| சிவஸ்தலம் பெயர் : | திருநெடுங்களம் |
| இறைவன் பெயர் : | நித்யசுந்தரர் |
| இறைவி பெயர் : | ஒப்பிலா நாயகி |
| தல மரம் : | வில்வம் |
| தீர்த்தம் : | அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம். |
| வழிபட்டோர்: | அகத்தியர் |
| எப்படிப் போவது : | திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் உள்ள சோலகம்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் நெடுங்குளம் சிவஸ்தலம் இருக்கிறது. சாலை வழியாகச் செல்ல திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மி. சென்றால் |
| சிவஸ்தலம் பெயர் : | திருநெடுங்களம் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.
- மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.
- நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
- மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.
- இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும்
ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.
- கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும்; இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
- இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் சந்நிதி மேற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். அருணகிரிநாதர் இத்தலத்து முருகர் மேல் திருப்புகழில் ஒரு பாடல் பாடியுள்ளார். ...திருசிற்றம்பலம்... |