HolyIndia.Org

திருச்சிராப்பள்ளி ஆலய தேவாரம்

திருச்சிராப்பள்ளி ஆலயம்
1-98-1058:
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே 
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் 
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் 
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. 

1-98-1059:
கைம்மகவேந்திக் கடுவனொ^டிக் கழைபாய்வான் 
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி 
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ 
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. 

1-98-1060:
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல் 
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச் 
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடைய[ரும் 
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 

1-98-1061:
துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச் 
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் 
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் 
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே. 

1-98-1062:
கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ் 
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித் 
தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள் 
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 

1-98-1063:
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது 
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார் 
தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில் 
ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 

1-98-1064:
வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும் 
சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார் 
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் 
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 

1-98-1065:
மலைமல்குதோளன் வலிகெடவு[ன்றி மலரோன்றன் 
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார் 
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் 
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 

1-98-1066:
அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக் 
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த 
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும் 
இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே. 

1-98-1067:
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை 
ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல் 
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார் 
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 

1-98-1068:
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த 
கானல்சங்கேறுங் கழுமலவு[ரில் கவுணியன் 
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார் 
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. 

5-85-6068:
மட்டு வார்குழ லாளொடு மால்விடை 
இட்ட மாவுகந் தேறும் இறைவனார் 
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ் 
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. 

5-85-6069:
அரிய யன்றலை வெட்டிவட் டாடினார் 
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள் 
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார் 
அரிய யன்றொழ அங்கிருப் பார்களே. 

5-85-6070:
அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு 
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள் 
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை 
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 

5-85-6071:
தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப் 
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை 
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய 
நாய னாரென நம்வினை நாசமே.