ஆலயம் பற்றி : தல வரலாறு
மக்கள் வழக்கில் "திருவாய்ப்பாடி" என்று வழங்குகிறது.
இத்தலத்தில் சண்டேசுவரர் வழிபட்டு பேறு பெற்ற பெருமையுடையது.
சிறப்புக்கள்
மூலவர் - சிவலிங்கத் திருமேனி.
கொடிமரமில்லை.
முன் மண்டபம் வெளவால் நெத்தியமைப்புடையது.
கல்வெட்டில் இறைவன் பெயர் "ஆப்பாடி உடையார் " என்றுள்ளது.
தற்போதைய நிலை (தேவை)
கோயில் மிகவும் பழுதடைந்துள்ளது; இக்கோயிலுக்கு ஊர்மக்கள் வருகிறார்களா என்பதே ஐயமாகவுள்ளது. திருப்பணி செய்வது மிகவும் அவசியமானதொன்று. இல்லையெனில் கோயில் அடுத்த தலைமுறையினருக்கு காணக்கிடைக்குமோ? என்பதை எண்ணில் நெஞ்சு கலங்குகிறது. குருக்களின் பாதுகாப்பிலேயே இக்கோயில் ஓரளவேனும் பராமரிக்கப்பட்டுவருகிறது. 1961-ல் குடமுழுக்கு நடந்துள்ளது. வாகனங்கள் எல்லாம் மிகவும் பழுதடைந்துள்ளது. நித்ய வழிபாடு தவிர பிற விசேஷம் எதுவுமில்லை.
...திருசிற்றம்பலம்... |