HolyIndia.Org

திருச்செங்கோடு ஆலய தேவாரம்

திருச்செங்கோடு ஆலயம்
1-107-1152:
வெந்தவெண் ணீறணிந்து விரிநுல் திகழ்மார்பின் நல்ல 
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக் 
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் நின்ற 
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. 

1-107-1153:
அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம் 
மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக் 
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் நின்ற 
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 

1-107-1154:
பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல 
ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக் 
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் மல்கும் 
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 

1-107-1155:
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங் 
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச் 
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்று{ர் நின்ற 
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே. 

1-107-1156:
பொன்றிகழ் ஆமையொடு புரிநுல் திகழ்மார்பில் நல்ல 
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக் 
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்று{ர் வானில் 
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே. 

1-107-1157:
ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி 
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து 
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் வாய்ந்த 
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே. 

1-107-1158:
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை 
வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க் 
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்று{ர் நின்ற 
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே. 

1-107-1159:
மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று 
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக் 
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் மேய 
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 

1-107-1160:
செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற 
அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான் 
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் மேய 
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே. 

1-107-1161:
போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நுல் 
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள் 
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் நின்ற 
வேதியனைத் தொழநும் வினையான வீடுமே. 

1-107-1162:
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந் 
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன் 
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்று{ ரேத்தும் 
நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே.