| சிவஸ்தலம் பெயர் : | திருவிளநகர் |
| இறைவன் பெயர் : | துறைகாட்டும் வள்ளலார், உசிரவனேஸ்வரர் |
| இறைவி பெயர் : | வேயுறு தோளியம்மை |
| தீர்த்தம் : | மெய்ஞ்ஞான தீர்த்தம் |
| வழிபட்டோர்: | கபித்தன் என்னும் அரசன் |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருவிளநகர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி :
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 5 நிலை ராஜகோபுரம் கொண்டது துறை காட்டும் வள்ளலார் கோவில். இக்கோவில் 2 பிரகாரங்களைக் கொண்டது. இரண்டாவது பிரகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும், ஆஸ்தான மனடபமும் இருக்கின்றன. 2 வது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார். மூலவர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இறைவி வேயுறுதோளியம்மை தந்து திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆக்யோருக்கு சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் நடராஜர், கிழக்கில் நவக்கிரஹ சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
தல வரலாறு அருள்வித்தகர் என்னும் அந்தணர், ஈசனுக்குப் பூக்கூடையை எடுத்துக்கொண்டு காவிரியாற்றில் வரும்போது, வெள்ளம் அவரை அடித்துச்செல்ல, இறைவன் துறை காட்டிக் கரையேற்றுவித்து, அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன், இப்பெயர் பெற்றார்.இது இத் தலத் தேவாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கபித்தன் என்னும் அரசன் பூஜித்து பிரமகத்தி தோஷம் நீங்கப்பெற்றான். சிறப்புக்கள் இக் கோவில் தருமை ஆதினக் கோவிலாகும். இங்கு, மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. ...திருசிற்றம்பலம்... | |