சிவஸ்தலம் பெயர் : | திருப்பூந்துருத்தி |
இறைவன் பெயர் : | புஷ்பவன நாதர் |
இறைவி பெயர் : | சௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி |
தல மரம் : | வில்வம் |
தீர்த்தம் : | சூரிய தீர்த்தம் |
வழிபட்டோர்: | இந்திரன், திருமால், இலக்குமி, சூரியன், காசிபர் |
எப்படிப் போவது : | அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பூந்துருத்தி |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.
- "பூந்துருத்தி காடவநம்பி "யின் அவதாரத் தலம்.
- இத்தலத்திலும் நந்தி விலகியுள்ளது. (தலபுராணம் தொடர்புடையது.)
- ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம். இவ்விடம் சம்பந்தர் மேடு என்று சொல்லப்படுகிறது. (திருவாம்பொழிலுக்குப் பக்கத்தில்
வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு உள்ளது. இங்கு இருவருக்கும் கோயில் உள்ளது; விழா நடைபெறுகிறது.)
- அப்பர் அமைத்த - "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல
தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.
- கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன.
- மகிடனையழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும்
தரிசிக்கச் சிறப்புடையன.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய மூன்று பதிகங்களில் நில்லாத நீர்சடைமேல் என்று தொடங்கும் பதிகத்தில் இருந்து ஒரு பாடல்...திருசிற்றம்பலம்... |