HolyIndia.Org

திருப்புள்ளமங்கை , ஆலந்துறை நாதர், பசுபதி நாதர் ஆலயம்

ஆலந்துறை நாதர், பசுபதி நாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருப்புள்ளமங்கை
இறைவன் பெயர் : ஆலந்துறை நாதர், பசுபதி நாதர்
இறைவி பெயர் : அல்லியங்கோதை
தல மரம் : ஆலமரம்
தீர்த்தம் : திருக்குளம்
எப்படிப் போவது : தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள பசுபதிகோவில் ரயில் நிலையத்தில் இருந்து வடமேற்கே 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருப்புள்ளமங்கை
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • ஊர்ப்பெயர் பண்டை நாளில் "புள்ள மங்கை" என்றும், கோயிற் பெயர் "ஆலந்துறை" என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி "பசுபதி கோயில்" என்று வழங்குகின்றது. "புள்ளமங்கை" என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் இருக்கின்றன.

  • குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் "ஆலந்துறை" என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.
  • அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.

சிறப்புக்கள்

  • விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம். கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.
  • இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார்.
  • இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.)
  • இக்கோயில் கல்வெட்டுக்களில் "ஆலந்துறை மகாதேவர் கோயில்" என்று குறிக்கப்படுகிறது.
  • முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன.
  • (சம்பந்தர் இப்பாட்டில் "பொந்தின்னிடைத் தேன்ஊறிய" என்று பாடியிருப்பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சையிலிருந்து பசுபதிகோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது. கும்பகோணம் - தஞ்¢சாவூர் இருப்புப் பாதையில் பசுபதிகோயில் புகைவண்டி நிலையம் உள்ளது.
...திருசிற்றம்பலம்...

திருப்புள்ளமங்கை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • வடகுரங்காடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.19 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.09 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.63 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்குடித்திட்டை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.08 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.20 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.44 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்டியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.53 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பெரும்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.04 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.52 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கருகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.63 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.