HolyIndia.Org

கீழை திருக்காட்டுப்பள்ளி , ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : கீழை திருக்காட்டுப்பள்ளி
இறைவன் பெயர் : ஆரண்ய சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர் : அகிலாண்ட நாயகி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர்: இந்திரன், நண்டு
எப்படிப் போவது : சீர்காழியில் இருந்து சுமார் 10 Km தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து சுமார் 2 Km தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் : கீழை திருக்காட்டுப்பள்ளி
ஆலயம் பற்றி :
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவ ரேறுவர் மேலுலகே. 
தல வரலாறு விருத்திராசுரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட தலம். நண்டு பூசித்த பதி. சிறப்புக்கள் இக்கோயிலுள் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. மண்டபத்தில் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன. சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுது குளபுரம் தாண்டி, இத்தலத்தை அடையலாம். திருவெண்காட்டிலிருந்து இலையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 1 1/2 கி.மீ.-ல் இத்தலம் உள்ளது. ...திருசிற்றம்பலம்...

கீழை திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவெண்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.35 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசாய்க்காடு (சாயாவனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.12 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.19 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபல்லவனீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.64 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலைச்சங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.71 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.01 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.82 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.20 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.50 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.95 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.