1086
தத்து மத்திடைத் தயிரென வினையால் 

தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே 
செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே 

துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன் 
புத்தை நீக்கிய ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே   
1087
பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப் 

பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத் 
தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் 

வெய்ய மாயையில் கையற வடைந்தே 
புரிந்து சார்கின்ற தொற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே    
டீயஉம



--------------------------------------------------------------------------------


 ஆற்றா விண்ணப்பம் 
திருவொற்றியூர் 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1088
அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே 

அம்பலத் தாடல்செய் அமுதே 
பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே 

போதமே ஒற்றிஎம் பொருளே 
உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் 

உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய் 
என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் 

இருக்கின்ற இவ்வெளி யேனே   
1089
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் 

என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக் 
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் 

கருணைசெய் திலைஅருட் கரும்பே 
அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே 

அருமருந் தேவட வனத்துத் 
தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே 

தயையிலி போல்இருந் தனையே    
1090
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் 

என்துயர் அறிந்திலை போலும் 
முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் 

முலைத்தலை உருண்டன னேனும் 
மருந்தனை யாய்உன் திருவடி மலரை 

மறந்திலேன் வழுத்துகின் றனன்காண் 
வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா 

வஞ்சகம் உனக்கும்உண் டேயோ