HolyIndia.Org

திருக்குருகாவூர் வெள்ளடை , வெள்ளடையீசுவரர், சுவேத ரிஷபேஸ்வரர் ஆலயம்

வெள்ளடையீசுவரர், சுவேத ரிஷபேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருக்குருகாவூர் வெள்ளடை
இறைவன் பெயர் : வெள்ளடையீசுவரர், சுவேத ரிஷபேஸ்வரர்
இறைவி பெயர் : நீலோத்பவ விசாலாட்சி, காவியம் கன்னியம்மை
தீர்த்தம் : பால் கிணறு
எப்படிப் போவது : சீகாழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் உள்ள வடகால் என்னும் இடத்தில் இறங்கி 1 Km நடந்து சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம்.
சிவஸ்தலம் பெயர் : திருக்குருகாவூர் வெள்ளடை
ஆலயம் பற்றி :
தல வரலாறு சோழநாட்டு காவிரி வடகரையில் இது 13வது தலமாகும். ஊர் = குருகாவூர்; கோயில் = வெள்ளடை. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியைப் போக்கியருளிய தலம். சிறப்புக்கள் தை அமாவாசை நாளில் இறைவன் தல தீர்த்தமான பால் கிணற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பது சிறப்பானது. (சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியப்போக்கி அற்புதம் நிகழ்த்திய இடம் "வரிசைப்பற்று" என்றும், "இடமணல்" என்றும் மக்களால் சொல்லப்படுகிறது. அவ்விடம் தென்திருமுல்லைவாயில் செல்லும் வழியில், இங்கிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது; அவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலில் முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்து இறைவன் பெயரை வெள்ளடை மகாதேவர் என்றும், குருகாவூர் வெள்ளடையப்பன் என்றும் மேற்படி கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கல்வெட்டுக்கல் கோயிலுக்கு நிபந்தங்கள் ஏற்படுத்திய செய்திகளைத் தெரிவிக்கின்றன. சீர்காழி - தென் திருமுல்லைவாயில் சாலையில், வடகால் என்னும் ஊரில், சாலையில் குருகாவூருக்கு பிரிந்து செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்றால் குருகாவூரை அடையலாம். தற்போது மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது. ...திருசிற்றம்பலம்...

திருக்குருகாவூர் வெள்ளடை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • சீர்காழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.60 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.63 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.76 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்திருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.45 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.95 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.22 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.97 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.11 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.88 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசாய்க்காடு (சாயாவனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.66 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.