Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருவானைக்கா |
இறைவன் பெயர் : | ஜம்புகேஸ்வரர் |
இறைவி பெயர் : | அகிலாண்டேஸ்வரி |
தல மரம் : | வெண்நாவல் |
தீர்த்தம் : | காவிரி,இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம் |
வழிபட்டோர்: | அம்பிகை, சிலந்தி,யானை |
எப்படிப் போவது : | திருவானைக்கா திருச்சி நகரின் ஒரு பகுதியாகும் |
சிவஸ்தலம் பெயர் : | திருவானைக்கா |
ஆலயம் பற்றி : தல வரலாறு: புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும்,மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். தல வரலாறு பிரமன் திலோத்தமை மேல் காதல் கொண்ட பாவம் தீரும் பொருட்டு பூசித்த தலம். ஆனை வழிபட்டதால், இது இப்பெயர் பெற்றது. இறைவனைப் பூசித்த சிலந்தி ஆனையேறாத பல மாடக்கோயில்கள் கட்டிய சோழமாமன்னர் கோச்செங்கட்சோழராக அருள்பெற்ற இடம். ஈசன்,சித்தராக வந்து திரு நீறு அளித்து, அதனைக் கூலியாக்கி, நான்காவது பிராகார மதிற்சுவர் கட்டியதால், அது, திருநீற்றான் மதில் எனப்படுகிறது. சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது கழன்று விழுந்த ஆரத்தை, இறைவன் திருமஞ்சன நீர் குடத்தின் மூலமாக, தான் ஏற்றார். சிறப்புக்கள் மிகப்பெரிய திருக்கோயில். பஞ்ச பூத தலங்களுள் இது அப்புத் தலமாகும். ஆதி சங்கரர்,இங்குள்ள அம்பிகைக்கு இரண்டு சக்கரங்கள் செய்து, தோடாக அணிவித்தார். பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் மொத்தம் 154 உள்ளன. ...திருசிற்றம்பலம்... |