1841
மைய லகற்றீ ரொற்றியுளீர் 

வாவென் றுரைப்பீ ரோவென்றேன் 
செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் 

செவ்வ னுரைத்தா லிருவாவென் 
றுய்ய வுரைப்பே மென்றார்நும் 

முரையென் னுரையென் றேனிங்கே 
யெய்யுன் னுரையை யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1842
தாவென் றருளு மொற்றியுளீர் 

தமியேன் மோக தாகமற 
வாவென் றருள்வீ ரென்றேனவ் 

வாவின் பின்னர் வருமெழுத்தை 
மேவென் றதனிற் சேர்த்ததிங்கே 

மேவி னன்றோ வாவென்பே 
னேவென் றிடுகண் ணென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1843
என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ 

ரென்னை யணைவா னினைவீரேற் 
பொன்மேல் வெள்ளி யாமென்றேன் 

பொன்மேற் பச்சை யாங்கதன்மே 
லன்மேற் குழலாய் சேயதன்மே 

லலவ னதன்மேன் ஞாயிறஃ 
தின்மே லொன்றின் றென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1844
வயலா ரொற்றி மேவுபிடி 

வாதர் நாம மியாதென்றேன் 
மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் 

வந்த விளைய நாமமென்றார் 
செயலார் கால மறிந்தென்னைச் 

சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங் 
கியலா ரயலா ரென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ    
1845
நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் 

நாகம் வாங்க லென்னென்றேன் 
காலாங் கிரண்டிற் கட்டவென்றார் 

கலைத்தோல் வல்லீர் நீரென்றேன் 
வேலார் விழிமாப் புலித்தோலும் 

வேழத் தோலும் வல்லேமென் 
றேலா வமுத முகுக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ