HolyIndia.Org

திருவாடானை ஆலய தேவாரம்

திருவாடானை ஆலயம்
2-112-2681:
மாதோர் கூறுகந் தேற தேறிய 
ஆதியா னுறை ஆடானை 
போதினாற் புனைந் தேத்து வார்தமை 
வாதியா வினை மாயுமே. 

2-112-2682:
வாடல் வெண்டலை அங்கை யேந்திநின் 
றாடலா னுறை ஆடானை 
தோடுலா மலர் தூவிக் கைதொழ 
வீடும் நுங்கள் வினைகளே. 

2-112-2683:
மங்கை கூறினன் மான்ம றியுடை 
அங்கை யானுறை ஆடானை 
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர் 
மங்கு நோய்பிணி மாயுமே. 

2-112-2684:
சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை 
அண்ண லானுறை ஆடானை 
வண்ண மாமலர் தூவிக் கைதொழ 
எண்ணு வாரிடர் ஏகுமே. 

2-112-2685:
கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய 
ஐயன் மேவிய ஆடானை 
கைய ணிம்மல ரால்வ ணங்கிட 
வெய்ய வல்வினை வீடுமே. 

2-112-2686:
வானி ளம்மதி மல்கு வார்சடை 
ஆனஞ் சாடலன் ஆடானை 
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த 
ஊன முள்ள வொழியுமே. 

2-112-2687:
துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை 
அலங்க லானுறை ஆடானை 
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும் 
வலங்கொள் வார்வினை மாயுமே. 

2-112-2688:
வெந்த நீறணி மார்பிற் றோல்புனை 
அந்த மில்லவன் ஆடானை 
கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ் 
சிந்தை யார்வினை தேயுமே. 

2-112-2689:
மறைவல் லாரொடு வான வர்தொழு 
தறையுந் தண்புனல் ஆடானை 
உறையும் ஈசனை யேத்தத் தீவினை 
பறையும் நல்வினை பற்றுமே. 

2-112-2690:
மாய னும்மல ரானுங் கைதொழ 
ஆய அந்தணன் ஆடானை 
தூய மாமலர் தூவிக் கைதொழ 
தீய வல்வினை தீருமே. 

2-112-2691:
வீடி னார்மலி வேங்க டத்துநின் 
றாட லானுறை ஆடானை 
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ் 
பாட நோய்பிணி பாறுமே.