1561
விடையார் கொடிமே லுயர்த்தருளும்
வேத கீதப் பெருமானார்
உடையா ரொற்றி யூரமர்ந்தா
ருவந்தென் மனையி லின்றடைந்தார்
இடையா வைய மென்றார்நா
னிடைதா னைய மென்றேனாற்
கடையா ரளியா ரென்றார்கட்
கடையா ரளியா ரென்றேனே
1562
நாடொன் றியசீர்த் திருவொற்றி
நகரத் தமர்ந்த நாயகனார்
ஈடொன் றில்லா ரென்மனையுற்
றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட
மாடொன் றெங்கே யென்றேனுன்
மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண்
காடொன் றுடையீ ரென்றேன்செங்
காடொன் றுடையே னென்றாரே
1563
சொல்லா லியன்ற தொடைபுனைவார்
தூயா ரொற்றித் தொன்னகரார்
அல்லா லியன்ற மனத்தார்பா
லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
வல்லா லியன்ற முலையென்றார்
வல்லார் நீரென் றேனுன்சொற்
கல்லா லியன்ற தென்றார்முன்
கல்லா லியன்ற தென்றேனே
டீயஉம
--------------------------------------------------------------------------------
இன்பக் கிளவி
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1564
தில்லை வளத்தார் அம்பலத்தார்
திருவேட் களத்தார் செவ்வணத்தார்
கல்லை வளைத்தார் என்றன்மனக்
கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்தமை
எழிலார் ஒற்றி எனும்நகரில்
ஒல்லை வளைத்துக் கண்டேன்நான்
ஒன்றும் உரையா திருந்தாரே
1565
இருந்தார் திருவா ரூரகத்தில்
எண்ணாக் கொடியார் இதயத்தில்
பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார்
புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
விருந்தார் திருந்தார் புரமுன்தீ
விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
தருந்தார் காம மருந்தார்இத்
தரணி இடத்தே தருவாரே