HolyIndia.Org

திருவேட்களம் , பாசுபதநாதர் ஆலயம்

பாசுபதநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவேட்களம்
இறைவன் பெயர் : பாசுபதநாதர்
இறைவி பெயர் : நல்லநாயகி, சற்குனாம்பாள்
தல மரம் : மூங்கில்
தீர்த்தம் : தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில் உள்ளது
வழிபட்டோர்: நாரதர், அர்ச்சுனன்
எப்படிப் போவது : சிதம்பரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் அண்ணாமலை பல்கலைக் கழகம் வளாகத்தின் உள்ளே பின்புறம் சங்கீதக் கல்லூரியைக் கடந்து சென்று இத்தலத்தை அடையலாம்.
சிவஸ்தலம் பெயர் : திருவேட்களம்
ஆலயம் பற்றி :
திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார். அர்ஜுனன் இத்தலத்தில் தான் இறைவன் பாசுபதநாதரிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற்றான். பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது. நாரதர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்....திருசிற்றம்பலம்...

திருவேட்களம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருநெல்வாயல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.15 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கழிப்பாலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.32 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • சிதம்பரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.92 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.96 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமயேந்திரப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.62 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாரையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.89 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • சீர்காழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.17 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.72 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.00 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.51 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.