HolyIndia.Org

கீழை திருக்காட்டுப்பள்ளி ஆலய தேவாரம்

கீழை திருக்காட்டுப்பள்ளி ஆலயம்
1-5-45:
செய்யரு கேபுனல் பாயஓங்கிச் 
செங்கயல் பாயச் சிலமலர்த்தேன் 
கையரு கேகனி வாழையீன்று 
கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப் 
பையரு கேயழல் வாயவைவாய்ப் 
பாம்பணை யான்பணைத் தோளிபாகம் 
மெய்யரு கேயுடை யானையுள்கி 
விண்டவ ரேறுவர் மேலுலகே. 

1-5-46:
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து 
செழுமணி முத்தொடு பொன்வரன்றிக் 
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் 
காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி 
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல 
உத்தம ராயுயர்ந் தாருலகில் 
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் 
காட்செய அல்லல் அறுக்கலாமே. 

1-5-47:
தோலுடை யான்வண்ணப் போர்வையினான் 
சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு 
நுலுடை யானிமை யோர்பெருமான் 
நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங் 
காலுடை யான்கரி தாயகண்டன் 
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி 
மேலுடை யானிமை யாதமுக்கண் 
மின்னிடை யாளொடும் வேண்டினானே. 

1-5-48:
சலசல சந்தகி லோடும்உந்திச் 
சந்தன மேகரை சார்த்தியெங்கும் 
பலபல வாய்த்தலை யார்த்துமண்டி 
பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய் 
கலகல நின்றதி ருங்கழலான் 
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச் 
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற 
சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. 

1-5-49:
தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் 
தாமரை செங்கழு நீருமெல்லாங் 
களையவி ழுங்குழ லார்கடியக் 
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித் 
துளைபயி லுங்குழல் யாழ்முரல 
துன்னிய இன்னிசை யால்துதைந்த 
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் 
காட்செய அல்லல் அறுக்கலாமே. 

1-5-50:
முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் 
முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக் 
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி 
காதல்செய் தான்கரி தாயகண்டன் 
பொடியணி மேனியி னானையுள்கிப் 
போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின் 
றடிகையி னாற்றொழ வல்லதொண்டர் 
அருவினை யைத்துரந் தாட்செய்வாரே. 

1-5-51:
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் 
பெய்கழல் நாடொறும் பேணியேத்த 
மறையுடை யான்மழு வாளுடையான் 
வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட 
கறையுடை யான்கன லாடுகண்ணாற் 
காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக் 
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் 
குரைகழ லேகைகள் கூப்பினோமே. 

1-5-52:
செற்றவர் தம்அர ணம்மவற்றைச் 
செவ்வழல் வாயெரி ய[ட்டிநின்றுங் 
கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் 
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி 
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல 
உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற 
பெற்றம ரும்பெரு மானையல்லால் 
பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே. 

1-5-53:
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் 
துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங் 
குண்டர்க ளோடரைக் கூறையில்லார் 
கூறுவ தாங்குண மல்லகண்டீர் 
அண்டம றையவன் மாலுங்காணா 
ஆதியி னானுறை காட்டுப்பள்ளி 
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை 
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. 

1-5-54:
பொன்னியல் தாமரை நீலம்நெய்தல் 
போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக் 
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் 
காதல னைக்கடற் காழியர்கோன் 
துன்னிய இன்னிசை யாற்றுதைந்து 
சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல 
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் 
தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.