HolyIndia.Org

திருபயற்றூர் ஆலய தேவாரம்

திருபயற்றூர் ஆலயம்
4-32-4472:
உரித்திட்டார் ஆனை யின்றோள் 
உதிரவா றொழுகி யோட 
விரித்திட்டார் உமையா ளஞ்சி 
விரல்விதிர்த் தலக்கண் நோக்கித் 
தரித்திட்டார் சிறிது போது 
தரிக்கில ராகித் தாமுஞ் 
சிரித்திட்டார் எயிறு தோன்றத் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4473:
உவந்திட்டங் குமையோர் பாகம் 
வைத்தவர் ஊழி ய[ழி 
பவந்திட்ட பரம னார் தாம் 
மலைச்சிலை நாகம் ஏற்றிக் 
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங் 
கனலெரி யாகச் சீறிச் 
சிவந்திட்ட கண்ணர் போலுந் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4474:
நங்களுக் கருள தென்று 
நான்மறை யோது வார்கள் 
தங்களுக் கருளும் எங்கள் 
தத்துவன் றழலன் றன்னை 
எங்களுக் கருள்செய் யென்ன 
நின்றவன் நாகம் அஞ்சுந் 
திங்களுக் கருளிச் செய்தார் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4475:
பார்த்தனுக் கருளும் வைத்தார் 
பாம்பரை யாட வைத்தார் 
சாத்தனை மகனா வைத்தார் 
சாமுண்டி சாம வேதங் 
கூத்தொடும் பாட வைத்தார் 
கோளரா மதியம் நல்ல 
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4476:
மூவகை மூவர் போலும் 
முற்றுமா நெற்றிக் கண்ணர் 
நாவகை நாவர் போலும் 
நான்மறை ஞான மெல்லாம் 
ஆவகை யாவர் போலும் 
ஆதிரை நாளர் போலுந் 
தேவர்கள் தேவர் போலுந் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4477:
ஞாயிறாய் நமனு மாகி 
வருணனாய்ச் சோம னாகித் 
தீயறா நிருதி வாயுத் 
திப்பிய சாந்த னாகிப் 
பேயறாக் காட்டி லாடும் 
பிஞ்ஞகன் எந்தை பெம்மான் 
தீயறாக் கையர் போலுந் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4478:
ஆவியாய் அவியு மாகி 
அருக்கமாய்ப் பெருக்க மாகிப் 
பாவியர் பாவந் தீர்க்கும் 
பரமனாய்ப் பிரம னாகிக் 
காவியங் கண்ண ளாகிக் 
கடல்வண்ண மாகி நின்ற 
தேவியைப் பாகம் வைத்தார் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4479:
தந்தையாய்த் தாயு மாகித் 
தரணியாய்த் தரணி யுள்ளார்க் 
கெந்தையு மென்ன நின்ற 
ஏழுல குடனு மாகி 
எந்தையெம் பிரானே என்றென் 
றுள்குவா ருள்ளத் தென்றுஞ் 
சிந்தையுஞ் சிவமு மாவார் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4480:
புலன்களைப் போக நீக்கிப் 
புந்தியை யொருங்க வைத்து 
இலங்களைப் போக நின்று 
இரண்டையும் நீக்கி யொன்றாய் 
மலங்களை மாற்ற வள்ளார் 
மனத்தினுட் போக மாகிச் 
சினங்களைக் களைவர் போலுந் 
திருப்பயற் று{ர னாரே. 

4-32-4481:
மூர்த்திதன் மலையின் மீது 
போகாதா முனிந்து நோக்கிப் 
பார்த்துத்தான் பூமி மேலாற் 
பாய்ந்துடன் மலையைப் பற்றி 
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் 
அடர்த்துநல் லரிவை யஞ்சத் 
தேத்தெத்தா என்னக் கேட்டார் 
திருப்பயற் று{ர னாரே.