HolyIndia.Org

திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி ) , மாற்றுரைவரதீஸ்வரர் ஆலயம்

மாற்றுரைவரதீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி )
இறைவன் பெயர் : மாற்றுரைவரதீஸ்வரர்
இறைவி பெயர் : பாலாம்பிகை, பாலசுந்தரி
தல மரம் : வன்னி
தீர்த்தம் : சிலம்பாறு. (பங்குனியாறு, அமலையாறு என்றும் கூறுவர்)
வழிபட்டோர்: பிரமன், லட்சுமி, உமாதேவி
எப்படிப் போவது : திருச்சியில் இருந்து 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி )
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • "பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்று வழங்கப்பெற்றது"; திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது.

  • கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த "முயலகன்" நோயைச் சம்பந்தர் தீர்த்த பதி. இதனால் நடராசர் திருவடியில், முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளது. நடராசர் சர்ப்ப நடன மூர்த்தியாக காட்சித் தருகிறார். ( "முயலகன் என்பது வலிப்பும் வயிற்று வலியும் வரும் ஒரு வகை நோய்" )

சிறப்புக்கள்

  • சுந்தரர் பொன் பெற்றத் தலம்.

  • இத்தல இறைவன், சுந்தரர் தம் பொன்னை மாற்றுக் குறைவதாக உரைத்துக் காட்ட அறிந்த பிரான் - "மாற்றறிவரதர் " என்றும்; வன்னிசூழ்ந்த வனத்தில் உள்ளவராதலின் "சமீவனேஸ்வரர் " என்றும்; பிரமன் வழிபட்டவராதலின் பிரமபுரீசுவரர் என்றும் விளங்குகிறார்.
  • முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் "ஆவுடையாப்பிள்ளை மண்டபம் " எனப்படுகிறது. இம்மண்டபத்தூணில் சந்பந்தர், கொல்லி மழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் அழகாக உள்ளன.
  • சுவாமி சந்நிதியில் சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு "கிழி கொடுத்தருளிய திருவாசல்" என்ற பெயரால் குறிக்கின்றது.
  • இங்குள்ள சுந்தரர் மூர்த்தம், இரு கைகளிலும் தாளம் ஏந்திப்பாடும் அமைப்பில் உள்ளது.
  • இத்தல கல்வெட்டில் "பாச்சில் திருவாச்சிராமத்துப் பெருமானடிகள்" என்று இறைவனின் திருநாமம் குறிக்கப்படுகிறது.
  • இக்கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது.
  • கி. பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - சேலம் பேருந்துச் சாலையில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது.
...திருசிற்றம்பலம்...

திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி ) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவானைக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.11 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமூக்கிச்சரம் (உறையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.90 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சிராப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.73 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கற்குடி (உய்யக் கொண்டான் மலை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.35 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பராய்த்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.75 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபாற்றுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.43 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமாந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.34 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெறும்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.63 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅன்பில் ஆலாந்துறை (அன்பில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.23 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகடம்பந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.63 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.