HolyIndia.Org

திருவாட்போக்கி (ரத்னகிரி) , வாட்போக்கி நாதர், ரத்னகிரிநாதர் ஆலயம்

வாட்போக்கி நாதர், ரத்னகிரிநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவாட்போக்கி (ரத்னகிரி)
இறைவன் பெயர் : வாட்போக்கி நாதர், ரத்னகிரிநாதர்
இறைவி பெயர் : கரும்பார்குழலி
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர்: இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன்
எப்படிப் போவது : குளித்தலைக்கு தெற்கே சுமார் 9 கி.மி. தொலைவில் ரத்னகிரி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்திருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில மார்க்கத்தில் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருவாட்போக்கி (ரத்னகிரி)
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.

  • மாணிக்கம் வேண்டிவந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நிரால் நிரப்பச் சொன்னார், அது எப்படியும் நிரம்பால் இருக்கக் கண்டு, கோபங் கொண்ட அரசன், உடைவாளை ஓச்ச, இறைவனும் மாணிக்கத்தைத் தந்து அருளினார். மனம் திருந்திய அரசன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு. அம்மன்னன் வெட்டியதால் சுவாமிக்கு முடித்தழும்பர் என்றும் பெயர் பெறலாயிற்று. இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.
  • இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச்செய்தி. "காகம் அணுகாமலை" என்பர். "காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பரம்பு " என்பது நாகைக் காரோணப் புராணத் தொடர்.
  • அருகில் உள்ள கடம்பர் கோயில், வாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் முறையே காலை, நண்பகல், அந்தியில் தரிசித்தல் சிறப்பு என்பது மரபு.

சிறப்புக்கள்

  • இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
  • அகத்தியர் இங்குச் சுவாமியை நண்பகலில் தரிசித்து அருள் பெற்றமையால் இங்கு நண்பகல் தரிசனம் விசேஷம். இதனால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார்.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி. கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
  • சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாள்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.
  • சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.
  • இப்பெருமானுக்கு நாடொறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)
அப்பர் பாடியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. கால பாசம் பிடித்தெழு தூதுவர் பால கர்விருத் தர்பழை யாரெனார் ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. ...திருசிற்றம்பலம்...

திருவாட்போக்கி (ரத்னகிரி) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருகடம்பந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.16 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஈங்கோய்மலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.09 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பராய்த்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.09 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பைஞ்ஞீலி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.83 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.83 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கற்குடி (உய்யக் கொண்டான் மலை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.98 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமூக்கிச்சரம் (உறையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.33 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கருவூர் (கரூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 34.48 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சிராப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 34.68 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவானைக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.38 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.