HolyIndia.Org

ஆவூர் பசுபதீச்சரம் , பசுபதீஸ்வரர் ஆலயம்

பசுபதீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : ஆவூர் பசுபதீச்சரம்
இறைவன் பெயர் : பசுபதீஸ்வரர்
இறைவி பெயர் : மங்களாம்பிகை, பங்கஜவல்லி
தல மரம் : அரசு
தீர்த்தம் : பிரமதீர்த்தம், காமதேனுதீர்த்தம்
வழிபட்டோர்: காமதேனு, பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், வசிட்டர்
எப்படிப் போவது : கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே 6 கி.மி. தொலைவில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
சிவஸ்தலம் பெயர் : ஆவூர் பசுபதீச்சரம்
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • ஊர் - ஆவூர்; கோயில் - பசுபதீச்சுரம்.

  • வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கியதலம். (காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ + வந்த + குடி = கோவந்தகுடி ஆயிற்று)
  • கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.
  • இங்குள்ள இரு அம்பிகைகளில், மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் "பங்கயமங்கை விரும்பும் ஆவூர் " என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.)

சிறப்புக்கள்

  • கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில்.
  • மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
  • சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சார்றோர்களைத் தந்த ஊர்.
  • கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.
  • கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
...திருசிற்றம்பலம்...

ஆவூர் பசுபதீச்சரம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருசத்திமுத்தம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.79 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • பட்டீச்சரம் (பட்டீஸ்வரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.96 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலஞ்சுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.05 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாலைத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.95 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • பழையாறை வடதளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.77 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.27 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கொட்டையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.62 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குடமூக்கு (கும்பகோணம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.00 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஇன்னாம்பர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.28 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குடந்தைக் காரோணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.38 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.