HolyIndia.Org

இரும்பை மாகாளம் ஆலய தேவாரம்

இரும்பை மாகாளம் ஆலயம்
2-117-2735:
மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான் 
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன் 
வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ் 
சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே. 

2-117-2736:
மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான் 
கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம் 
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் 
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே. 

2-117-2737:
வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின 
கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின 
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள் 
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. 

2-117-2738:
வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடைய[ர்தியான் 
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள் 
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில் 
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. 

2-117-2739:
நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள் 
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம் 
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் 
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. 

2-117-2740:
பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள் 
கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி 
ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள் 
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே. 

2-117-2741:
குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை 
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை 
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள் 
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. 

2-117-2742:
பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத் 
தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம் 
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள் 
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. 

2-117-2743:
நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான் 
அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே 
இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள் 
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே. 

2-117-2744:
அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி 
எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவு[ன்றினான் 
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள் 
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே. 

2-117-2745:
அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி 
பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங் 
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள் 
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. 

2-117-2746:
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள் 
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில் 
அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம் 
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே.