ஆலயம் பற்றி :
தல வரலாறு
மக்கள் வழக்கில் திருவாலம்பொழில், திருவாம்பொழில் என வழங்குகிறது.
இத்தலக் கல்வெட்டில் இறைவனை "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர் " என்று குறிக்கப்படுவதுடன், அப்பரும், தம் திருத்தாண்டகத்தில், "தென் பரம்பைக்குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே " என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம் பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.
சிறப்புக்கள்
காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டு பேறு பெற்ற சிறப்புடையத் தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ள தலம். கண்டியூரிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழயாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
...திருசிற்றம்பலம்... |