HolyIndia.Org

திருஓமாம்புலியூர் , துயரந்தீர்த்தநாதர் ஆலயம்

துயரந்தீர்த்தநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருஓமாம்புலியூர்
இறைவன் பெயர் : துயரந்தீர்த்தநாதர்
இறைவி பெயர் : பூங்கொடிநாயகி
தல மரம் : வதரி (இலந்தை)
தீர்த்தம் : கொள்ளிடம், கௌரிதீர்த்தம்
வழிபட்டோர்: வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்), அம்பிகை
எப்படிப் போவது : சிதம்பரத்தில் இருந்து 30 கி.மி. தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருஓமாம்புலியூர்
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது.

  • இவ்வூர் பிற புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு ஓமம் ஆம்புலியூர் = ஓமமாம்புலியூர் எனப்பட்டது. (சம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று வருகிறது. இக்கோயில் வடதளி என்றும் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது.)
  • இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம். ஓமம் - வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = ஓமாம்புலியூர் என்றாயிற்று என்றும் கூறுவர்.
  • ஊரின் பெயர் - ஓமாம் புலியூர்; கோயில் பெயர் - வடதளி.

சிறப்புக்கள்

  • மூலவர் சுயம்பு மூர்த்தி - சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார்.
  • இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சிறப்புடையது; குருமூர்த்தத் தலம். உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சித் தருகிறார்.
  • சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும்; மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
  • சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
  • மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் "வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் " என்றும்; இறைவன் பெயர் "வடதளி உடையார் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
...திருசிற்றம்பலம்...

திருஓமாம்புலியூர் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.34 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.81 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.47 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.88 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.87 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.03 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.34 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • நீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.67 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாரையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.10 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபந்தனைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.76 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.