ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவ ரேறுவர் மேலுலகே.
தல வரலாறு
விருத்திராசுரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட தலம்.
நண்டு பூசித்த பதி.
சிறப்புக்கள்
இக்கோயிலுள் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன.
மண்டபத்தில் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுது குளபுரம் தாண்டி, இத்தலத்தை அடையலாம். திருவெண்காட்டிலிருந்து இலையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 1 1/2 கி.மீ.-ல் இத்தலம் உள்ளது.
...திருசிற்றம்பலம்... |