4 கி.மி. தொலைவில் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருநீலக்குடி
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் "தென்னலக்குடி" என்று வழங்குகின்றது.

  • பாற்கடலில் அமுதுகடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சையுண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் திருநீலக்குடி என்றாயிற்று.

சிறப்புக்கள்

  • இத்தலத்திற்கு பஞ்சவில்வாரண்ய«க்ஷத்திரம் என்றும் பெயருண்டு.
  • அப்பரின் திருவாக்கில் "நெல்லுநீள் வயல் நீலக்குடி" என்று மலர்ந்ததற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.
  • உட்பிரகாரத்தில் பிரம்மா வழிபட்ட பிரம்மலிங்கம் உள்ளது.
  • மூலவர் - சிறப்பான, அதிசய மூர்த்தியாக திகழ்கிறார். இங்கு மூலவருக்கு தைலாபிஷேகம் (எண்ணெய்) விசேஷம். எவ்வளவு எண்ணெய் வார்த்துத் தேய்த்தாலும் அவ்வளவும் பாணத்திற்குள்ளேயே சுவறிப்போகும்; வெளியே வழியாது. தவமிருக்கும் அம்பாளே, சுவாமிக்குத் தலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஆகவே அம்பாள் முன் எண்ணெய் வைத்துப் பின்பு எடுத்துச் சுவாமிக்குத் தேய்ப்பர். (சித்திரை, கார்த்திகை, மாசியில் இந்த அபிஷேகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
  • இங்குள்ள பலாமரம் தெய்விகமானது. காய்க்குங் காலத்தில் நித்யபடியாக பலாச்சுளை நிவேதமுண்டு. நிவேதித்த பலாச்சுளைச் சாப்பிடுவது நல்லது. ஆனால் நிவேதிக்காமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக்கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாபழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப்போவது இன்றும் கண்கூடானதொன்றாகும் என்று சொல்லப்படுகிறது.
...திருசிற்றம்பலம்...

திருநீலக்குடி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவாவடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.15 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்குரங்காடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.85 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கோழம்பம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.24 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோடிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.67 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.27 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருத்துருத்தி ( குத்தாலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.41 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.61 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவைகன் மாடக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.85 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவழுந்தூர் (தேரழுந்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.34 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேள்விக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.41 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.